logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்புமருத்துவ முகாம். மதுரை பிப், 06, நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்குசிறப்பு மருத்துவ முகாம் கற்பகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றசிறப்பு மருத்துவ முகாமில் மக்களை தேடி முழு உடல் பரிசோதனை என்ற அடிப்படையில் இந்த திட்டத்தில் பொது மருத்துவ ஆலோசனை, பொது அறுவை சிகிச்சை மற்றும் எழும்பியல் மருத்துவ ஆலோசனை, மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவ ஆலோசனை, குழந்தைகள் நல மருத்துவ ஆலோசனை, இருதயவியல் மருத்துவ ஆலோசனை, நரம்பியல் மருத்துவ ஆலோசனை, தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மன நலம், இயன்முறை, கதிரியக்கவியல் மற்றும் நுரையீரல் ஆலோசனை, நீரிழிவு நோய் மருத்துவ ஆலோசனை மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்து வகையிலான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது சிறப்பு அம்சங்கள் மாற்று திறனாளிகள் பரிசோதிக்கப்ட்டு எத்தனை சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான மாற்று திறனாளி சான்றிதழ் வழங்கப்படும் மற்றும் விரிவான முதலமைச்சர் காப்பீடு திட்ட அட்டை விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்முகாமில் முன் மாதிரியாக வரும் அனைத்து பயனாளிகளுக்கும் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் (HMIS) மூலம் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான மேல் சிகிச்சையினை பரிந்துரைக்க வழிவகிக்கிறது. வரும் அனைத்து பயனாளிகளுக்கும் உயரம், எடை, நீரிழிவு நோய்க்கான பரிசோதனை, இரத்தஅழுத்தம் பரிசோதனை,அல்ட்ரா ஸ்கேன், காசநோய் பரிசோதனை,  தொழுநோய் பரிசோதனை,  புற்றுநோய் பரிசோதனை, ஈ.சி.ஜி மற்றும் எக்கோ பரிசோதனை, எக்ஸ்ரே, சிறுநீரக நோய் பரிசோதனைகள் முதலியன இம்முகாமில் பரிசோதிக்கப்பட்டு இத்திட்டமானது விரிவான சுகாதார பரிசோதனைகளை நேரடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விலை உயர்ந்த முழு உடல் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. மேற்படி சிறப்பு மருத்துவ முகாமில்மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன் மேற்கு வட்டார மருத்துவ அலுவலர் பத்மாவதி சுகாதார ஆய்வாளர்கள் நாராயணமூர்த்தி முத்துவேல் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பரவை பேரூராட்சி முன்னாள் தலைவர் மனோகரன் திமுக பேரூர் செயலாளர் ராஜாமணி திமுக பொருளாளர் சுடலைமுத்து, வார்டு கவுன்சிலர் நாகேஸ்வரி கிருஷ்ணதிலகர்கற்பகம் பள்ளி தாளாளர் ராமு தலைமையாசிரியர் சிவபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பரவை பேருராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

on 5 February
user_Karthik M S
Karthik M S
மதுரை தெற்கு, மதுரை, தமிழ்நாடு•
on 5 February
bbc589e3-e0db-4b2c-96b6-275b31c1d457

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்புமருத்துவ முகாம். மதுரை பிப், 06, நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்குசிறப்பு மருத்துவ முகாம் கற்பகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றசிறப்பு மருத்துவ முகாமில் மக்களை தேடி முழு உடல் பரிசோதனை என்ற அடிப்படையில் இந்த திட்டத்தில் பொது மருத்துவ ஆலோசனை, பொது அறுவை சிகிச்சை மற்றும் எழும்பியல் மருத்துவ ஆலோசனை, மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவ ஆலோசனை, குழந்தைகள் நல மருத்துவ ஆலோசனை, இருதயவியல் மருத்துவ ஆலோசனை, நரம்பியல் மருத்துவ ஆலோசனை, தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மன நலம், இயன்முறை, கதிரியக்கவியல் மற்றும் நுரையீரல் ஆலோசனை, நீரிழிவு நோய் மருத்துவ ஆலோசனை மற்றும்

