logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கிருஷ்ணகிரியில்வீட்டுமனை மற்றும் வீடு கட்டி கொடுக்க கோரி கலெக்டர் இடம் மனு. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்ட அரங்கில் தேன்கனிகோட்டைவட்டம், குந்து மாரணப்பள்ளி கிராமத்தில் பட்டியலிமைக்கள் பல வருடங்களாக சொந்தமாக வீட்டுமனை வீடு இல்லாமல் இருக்கின்றர்க் வீட்டுமனை வழங்க கோரி அரசுக்குமனு அளித்தும் இதுவரை அரசு நேரில் விசாரிக்க கூட வர வில்லை அதனால் இன்று மாவட்ட ஆட்சியரிடம் வீட்டு மனையும்,கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

1 day ago
user_FAYAZ
FAYAZ
பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
1 day ago

கிருஷ்ணகிரியில்வீட்டுமனை மற்றும் வீடு கட்டி கொடுக்க கோரி கலெக்டர் இடம் மனு. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்ட அரங்கில் தேன்கனிகோட்டைவட்டம், குந்து மாரணப்பள்ளி கிராமத்தில் பட்டியலிமைக்கள் பல வருடங்களாக சொந்தமாக வீட்டுமனை வீடு இல்லாமல் இருக்கின்றர்க் வீட்டுமனை வழங்க கோரி அரசுக்குமனு அளித்தும் இதுவரை அரசு நேரில் விசாரிக்க கூட வர வில்லை அதனால் இன்று மாவட்ட ஆட்சியரிடம் வீட்டு மனையும்,கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளியில் அமைந்துள்ள ஆக்ஃபோர்டு பப்ளிக் பள்ளியில்  யு.கே.ஜி. முடித்த முதல் வகுப்புக்கு அடியெடுத்து வைக்கும்  பள்ளி குழந்தைகளுக்கு  பட்டமளிப்பு விழா மற்றும்  அவார்டு வழங்கும் விழா நடைப்பெற்றது.
    1
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளியில் அமைந்துள்ள ஆக்ஃபோர்டு பப்ளிக் பள்ளியில்  யு.கே.ஜி. முடித்த முதல் வகுப்புக்கு அடியெடுத்து வைக்கும் 
பள்ளி குழந்தைகளுக்கு 
பட்டமளிப்பு விழா மற்றும்  அவார்டு வழங்கும் விழா நடைப்பெற்றது.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்அருகே கடந்த பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையை மீண்டும் தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும், இல்லையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் பேட்டி. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தோலம்பதி கிராமத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆனந்தூர் பிரதான சாலையை கடந்த பலத்தலை முறைகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த சாவை மிகவும் குண்டு குளியுமாக இருப்பதால் இந்த சாலையை தார்சாலையாக மாற்றிட வேண்டும் என்று கிராம சபைக் கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்றுள்ளது. ஆனால் தீடிரென அந்தப்பணிகளும் நிறுத்தப்படுள்ளதால் அந்த சாலையில் வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வண்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகையால் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையை தார்சாலையாக மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் பல முறை அனுகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ராமன் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கிடப்பில் போட்ட சாலைப்பணிகளை மீண்டும் செயல்படுத்திட வேண்டி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் புகார் மனுவினைக் கெடுத்தனர். இது குறித்து பேசிய கிராம மக்கள் மத்தூர் ஒன்றியம் தோலம்பதி கிராத்தில் வசித்து வரும் எங்களுக்கு முறையான சாலை வசதிகள் இன்றி வசித்து வருகிறோம். இந்த நிலையில் கரடுமுரடான சாலையை தார் சாலையாக மாற்றிடும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாசாலையாக மாற்றிட உரிய நிதியும் ஒதிக்கீடு செய்யபட்டும் அதற்கான பணிகளும் நடைப்பெற்ற நிலையில் தீடிரென அந்தபணியும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடமும் கேட்டால் முறையான தகவல் ஏதும் இல்லை ஆகையால் கிடப்பில் போடப்பட சாலப்பணியை விரைவாக செயல்படுத்திட வேண்டும் இல்லையில் வீடுகளில் கறுப்பு கொடிகளை கட்டியும், குடும்ப அட்டை, அதார் அட்டைகளை அரசிடம் கொடுத்து விட்டு வருகின்ற சட்ட மன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்அருகே கடந்த பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையை மீண்டும்   
தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும், இல்லையில்
வருகின்ற சட்டமன்ற 
தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் பேட்டி.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 
தோலம்பதி கிராமத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் ஆனந்தூர் பிரதான சாலையை கடந்த பலத்தலை முறைகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த சாவை மிகவும் குண்டு குளியுமாக இருப்பதால் இந்த சாலையை தார்சாலையாக மாற்றிட வேண்டும் என்று கிராம சபைக் கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 
பல லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்றுள்ளது.
