கற்போம் கற்பிப்போம் சேவை மையம் சார்பில் மகளிர் தின விழா கற்போம் கற்பிப்போம் சேவை மையம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம். கற்போம் கற்பிப்போம் சேவை மையம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது, இவ்விழா கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சேகர் தலைமையில் கௌரவத் தலைவர் ரங்கராஜ் மற்றும் அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் மகளிர் அணி தலைவி கலைவாணி, மகளிரணி துணைத் தலைவி வாணி, இளைஞர் அணி செயலாளர் மகேந்திரன், ஆகியோர் இவ்விழாவை ஒருங்கிணைந்து நடத்தினர். மேலும் இந்த மகளிர் தின விழாவில் பெரியாம்பட்டி கிராமத்தில் 15 தூய்மை பணியாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். இளைஞர் அணி துணை செயலாளர் மணிவண்ணன், பாலக்கோடு பேரூராட்சியில் பணியாற்றும் 15 தூய்மை பணியாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். கற்போம் கற்பிப்போம் அமைப்பின் சார்பாக கலந்து கொண்ட அனைத்து மகளீர்களுக்கும், தலைவர் சேகர், கௌரவத் தலைவர் ரங்கராஜ், மற்றும் பொதுச்செயளாளர் ராஜன், ஆகியோர் பரிசுப் பொருட்களும் பாராட்டு சான்றிதழும் வழங்கி கௌரவித்தனர். இப்பாராட்டு விழாவில் மைய நிர்வாகிகள் பாரதி, முருகன், கண்ணன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் சாமிநாதன், பாலக்கோடு குமரேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கருணாநிதி, உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதியில் இளைஞரணி செயலாளர் மகேந்திரன் நன்றியுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மகளிர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கற்போம் கற்பிப்போம் சேவை மையம் சார்பில் மகளிர் தின விழா கற்போம் கற்பிப்போம் சேவை மையம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம். கற்போம் கற்பிப்போம் சேவை மையம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது, இவ்விழா கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சேகர் தலைமையில் கௌரவத் தலைவர் ரங்கராஜ் மற்றும் அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் மகளிர் அணி தலைவி கலைவாணி, மகளிரணி துணைத் தலைவி வாணி, இளைஞர் அணி செயலாளர் மகேந்திரன், ஆகியோர் இவ்விழாவை ஒருங்கிணைந்து நடத்தினர். மேலும் இந்த மகளிர் தின விழாவில் பெரியாம்பட்டி கிராமத்தில் 15 தூய்மை பணியாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். இளைஞர் அணி துணை செயலாளர் மணிவண்ணன், பாலக்கோடு பேரூராட்சியில் பணியாற்றும் 15 தூய்மை பணியாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். கற்போம் கற்பிப்போம் அமைப்பின் சார்பாக கலந்து கொண்ட அனைத்து மகளீர்களுக்கும், தலைவர் சேகர், கௌரவத் தலைவர் ரங்கராஜ், மற்றும் பொதுச்செயளாளர் ராஜன், ஆகியோர் பரிசுப் பொருட்களும் பாராட்டு சான்றிதழும் வழங்கி கௌரவித்தனர். இப்பாராட்டு விழாவில் மைய நிர்வாகிகள் பாரதி, முருகன், கண்ணன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் சாமிநாதன், பாலக்கோடு குமரேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கருணாநிதி, உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதியில் இளைஞரணி செயலாளர் மகேந்திரன் நன்றியுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மகளிர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்அருகே கடந்த பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையை மீண்டும் தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும், இல்லையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் பேட்டி. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தோலம்பதி கிராமத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆனந்தூர் பிரதான சாலையை கடந்த பலத்தலை முறைகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த சாவை மிகவும் குண்டு குளியுமாக இருப்பதால் இந்த சாலையை தார்சாலையாக மாற்றிட வேண்டும் என்று கிராம சபைக் கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்றுள்ளது. ஆனால் தீடிரென அந்தப்பணிகளும் நிறுத்தப்படுள்ளதால் அந்த சாலையில் வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வண்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகையால் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையை தார்சாலையாக மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் பல முறை அனுகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ராமன் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கிடப்பில் போட்ட சாலைப்பணிகளை மீண்டும் செயல்படுத்திட வேண்டி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் புகார் மனுவினைக் கெடுத்தனர். இது குறித்து பேசிய கிராம மக்கள் மத்தூர் ஒன்றியம் தோலம்பதி கிராத்தில் வசித்து வரும் எங்களுக்கு முறையான சாலை வசதிகள் இன்றி வசித்து வருகிறோம். இந்த நிலையில் கரடுமுரடான சாலையை தார் சாலையாக மாற்றிடும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாசாலையாக மாற்றிட உரிய நிதியும் ஒதிக்கீடு செய்யபட்டும் அதற்கான பணிகளும் நடைப்பெற்ற நிலையில் தீடிரென அந்தபணியும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடமும் கேட்டால் முறையான தகவல் ஏதும் இல்லை ஆகையால் கிடப்பில் போடப்பட சாலப்பணியை விரைவாக செயல்படுத்திட வேண்டும் இல்லையில் வீடுகளில் கறுப்பு கொடிகளை கட்டியும், குடும்ப அட்டை, அதார் அட்டைகளை அரசிடம் கொடுத்து விட்டு வருகின்ற சட்ட மன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.1
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்ட அரங்கில் தேன்கனிகோட்டைவட்டம், குந்து மாரணப்பள்ளி கிராமத்தில் பட்டியலிமைக்கள் பல வருடங்களாக சொந்தமாக வீட்டுமனை வீடு இல்லாமல் இருக்கின்றர்க் வீட்டுமனை வழங்க கோரி அரசுக்குமனு அளித்தும் இதுவரை அரசு நேரில் விசாரிக்க கூட வர வில்லை அதனால் இன்று மாவட்ட ஆட்சியரிடம் வீட்டு மனையும்,கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.1
- தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கம், புதிய புரட்சி கழகம் இனைந்து, நடத்திய மகளிர் தின கொண்டாட்டம், பெண்களுக்கு, புடவை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது, தருமபுரியில் புதிய புரட்சி கழகம், மற்றும் தமிழ்நாடு பெளத்த அறநெறியாளர் சங்கம் சார்பில், தருமபுரி அருகே உள்ள, நாயகன் கொட்டாய் கிராமத்தில், மகளீர் தின கொண்டாட்டம் நடைபெற்றது, மகளீர் தினத்தையொட்டி, புதிய புரட்சி கழக மாநில இளைஞரணி துணை செயலாளர், சுரேஸ் தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில், பங்கேற்று பெளத்த அறநெறியாளர் சங்க, தலைவர் தினகரன், பொதுச்செயலாளர், பொன் சசிகுமார், பெளத்த அறநெறி பற்றியும் மகளீர் பெருமை குறித்து பேசினார், பின்னர் நடைபெற்ற, மகளீர் தின விழா, கேக் வெட்டி 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, இனிப்புடன் கூடிய புடவைகள் வழங்கப்பட்டன, மேலும் இந்நிகழ்ச்சியில், புதிய புரட்சி கழக நிர்வாகிகள், தலித்குமார், பாவை அஜித், M சுரேஷ், கோவிந்தசாமி, முருகன்,பிரகாஷ், உள்ளிட்ட, நிர்வாகிகள், 100க்கும் மேற்பட்ட, பெண்கள் பங்கேற்று சிறப்பித்தனர்,1
- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் வசிப்பவர் மோகன்தாஸ் இவரது மனைவி ரஞ்சிதா இவர்களது மகன் ரித்தீஷ் திருப்பத்தூர் நகராட்சிக்கு அருகாமையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் உதவி மாணவத் தலைவராகவும் (ASPL) இருந்து உள்ளார் இந்நிலையில் பள்ளி விடுமுறை நாள் என்பதால் ரித்தீஷ் தன்னுடைய சக மாணவர்களுடன் வெளியே சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது யாரும் வீட்டில் இல்லாத நிலையில் பள்ளி மாணவன் ரித்தீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்த குடும்பத்தார் கத்தி கூச்சலிட்டு ரித்தீஷின் சடலத்தை மீட்டு உள்ளனர். பின்பு தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறை ரித்தீஷின் சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகப்படும்படியான காரணங்கள் ஏதேனும் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.1
- தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மொரப்பூர் காப்புகாடு, மலையயூர் காப்புக் காட்டிலிருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது காட்டுயாணைகள் ஊருக்குள் புகுந்து விசாயநிலங்களை சேதப்படுத்தி வந்த நிலையில் இன்று விடியற்காலை பாலக்கோடு அருகே உள்ள கம்மாளப்பட்டி ஊருக்குள் இரண்டு காட்டுயானைகள் புகுந்து வீதி வீதியாக உணவு மற்றும் தண்ணீர் தேடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாணை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தற்போது பாலக்கோடு சுற்றுவட்டார வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் காட்டு யாணைகள் விவசாய நிலத்தில் உள்ள ராகி, கம்பு, சோளம், கரும்பு, நெல் உள்ளிட்டவைகளை உண்ண வனத்தை விட்டு வெளியே வருகிறது. ஒன்றன் பின் ஒன்றாக ஊருக்குள் நுழைந்து வரும் காட்டு யானைகளால் மக்கள் வெளியே நடமாட அச்சமடைந்து வருகின்றனர். வன பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைத்து பராமரித்தால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது தவிர்க்கப்படும் என விலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.1
- நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் விவசாயம் சங்கத்தினர் சார்பாக திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டி மூன்று நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வாக்குறுதி அளித்துள்ளன என்று மூத்த தலைவர் நேரில் சென்று நேற்று மார்ச் 9 ம் தேதி மாலை 5 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்ததில் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன1
- Post by Vinayagam Vinayagam1
- ஊத்தங்கரை அருகே பல வருடங்களாக மின் இணைப்பு வழங்காமல் அலக்கலைப்பு விவசாயி சக்திவேல் பேட்டி. பெரியகவுண்டனூர் கிராமத்தில் லஞ்சம் கேட்டு கொடுக்காததால் விவசாய நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் இருந்த மின் கம்பிகளை முன்னறிவிப்பு இன்றி துண்டித்த ஏ.டி சத்தியநாராயணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரியகவுண்டனூர், எளச்சூர் கிராமத்தில் வசிக்கும் ஏழை விவசாயி கணபதி இவர் இலவச மின்சாரத்திற்கு முறையாக 2011 ஆம் வருடம் மனு அளித்து 50 ஆயிரம் பணம் கட்டி காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். விவசாயி கணபதி உடல்நிலை குறைவால் திடீர் என்று இறந்ததினால் அவருடைய மகன் சக்திவேல் தன்னுடைய தந்தை பெயரில் இருந்த விவசாய நிலத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றி தன்னுடைய தந்தை அரசுக்கு கட்டிய பணத்தின் வாரியாக இலவச மின்சாரத்தை வழங்க வேண்டும் என பலமுறை ஏ.டி யை அணுகியுள்ளார். ஆனால் அவருக்கு தனக்கு தனியாக பணம் தர வேண்டும் கம்ப்பத்திற்கு பணம், ஜெ.சி.பி, வாடகை, கம்பம் ஏற்றி வர வண்டி வாடகை, வேலை செய்ய வரும் மின்சார பணியாளர்களுக்கு கூலி, மொத்தம் 2 இலட்சம் கொடுத்துள்ளேன் செய்தேன். அதுமட்டுமின்றி மீட்டருக்கு பணம் கட்டியுள்ளேன். இவ்வளவும் பெற்று கொண்டு மின்சாரம் வழங்க வில்லை. மீண்டும் ஒன்றை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏ.டி சத்தியநாராயணன் மற்றும் எல்.ஐ, கனகராஜ் பணம் வேண்டும் என கேட்டார், நான் பணம் தர மறுத்ததால் விவசாயம் நிலத்தில் உள்ள கம்பத்தில் இருந்த மின் கம்பிகளை முன்னறிவிப்பின்றி திடீரென துண்டித்து விட்டனர். பணத்தையும் பெற்றுக் கொண்டு மீட்டர் வைக்காமல் அலையவிடுகின்றனர். இதனால் விவசாய நிலத்தில் உள்ள பூ செடி, பச்சை மிளகாய், தென்னங் கன்றுகள், தண்ணீர் இல்லாமல் காய்ந்து 2 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து மாவட்ட நிர்வாகம் மின்சாரத்துறை ஊத்தங்கரை ஏ.டி, யை அழைத்து விசாரித்து என்னுடைய விவசாய நிலத்திற்கு மின்சாரம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி கண்ணீர் மல்க தெரிவித்தார். இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.1