5d62fba0-36d3-4f16-a8f7-380a38128adc

இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்து வகையிலான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது சிறப்பு அம்சங்கள் மாற்று திறனாளிகள் பரிசோதிக்கப்ட்டு எத்தனை சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான மாற்று திறனாளி சான்றிதழ் வழங்கப்படும் மற்றும் விரிவான முதலமைச்சர் காப்பீடு திட்ட அட்டை விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்முகாமில் முன் மாதிரியாக வரும் அனைத்து பயனாளிகளுக்கும் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் (HMIS) மூலம் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான மேல் சிகிச்சையினை பரிந்துரைக்க வழிவகிக்கிறது. வரும் அனைத்து பயனாளிகளுக்கும் உயரம், எடை, நீரிழிவு நோய்க்கான பரிசோதனை, இரத்தஅழுத்தம் பரிசோதனை,அல்ட்ரா ஸ்கேன், காசநோய் பரிசோதனை,  தொழுநோய் பரிசோதனை,  புற்றுநோய் பரிசோதனை, ஈ.சி.ஜி மற்றும் எக்கோ பரிசோதனை, எக்ஸ்ரே, சிறுநீரக நோய் பரிசோதனைகள் முதலியன

cbffdbf8-0911-42ea-b0a0-47e60654a6f2

இம்முகாமில் பரிசோதிக்கப்பட்டு இத்திட்டமானது விரிவான சுகாதார பரிசோதனைகளை நேரடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விலை உயர்ந்த முழு உடல் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. மேற்படி சிறப்பு மருத்துவ முகாமில்மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன் மேற்கு வட்டார மருத்துவ அலுவலர் பத்மாவதி சுகாதார ஆய்வாளர்கள் நாராயணமூர்த்தி முத்துவேல் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பரவை பேரூராட்சி முன்னாள் தலைவர் மனோகரன் திமுக பேரூர் செயலாளர் ராஜாமணி திமுக பொருளாளர் சுடலைமுத்து, வார்டு கவுன்சிலர் நாகேஸ்வரி கிருஷ்ணதிலகர்கற்பகம் பள்ளி தாளாளர் ராமு தலைமையாசிரியர் சிவபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பரவை பேருராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