ஆனால் தீடிரென அந்தப்பணிகளும் நிறுத்தப்படுள்ளதால் அந்த சாலையில் வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வண்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகையால் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையை தார்சாலையாக மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் பல முறை அனுகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால்
ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ராமன் தலைமையில்  கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம்
கிடப்பில் போட்ட சாலைப்பணிகளை மீண்டும் செயல்படுத்திட வேண்டி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் புகார் மனுவினைக் கெடுத்தனர்.
இது குறித்து பேசிய கிராம மக்கள் மத்தூர் ஒன்றியம் தோலம்பதி கிராத்தில் வசித்து வரும் எங்களுக்கு  முறையான சாலை வசதிகள் இன்றி வசித்து வருகிறோம்.
இந்த நிலையில்
கரடுமுரடான சாலையை தார் சாலையாக மாற்றிடும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாசாலையாக மாற்றிட உரிய நிதியும் ஒதிக்கீடு செய்யபட்டும் அதற்கான பணிகளும் நடைப்பெற்ற நிலையில் தீடிரென அந்தபணியும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடமும் கேட்டால் முறையான தகவல் ஏதும்
இல்லை ஆகையால் கிடப்பில் போடப்பட சாலப்பணியை விரைவாக செயல்படுத்திட வேண்டும் இல்லையில் வீடுகளில் கறுப்பு கொடிகளை கட்டியும், குடும்ப அட்டை, அதார் அட்டைகளை அரசிடம் கொடுத்து விட்டு வருகின்ற சட்ட மன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    17 hrs ago
  • தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கம், புதிய புரட்சி கழகம் இனைந்து, நடத்திய மகளிர் தின கொண்டாட்டம், பெண்களுக்கு, புடவை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது, தருமபுரியில் புதிய புரட்சி கழகம், மற்றும் தமிழ்நாடு பெளத்த அறநெறியாளர் சங்கம் சார்பில், தருமபுரி அருகே உள்ள, நாயகன் கொட்டாய் கிராமத்தில், மகளீர் தின கொண்டாட்டம் நடைபெற்றது, மகளீர் தினத்தையொட்டி, புதிய புரட்சி கழக மாநில இளைஞரணி துணை செயலாளர், சுரேஸ் தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில், பங்கேற்று பெளத்த அறநெறியாளர் சங்க, தலைவர் தினகரன், பொதுச்செயலாளர், பொன் சசிகுமார், பெளத்த அறநெறி பற்றியும் மகளீர் பெருமை குறித்து பேசினார், பின்னர் நடைபெற்ற, மகளீர் தின விழா, கேக் வெட்டி 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, இனிப்புடன் கூடிய புடவைகள் வழங்கப்பட்டன, மேலும் இந்நிகழ்ச்சியில், புதிய புரட்சி கழக நிர்வாகிகள், தலித்குமார், பாவை அஜித், M சுரேஷ், கோவிந்தசாமி, முருகன்,பிரகாஷ், உள்ளிட்ட, நிர்வாகிகள், 100க்கும் மேற்பட்ட, பெண்கள் பங்கேற்று சிறப்பித்தனர்,
    1
    தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கம், புதிய புரட்சி கழகம் இனைந்து, நடத்திய மகளிர் தின கொண்டாட்டம், பெண்களுக்கு, புடவை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது,
தருமபுரியில் புதிய புரட்சி கழகம், மற்றும் தமிழ்நாடு பெளத்த அறநெறியாளர் சங்கம் சார்பில், தருமபுரி அருகே உள்ள, நாயகன் கொட்டாய் கிராமத்தில், மகளீர் தின கொண்டாட்டம் நடைபெற்றது,
மகளீர் தினத்தையொட்டி, புதிய புரட்சி கழக மாநில இளைஞரணி துணை செயலாளர், சுரேஸ் தலைமையில் நடைபெற்றது,
இந்நிகழ்ச்சியில், பங்கேற்று பெளத்த அறநெறியாளர் சங்க, தலைவர் தினகரன், பொதுச்செயலாளர், பொன் சசிகுமார், பெளத்த அறநெறி பற்றியும் மகளீர் பெருமை குறித்து பேசினார், பின்னர் நடைபெற்ற, மகளீர் தின விழா, கேக் வெட்டி 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, இனிப்புடன் கூடிய புடவைகள் வழங்கப்பட்டன,
மேலும் இந்நிகழ்ச்சியில், புதிய புரட்சி கழக நிர்வாகிகள், தலித்குமார், பாவை அஜித், M சுரேஷ், கோவிந்தசாமி, முருகன்,பிரகாஷ், உள்ளிட்ட, நிர்வாகிகள், 100க்கும் மேற்பட்ட, பெண்கள் பங்கேற்று சிறப்பித்தனர்,
