சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூமணியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்து துன்புறுத்துவதாகவும், பெற்றோர்களையும் தரக்குறைவாக பேசி வருவதாக கூறி ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூமணியூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 10 மாதங்களாக விஜயதாரணி என்பவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பின்னர் பள்ளி குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்து துன்புறுத்துவதாக குழந்தைகள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து கேட்க வரும் பெற்றோர்களையும் தலைமை ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 10 மாதங்களில் இப்பள்ளியில் பயிலும் குழந்தைகளை பெற்றோர்கள் அருகில் உள்ள மற்ற பள்ளிக்கு அனுப்பி உள்ளதாகவும். கூறப்படுகிறது. தலைமை ஆசிரியையின் நடவடிக்கையால் தற்போது 13 குழந்தைகள் மட்டுமே பயின்று வருவதாகவும், இது சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும், மேலும் கடந்த வாரம் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவரை அடித்து கை வீங்கியதாகவும் அந்த மாணவன் தங்கள் பெற்றோரிடம் கூறியதாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகளை வாரத்தில் இருமுறை அடித்தும், தகாத வார்த்தையால் திட்டி வருகிறார். மேலும் அவர் அடித்த குழந்தைகளை பெற்றோர்களிடம் சொல்ல கூடாது என அவர்களுக்கு ரூ.50 பணம் தருகிறேன் என குழந்தைகளிடம் கூறியுள்ளார். என்று கண்ணீர் மல்க கூறினார்கள். பேட்டி :1) ஞானசுந்தரி 2)கோமதி 3) தனசுந்தரி பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள், 4) ஜோதி,காலை உணவு தயாரிப்பாளர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூமணியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்து துன்புறுத்துவதாகவும், பெற்றோர்களையும் தரக்குறைவாக பேசி வருவதாக கூறி ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூமணியூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 10 மாதங்களாக விஜயதாரணி என்பவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பின்னர் பள்ளி குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்து துன்புறுத்துவதாக குழந்தைகள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து கேட்க வரும் பெற்றோர்களையும் தலைமை ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 10 மாதங்களில் இப்பள்ளியில் பயிலும் குழந்தைகளை பெற்றோர்கள் அருகில் உள்ள மற்ற பள்ளிக்கு அனுப்பி உள்ளதாகவும். கூறப்படுகிறது. தலைமை ஆசிரியையின் நடவடிக்கையால் தற்போது 13 குழந்தைகள் மட்டுமே பயின்று வருவதாகவும், இது சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும், மேலும் கடந்த வாரம் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவரை அடித்து கை வீங்கியதாகவும் அந்த மாணவன் தங்கள் பெற்றோரிடம் கூறியதாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகளை வாரத்தில் இருமுறை அடித்தும், தகாத வார்த்தையால் திட்டி வருகிறார். மேலும் அவர் அடித்த குழந்தைகளை பெற்றோர்களிடம் சொல்ல கூடாது என அவர்களுக்கு ரூ.50 பணம் தருகிறேன் என குழந்தைகளிடம் கூறியுள்ளார். என்று கண்ணீர் மல்க கூறினார்கள். பேட்டி :1) ஞானசுந்தரி 2)கோமதி 3) தனசுந்தரி பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள், 4) ஜோதி,காலை உணவு தயாரிப்பாளர்.
- எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரத்தில் ஆங்காங்கே நடத்தப்படும் இறைச்சி கடைகளை ஒரே இடத்தில் நடத்த வேண்டும் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை... அனைவரது கோரிக்கையும் ஏற்றுக்கொண்டு ஒருமனதாக நிறைவேற்றலாம் என ஒத்துழைப்பு வழங்கிய நகர மன்ற தலைவர்... சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் மன்றக் கூட்டம் நகர்மன்ற தலைவர் பாஷா தலைமையில் நடைபெற்றது.இதில் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் , திமுக, அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்... இந்த நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சி முழுவதும் உள்ள பகுதிகளில் மின்விளக்கு பராமரிப்பு, தார் சாலை, சாக்கடை வசதி முறையாக செய்யப்படவில்லை எனக் கூறி அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் மன்றக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது... மேலும் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள இறைச்சி கடைகளை அகற்றி ஒரு பொதுவான இடத்தை தேர்வு செய்து அங்கு இறைச்சி கடைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக மன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு நகர மன்ற தலைவர் கேட்டுக்கொண்டார்... அதனை தொடர்ந்து 82 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது...1
- நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையை நேற்று மார்ச் 10 ஆம் தேதி ஸ்டாலின் முதல்வர் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் அதனை தொடர்ந்து மலைப் பாதை வழியாக அமைச்சர் மதிவேந்தன், ஈஸ்வரன் எம் எல் ஏ, ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாலசுப்பரமணியன் சுவாமி தரிசனத்தை காண்பதற்கு பசு கன்றுடன் மேளதாளத்துடன் யாத்திரை செய்தனர்1
- அதியமான்கோட்டை ஸ்ரீ தட்சணகாசி காலபைரவருக்கு தேய்பிறை அஸ்டமி :அதிகாலை பைரவருக்கு16 திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சுவாமிக்கு விபூதி அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கால பைரவர் அருள்பெற்றனர் தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் மன்னர் அதியமானால் கட்டப்பட்ட தட்சணகாசி காலபைரவர் ஆலயம் காசிக்கு அடுத்ததாக பைரவருக்கென தனி ஆலயம் என்ற பெருமை பெற்ற காலபைரவர் ஆலயத்தில் இன்று மாசி மாத தேய்பிறை அஸ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது இங்கு மாதம்தோறும் தேய்பிரை அஸ்டமி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வரிகை புரிந்து பூசணி தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர் இன்று பைரவருக்கு அதிகாலை முதலே 16 திரவியங்களால், பால், தயிர், சந்தனம், விபூதி மஞ்சள், நெய், இளநீர் ஆகியவற்றை கலந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார் காலபைரவர் தேய்பிறை அஸ்டமி விழாவில் சுவாமியை தரிசிக்க தருமபுரி மாவட்டம் முழுவதிலிருந்தும் அண்டை மாநிலம் கர்நாடகம், கேரளம், ஆந்திரா பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து நீண்டவரிசையில் காத்திருந்து காலபைரவரை வழிபட்டனர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது1
- தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தர்மபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று புதன்கிழமை காலை மத்திய அரசின் தவறான வெளிநாட்டு கொள்கையின் காரணமாக கேஸ் தட்டுப்பாடு நிலவி வருவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகிலா காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரோஜா கோவிந்த சுவாமி தலைமையில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.1
- Post by Lingaraju mc6
- Post by அன்பரசு1
- ஊத்தங்கரையில் மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா வழிகாட்டி அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் லோகநாதன் ஏற்பாட்டில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ் செல்வம் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் கலந்துகொண்டு துரை ரீதியாக சாதனை புரிந்த மகளிருக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கழக மகளிர்களுக்கு புடவைகளும் அசைவ விருந்துகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சுந்தரவடிவேல், மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், நகரக் கழக செயலாளர் சிக்னல் ஆறுமுகம், முன்னாள் நகர கழக செயலாளர் சிவானந்தம், ஒன்றிய கழக செயலாளர்கள் வேடி, வேங்கன், நரேஷ் குமார், சக்கரவர்த்தி, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் தேவேந்திரன், நகர மாணவரணி செயலாளர் சம்பத் என்கிற கணேசன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் சக்திவேல், மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- மேட்டூர் அணையின் இன்றைய (மார்ச்.11) நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 1) நீர்மட்டம்: 85.295 அடி. 2) நீர்வரத்து: வினாடிக்கு 61 கன அடியாக நீடிப்பு. 3) நீர் இருப்பு: 47.438 டி.எம்.சி. 4) நீர் திறப்பு: 2500 கன அடி ஆகும். மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மிகக் குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் மெல்லக் குறைந்து வருகிறது.1