More news from Tamil Nadu and nearby areas
  • மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் இன்று (ஏப்.3) முருகனுக்கு கோவிலுக்குள் ஆறு கால் மண்டபத்தில் நடைபெற்றது. நாளை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது . திருப்பரங்குன்றம் பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணியசுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. திருப்பரங்குன்றம் மலையை சுற்றி பச்சைக்குதிரை ஓட்டம் முடிந்த பின், பச்சை குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு உள்ளே உள்ள ஆறுகால் மண்டபத்தில் சுவாமிக்கு தங்ககிரீடம் சூட்டப்பட்டு, திருக்கரத்தில் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி, சேவற்கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெற்றது. சுவாமியின் பிரதிநிதியாக ஸ்தானிகப் பட்டர் செங்கோலுடன், சேவல்கொடியேந்தி கோயில் பிரகாரத்தை வலம் வந்தார். சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி பகல் 12.00 மணிக்குமேல் 12:20 மணிக்குள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் 
இன்று (ஏப்.3) முருகனுக்கு கோவிலுக்குள் ஆறு கால் மண்டபத்தில் நடைபெற்றது.  நாளை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது .
திருப்பரங்குன்றம் பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணியசுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. திருப்பரங்குன்றம் மலையை சுற்றி பச்சைக்குதிரை ஓட்டம் முடிந்த பின், பச்சை குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 
பின்னர் கோவிலுக்கு உள்ளே உள்ள ஆறுகால் மண்டபத்தில் சுவாமிக்கு தங்ககிரீடம் சூட்டப்பட்டு, திருக்கரத்தில் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி, சேவற்கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெற்றது. 
சுவாமியின் பிரதிநிதியாக ஸ்தானிகப் பட்டர் செங்கோலுடன், சேவல்கொடியேந்தி கோயில் பிரகாரத்தை வலம் வந்தார். சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி பகல் 12.00 மணிக்குமேல் 12:20 மணிக்குள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    1 hr ago
  • மதுரை மாவட்டம், திருமங்கலம்.
    1
    மதுரை மாவட்டம், திருமங்கலம்.
    user_P.G.m Paintings
    P.G.m Paintings
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    1 hr ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மறைவட்டம் புளியால் பங்கு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு ஆலய வளாகத்தில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த வாரம் முழுவதும் புனித வாரமாக அனுசரித்து வருகின்றனர். புனித வெள்ளி அன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு பின்னர் உயிரிழந்த நாளக புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர். புளியால் பங்கு புனித பெரியநாயகி அன்னை ஆலய வளாகத்தில் இயேசுவின் பாடுகள் நினைவு கூறும் வகையில் சிலுவை பாதை நிகழ்வு நடைபெற்றது.பின்னர் சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி பங்கு பணியாளர் அருட்திரு சுவாமிநாதன் மற்றும் உதவி பணியாளர் பென்சிகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இறுதியாக சிலுவை முத்தி செய்யும் சடங்கு மற்றும் பரிவட்டம் கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் புளியால் பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மறைவட்டம் புளியால் பங்கு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு ஆலய வளாகத்தில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த வாரம் முழுவதும் புனித வாரமாக அனுசரித்து வருகின்றனர். புனித வெள்ளி அன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு பின்னர் உயிரிழந்த நாளக புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர். புளியால் பங்கு புனித பெரியநாயகி அன்னை ஆலய வளாகத்தில் இயேசுவின் பாடுகள் நினைவு கூறும் வகையில் சிலுவை பாதை நிகழ்வு நடைபெற்றது.பின்னர் சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி பங்கு பணியாளர் அருட்திரு சுவாமிநாதன் மற்றும் உதவி பணியாளர் பென்சிகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இறுதியாக சிலுவை முத்தி செய்யும் சடங்கு மற்றும் பரிவட்டம் கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் புளியால் பங்கு இறைமக்கள்  கலந்து கொண்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • பிரதமர் மோடி சாலைவலம் பிரதமர் மோடியுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் சாலைவலத்தில் பங்கேற்பு.
    1
    பிரதமர் மோடி சாலைவலம்
பிரதமர் மோடியுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் சாலைவலத்தில் பங்கேற்பு.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • 🙏 சிறப்பு பொது சுகாதார பெருநகரம் பழனி
    4
    🙏 சிறப்பு பொது சுகாதார பெருநகரம் பழனி
    user_Corp M
    Corp M
    பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • *பெரியகுளம் தொகுதி த.வெ.க வேட்பாளருக்கு பட்டாசுகள் வெடித்து, மாலை அணிவித்து, பெண்கள் ஆலத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு* *பெரியகுளம் தொகுதியில் மக்களின் பேராதரவு எங்களுக்கு உள்ளது நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என பேட்டி* தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சபரி ஐங்கரன் இன்று பெரியகுளம் தொகுதியில் தனது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள பட்டாளம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கினார் தேவதானப்பட்டியில் இருந்து தேனி பங்களாமேடு வரை தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளரை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் தேனி பங்களாமேடு பகுதிக்கு வருகை தந்த வேட்பாளர் சபரி ஐயங்கரனுக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர் பட்டாசுகளை வெடித்து, மாலை அணிவித்தும் பெண்கள் ஆலத்தி எடுத்தும் வேட்பாளரை வரவேற்றனர் பின்னர் பெரியகுளம் வேட்பாளர் சபரி ஐங்கரன் கூறுகையில் தொகுதியில் மக்களுக்கு என்ன தேவையோ அதை நிச்சயமாக செய்து கொடுப்போம் இந்த முறை நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் விவசாய பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்கள் வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்வது தான் எங்களது முதல் பணி பெரியகுளம் தொகுதியில் நாங்கள் மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம் மக்களின் பேராதரவு எங்கள் பக்கம் உள்ளது நாங்கள் தான் வெற்றி பெறுவோம் மக்கள் நல்லவர்கள் வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் அதனால் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என தெரிவித்த அவர் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்வோம் என தெரிவித்தார்