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் வசிப்பவர் மோகன்தாஸ் இவரது மனைவி ரஞ்சிதா இவர்களது மகன் ரித்தீஷ் திருப்பத்தூர் நகராட்சிக்கு அருகாமையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் உதவி மாணவத் தலைவராகவும் (ASPL) இருந்து உள்ளார் இந்நிலையில் பள்ளி விடுமுறை நாள் என்பதால் ரித்தீஷ் தன்னுடைய சக மாணவர்களுடன் வெளியே சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது யாரும் வீட்டில் இல்லாத நிலையில் பள்ளி மாணவன் ரித்தீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்த குடும்பத்தார் கத்தி கூச்சலிட்டு ரித்தீஷின் சடலத்தை மீட்டு உள்ளனர். பின்பு தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறை ரித்தீஷின் சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகப்படும்படியான காரணங்கள் ஏதேனும் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் வசிப்பவர் மோகன்தாஸ் இவரது மனைவி ரஞ்சிதா இவர்களது மகன் ரித்தீஷ் திருப்பத்தூர் நகராட்சிக்கு அருகாமையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் உதவி மாணவத் தலைவராகவும் (ASPL) இருந்து உள்ளார்
இந்நிலையில் பள்ளி விடுமுறை நாள் என்பதால் ரித்தீஷ் தன்னுடைய சக மாணவர்களுடன் வெளியே சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது யாரும் வீட்டில் இல்லாத நிலையில் பள்ளி மாணவன் ரித்தீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்த குடும்பத்தார் கத்தி கூச்சலிட்டு ரித்தீஷின் சடலத்தை மீட்டு உள்ளனர். 
பின்பு தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறை ரித்தீஷின் சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகப்படும்படியான காரணங்கள் ஏதேனும் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    user_Suji
    Suji
    Tirupathur, Tamil Nadu•
    22 hrs ago
  • நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர் நேற்று (மார்ச் 10) அவ்வழியாக சென்று கொண்டிருந்த பள்ளி மாணவி மீது விழுந்ததில் மாணவிக்கு காயங்கள் ஏற்பட்டன. மீண்டும் இதுபோல விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் இது போன்ற பேனர்களை உடனடியாக அகற்ற காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்
    1
    நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர் நேற்று (மார்ச் 10) அவ்வழியாக சென்று கொண்டிருந்த பள்ளி மாணவி மீது விழுந்ததில் மாணவிக்கு காயங்கள் ஏற்பட்டன. மீண்டும் இதுபோல விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் இது போன்ற பேனர்களை உடனடியாக அகற்ற காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    30 min ago
  • சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூமணியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்து துன்புறுத்துவதாகவும், பெற்றோர்களையும் தரக்குறைவாக பேசி வருவதாக கூறி ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூமணியூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 10 மாதங்களாக விஜயதாரணி என்பவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பின்னர் பள்ளி குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்து துன்புறுத்துவதாக குழந்தைகள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து கேட்க வரும் பெற்றோர்களையும் தலைமை ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 10 மாதங்களில் இப்பள்ளியில் பயிலும் குழந்தைகளை பெற்றோர்கள் அருகில் உள்ள மற்ற பள்ளிக்கு அனுப்பி உள்ளதாகவும். கூறப்படுகிறது. தலைமை ஆசிரியையின் நடவடிக்கையால் தற்போது 13 குழந்தைகள் மட்டுமே பயின்று வருவதாகவும், இது சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும், மேலும் கடந்த வாரம் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவரை அடித்து கை வீங்கியதாகவும் அந்த மாணவன் தங்கள் பெற்றோரிடம் கூறியதாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகளை வாரத்தில் இருமுறை அடித்தும், தகாத வார்த்தையால் திட்டி வருகிறார். மேலும் அவர் அடித்த குழந்தைகளை பெற்றோர்களிடம் சொல்ல கூடாது என அவர்களுக்கு ரூ.50 பணம் தருகிறேன் என குழந்தைகளிடம் கூறியுள்ளார். என்று கண்ணீர் மல்க கூறினார்கள். பேட்டி :1) ஞானசுந்தரி 2)கோமதி 3) தனசுந்தரி பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள், 4) ஜோதி,காலை உணவு தயாரிப்பாளர்.
    1
    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூமணியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியும்,  அடித்து துன்புறுத்துவதாகவும், பெற்றோர்களையும் தரக்குறைவாக பேசி வருவதாக கூறி ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூமணியூர்  அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 10 மாதங்களாக விஜயதாரணி என்பவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தலைமை ஆசிரியராக  பொறுப்பேற்ற பின்னர்  பள்ளி குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்து துன்புறுத்துவதாக குழந்தைகள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர். 
மேலும் இது குறித்து கேட்க வரும் பெற்றோர்களையும்  தலைமை ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த 10 மாதங்களில் இப்பள்ளியில் பயிலும்  குழந்தைகளை  பெற்றோர்கள் அருகில் உள்ள மற்ற பள்ளிக்கு அனுப்பி உள்ளதாகவும். கூறப்படுகிறது.
தலைமை ஆசிரியையின் நடவடிக்கையால் தற்போது  13 குழந்தைகள் மட்டுமே பயின்று வருவதாகவும், இது சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும்,
மேலும் கடந்த வாரம் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவரை அடித்து கை வீங்கியதாகவும் அந்த மாணவன் தங்கள் பெற்றோரிடம் கூறியதாகவும் 
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் இன்று பள்ளியை  முற்றுகையிட்டு ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகளை வாரத்தில் இருமுறை  அடித்தும், தகாத வார்த்தையால் திட்டி வருகிறார்.
மேலும் அவர் அடித்த குழந்தைகளை பெற்றோர்களிடம் சொல்ல கூடாது என அவர்களுக்கு ரூ.50 பணம் தருகிறேன் என குழந்தைகளிடம்  கூறியுள்ளார். என்று கண்ணீர் மல்க கூறினார்கள்.
பேட்டி :1) ஞானசுந்தரி 2)கோமதி 3) தனசுந்தரி பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள்,  
4) ஜோதி,காலை உணவு தயாரிப்பாளர்.
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    13 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • ஊத்தங்கரை அருகே பல வருடங்களாக மின் இணைப்பு வழங்காமல் அலக்கலைப்பு விவசாயி சக்திவேல் பேட்டி. பெரியகவுண்டனூர் கிராமத்தில் லஞ்சம் கேட்டு கொடுக்காததால் விவசாய நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் இருந்த மின் கம்பிகளை முன்னறிவிப்பு இன்றி துண்டித்த ஏ.டி சத்தியநாராயணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரியகவுண்டனூர், எளச்சூர் கிராமத்தில் வசிக்கும் ஏழை விவசாயி கணபதி இவர் இலவச மின்சாரத்திற்கு முறையாக 2011 ஆம் வருடம் மனு அளித்து 50 ஆயிரம் பணம் கட்டி காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். விவசாயி கணபதி உடல்நிலை குறைவால் திடீர் என்று இறந்ததினால் அவருடைய மகன் சக்திவேல் தன்னுடைய தந்தை பெயரில் இருந்த விவசாய நிலத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றி தன்னுடைய தந்தை அரசுக்கு கட்டிய பணத்தின் வாரியாக இலவச மின்சாரத்தை வழங்க வேண்டும் என பலமுறை ஏ.டி யை அணுகியுள்ளார். ஆனால் அவருக்கு தனக்கு தனியாக பணம் தர வேண்டும் கம்ப்பத்திற்கு பணம், ஜெ.சி.