    1
    *பெரியகுளம் தொகுதி த.வெ.க வேட்பாளருக்கு பட்டாசுகள் வெடித்து, மாலை அணிவித்து, பெண்கள் ஆலத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு*
*பெரியகுளம் தொகுதியில் மக்களின் பேராதரவு எங்களுக்கு உள்ளது நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என பேட்டி*
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சபரி ஐங்கரன் இன்று பெரியகுளம் தொகுதியில் தனது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள பட்டாளம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கினார் 
தேவதானப்பட்டியில் இருந்து தேனி பங்களாமேடு வரை  தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளரை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் 
தேனி பங்களாமேடு பகுதிக்கு வருகை தந்த வேட்பாளர் சபரி ஐயங்கரனுக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர் பட்டாசுகளை வெடித்து, மாலை அணிவித்தும் பெண்கள் ஆலத்தி எடுத்தும் வேட்பாளரை வரவேற்றனர்
பின்னர் பெரியகுளம் வேட்பாளர் சபரி ஐங்கரன் கூறுகையில்
தொகுதியில் மக்களுக்கு என்ன தேவையோ அதை நிச்சயமாக செய்து கொடுப்போம் இந்த முறை நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் விவசாய பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்கள் வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்வது தான் எங்களது முதல் பணி
பெரியகுளம் தொகுதியில் நாங்கள் மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம் மக்களின் பேராதரவு எங்கள் பக்கம் உள்ளது நாங்கள் தான் வெற்றி பெறுவோம் 
மக்கள் நல்லவர்கள் வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் அதனால் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என தெரிவித்த அவர் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்வோம் என தெரிவித்தார்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகிலுள்ள ராமகிரி ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயிலில் நேற்று (02-04-2026) பங்குனி மாதம் பிரம்மோற்சவம் மற்றும் தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 900 முதல் 1200 ஆண்டுகள் பழமையான இத்தலத்தில், பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, கருட வாகன சேவை, திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டத்துடன் நிறைவடைந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண நரசிங்கப் பெருமாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக கோவில் சன்னிதானத்தில் இருந்த கல்யாண நரசிங்க பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி, கமலவல்லி தாயார் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு திருத்தேரில் வைக்கப்பட்டது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகிலுள்ள ராமகிரி ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயிலில் நேற்று (02-04-2026) பங்குனி மாதம் பிரம்மோற்சவம் மற்றும் தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சுமார் 900 முதல் 1200 ஆண்டுகள் பழமையான இத்தலத்தில், பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, கருட வாகன சேவை, திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டத்துடன் நிறைவடைந்தது.  இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண நரசிங்கப் பெருமாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முன்னதாக கோவில் சன்னிதானத்தில் இருந்த கல்யாண நரசிங்க பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி, கமலவல்லி தாயார் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு திருத்தேரில் வைக்கப்பட்டது.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    15 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வள்ளியப்பா செட்டியார் ஊரணி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தாயமங்கலம் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டியும், குடும்ப செழிப்புக்காகவும் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 23 ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த ஆன்மீக வழிபாட்டில் தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 350-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பக்திப் பரவசத்துடன் விளக்கேற்றி வழிபட்டனர். விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மங்கல இசை முழங்க, வேத மந்திரங்கள் ஓத, வரிசையாக அமர்ந்து பெண்கள் தீபமேற்றி அர்ச்சனை செய்தனர்.சுமங்கலிப் பூஜையாகவும், ஊர் நலம் காக்கும் வழிபாடாகவும் கருதப்படும் இந்த பூஜையில், கோவில் வளாகம் முழுவதும் விளக்குகளின் ஒளியால் களைகட்டியதுடன், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
    1
    சிவகங்கை மாவட்டம் 
தேவகோட்டை வள்ளியப்பா செட்டியார் ஊரணி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தாயமங்கலம் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில்  உலக நன்மை வேண்டியும், குடும்ப செழிப்புக்காகவும் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 23 ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த ஆன்மீக வழிபாட்டில் தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 350-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பக்திப் பரவசத்துடன் விளக்கேற்றி வழிபட்டனர். விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மங்கல இசை முழங்க, வேத மந்திரங்கள் ஓத, வரிசையாக அமர்ந்து பெண்கள் தீபமேற்றி அர்ச்சனை செய்தனர்.சுமங்கலிப் பூஜையாகவும், ஊர் நலம் காக்கும் வழிபாடாகவும் கருதப்படும் இந்த பூஜையில்,
கோவில் வளாகம் முழுவதும் விளக்குகளின் ஒளியால் களைகட்டியதுடன், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகிகள்  சிறப்பாகச் செய்திருந்தனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.