பி, வாடகை, கம்பம் ஏற்றி வர வண்டி வாடகை, வேலை செய்ய வரும் மின்சார பணியாளர்களுக்கு கூலி, மொத்தம் 2 இலட்சம் கொடுத்துள்ளேன் செய்தேன். அதுமட்டுமின்றி மீட்டருக்கு பணம் கட்டியுள்ளேன். இவ்வளவும் பெற்று கொண்டு மின்சாரம் வழங்க வில்லை. மீண்டும் ஒன்றை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏ.டி சத்தியநாராயணன் மற்றும் எல்.ஐ, கனகராஜ் பணம் வேண்டும் என கேட்டார், நான் பணம் தர மறுத்ததால் விவசாயம் நிலத்தில் உள்ள கம்பத்தில் இருந்த மின் கம்பிகளை முன்னறிவிப்பின்றி திடீரென துண்டித்து விட்டனர். பணத்தையும் பெற்றுக் கொண்டு மீட்டர் வைக்காமல் அலையவிடுகின்றனர். இதனால் விவசாய நிலத்தில் உள்ள பூ செடி, பச்சை மிளகாய், தென்னங் கன்றுகள், தண்ணீர் இல்லாமல் காய்ந்து 2 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து மாவட்ட நிர்வாகம் மின்சாரத்துறை ஊத்தங்கரை ஏ.டி, யை அழைத்து விசாரித்து என்னுடைய விவசாய நிலத்திற்கு மின்சாரம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி கண்ணீர் மல்க தெரிவித்தார். இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
    1
    ஊத்தங்கரை அருகே பல வருடங்களாக மின் இணைப்பு வழங்காமல் அலக்கலைப்பு
விவசாயி சக்திவேல் பேட்டி.
பெரியகவுண்டனூர் கிராமத்தில் லஞ்சம் கேட்டு கொடுக்காததால் விவசாய நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் இருந்த மின் கம்பிகளை முன்னறிவிப்பு இன்றி துண்டித்த ஏ.டி சத்தியநாராயணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரியகவுண்டனூர், எளச்சூர் கிராமத்தில் வசிக்கும் ஏழை விவசாயி கணபதி இவர் இலவச மின்சாரத்திற்கு முறையாக 2011 ஆம் வருடம் மனு அளித்து 50 ஆயிரம் பணம் கட்டி காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். விவசாயி கணபதி  உடல்நிலை குறைவால் திடீர் என்று இறந்ததினால் அவருடைய மகன் சக்திவேல்  தன்னுடைய தந்தை பெயரில் இருந்த விவசாய நிலத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றி தன்னுடைய தந்தை அரசுக்கு கட்டிய பணத்தின் வாரியாக இலவச மின்சாரத்தை வழங்க வேண்டும் என பலமுறை  ஏ.டி யை அணுகியுள்ளார். ஆனால் அவருக்கு தனக்கு தனியாக பணம் தர வேண்டும்   கம்ப்பத்திற்கு பணம், ஜெ.சி.பி, வாடகை, கம்பம் ஏற்றி வர வண்டி வாடகை, வேலை செய்ய வரும் மின்சார பணியாளர்களுக்கு கூலி, மொத்தம் 2 இலட்சம் கொடுத்துள்ளேன் செய்தேன்.
அதுமட்டுமின்றி மீட்டருக்கு பணம் கட்டியுள்ளேன்.
இவ்வளவும்
பெற்று கொண்டு மின்சாரம் வழங்க வில்லை. மீண்டும் ஒன்றை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏ.டி சத்தியநாராயணன் மற்றும் எல்.ஐ, கனகராஜ் பணம் வேண்டும் என கேட்டார், நான் பணம் தர மறுத்ததால் விவசாயம் நிலத்தில் உள்ள கம்பத்தில் இருந்த மின் கம்பிகளை   முன்னறிவிப்பின்றி திடீரென துண்டித்து விட்டனர்.
பணத்தையும் பெற்றுக் கொண்டு மீட்டர் வைக்காமல் அலையவிடுகின்றனர்.
இதனால் விவசாய நிலத்தில் உள்ள பூ செடி, பச்சை மிளகாய், தென்னங் கன்றுகள்,  தண்ணீர் இல்லாமல் காய்ந்து 2 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தயவுசெய்து மாவட்ட நிர்வாகம் மின்சாரத்துறை ஊத்தங்கரை ஏ.டி, யை அழைத்து விசாரித்து என்னுடைய விவசாய நிலத்திற்கு  மின்சாரம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி கண்ணீர் மல்க தெரிவித்தார். இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.