logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழைய பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் த/பெ பாண்டி கடந்த 7 ந் தேதி பூட்டை உடைத்து‌ பீரோவிலிருந்த 32 1/2 பவுன் நகை மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து ஒட்டன்சத்திரம் கோட்ட காவல் துணை காணிப்பாளர் கார்த்திகேயன் ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் திண்டுக்கல் அருகே கதிரியன் குளத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஈடுபட்டதும் அவர் மற்றொரு வழக்கில் திருட்டு வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருப்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் .அப்போது அவர் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடிய இத ஒப்பிக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 32 1/2 பவுன் நகைகள் 280 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் குற்றவாளி விரைந்து செயல்பட்டு கைது செய்து நகைகளை முழுவதையும் மீட்ட ஒட்டன்சத்திரம் போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

11 hrs ago
user_Elangovan
Elangovan
Local News Reporter ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
11 hrs ago

ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழைய பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் த/பெ பாண்டி கடந்த 7 ந் தேதி பூட்டை உடைத்து‌ பீரோவிலிருந்த 32 1/2 பவுன் நகை மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து ஒட்டன்சத்திரம் கோட்ட காவல் துணை காணிப்பாளர் கார்த்திகேயன் ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் திண்டுக்கல் அருகே கதிரியன் குளத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஈடுபட்டதும் அவர் மற்றொரு வழக்கில் திருட்டு வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருப்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் .அப்போது அவர் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடிய இத ஒப்பிக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 32 1/2 பவுன் நகைகள் 280 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் குற்றவாளி விரைந்து செயல்பட்டு கைது செய்து நகைகளை முழுவதையும் மீட்ட ஒட்டன்சத்திரம் போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • 100 அடி தேசிய கொடி ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் நினைவாக 100 அடி உயர தேசியக் கொடி ஏற்ற கோரிக்கை கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி மறுத்த மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற உத்தரவின்படி பெரியகுளத்தில் திரண்ட பொதுமக்கள் உண்ணாவிரதம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் தியாகராஜன். இவர் கடந்த 2003-ஆம் ஆண்டு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தார். அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், எல்லையில் வீரமரணம் அடைந்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையிலும், தாமரைக்குளம் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் மலைப் பகுதியில் 100 அடி உயர தேசியக் கொடி அமைக்க அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவெடுத்தணர். இதற்காக மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி கேட்கப்பட்டும், தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பெரியகுளம் நகராட்சி அலுவலகம் அருகே அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் நீதிமன்ற உத்தரவின்படி, தாமரைக்குளம் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தின் தொடக்கமாக, வீரமரணம் அடைந்த தியாகராஜனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நாட்டிற்காக உயிர்நீத்த வீரருக்கு மரியாதை செய்யக் கூட 5 ஆண்டுகளாக அனுமதி மறுப்பது மிகுந்த வேதனையளிப்பதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, 100 அடி உயர தேசியக் கொடியை ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்காக உயிரைக் கொடுத்த தியாகிக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேசியக் கொடி ஏற்றக் கேட்கிறோம். இதற்கு 5 ஆண்டுகளாக அனுமதி தராமல் அலைக்கழிப்பது வேதனை தருகிறது. அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்." பேட்டி : சரவணன் முன்னால் ராணுவ வீரர்.
    1
    100 அடி தேசிய கொடி ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் நினைவாக 100 அடி உயர தேசியக் கொடி ஏற்ற கோரிக்கை
கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி மறுத்த மாவட்ட நிர்வாகம்  நீதிமன்ற உத்தரவின்படி பெரியகுளத்தில் திரண்ட பொதுமக்கள் உண்ணாவிரதம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் தியாகராஜன். இவர் கடந்த 2003-ஆம் ஆண்டு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தார்.
அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், எல்லையில் வீரமரணம் அடைந்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையிலும், தாமரைக்குளம் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் மலைப் பகுதியில் 100 அடி உயர தேசியக் கொடி அமைக்க அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவெடுத்தணர்.
இதற்காக மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி கேட்கப்பட்டும், தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பெரியகுளம் நகராட்சி அலுவலகம் அருகே அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
மேலும் நீதிமன்ற உத்தரவின்படி, தாமரைக்குளம் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
போராட்டத்தின் தொடக்கமாக, வீரமரணம் அடைந்த தியாகராஜனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாட்டிற்காக உயிர்நீத்த வீரருக்கு மரியாதை செய்யக் கூட 5 ஆண்டுகளாக அனுமதி மறுப்பது மிகுந்த வேதனையளிப்பதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர். 
மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, 100 அடி உயர தேசியக் கொடியை ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டின் பாதுகாப்புக்காக உயிரைக் கொடுத்த தியாகிக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேசியக் கொடி ஏற்றக் கேட்கிறோம். இதற்கு 5 ஆண்டுகளாக அனுமதி தராமல் அலைக்கழிப்பது வேதனை தருகிறது. அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்."
பேட்டி : சரவணன் முன்னால்  ராணுவ வீரர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • ஆண்டிபட்டி பகுதியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பேரூராட்சி அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டனர்- ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை வழியாக பெரியகுளம் மாநில நெடுஞ்சாலையோர பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் இருக்கும் நிலையில் இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்த நிலையில் ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் இணைந்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் ஜேசிபி எந்திரம் மூலம் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது ஒரு சிலர் தங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் திடீரென ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்தனர் இருப்பினும் தொடர்ந்து காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்
    1
    ஆண்டிபட்டி பகுதியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பேரூராட்சி அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டனர்- ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை வழியாக பெரியகுளம் மாநில நெடுஞ்சாலையோர பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் இருக்கும் நிலையில் இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர்
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்த நிலையில் 
ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் இணைந்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
ஜேசிபி எந்திரம் மூலம் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது 
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது ஒரு சிலர் தங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் திடீரென ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்தனர் 
இருப்பினும் தொடர்ந்து காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • மாம்பாறை முனியப்பன் கோவிலில் இன்று பக்தர்கள் அடைசல் பூஜை வழிபாடு செய்தனர்
    1
    மாம்பாறை முனியப்பன் கோவிலில் இன்று பக்தர்கள் அடைசல் பூஜை வழிபாடு செய்தனர்
    user_R. Suresh
    R. Suresh
    Local News Reporter கரூர், கரூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு அருள்மிகு கௌமாரியம்மன் சிறப்பு பூஜை *ஆடி மாதத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்* தேனி மாவட்டம் தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது . மிகவும் புகழ்பெற்ற பழ நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோயிலில் இன்று ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனை தரிசனம் செய்வதற்கு காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர். அம்மனுக்கு பட்டுடுத்தி சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த கௌமாரியம்மன் தரிசனம் செய்வதற்காக பெண்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர் . பக்தர்களின் வசதிக்கேற்ப கோயில் அறநிலையத்துறை சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டும் பொதுமக்கள் ஒரே வரிசையில் சென்று வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வீரபாண்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . காப்புக் கட்டி விரதம் ஏற்பட்ட பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து கோயில் வளாகத்தில் திருவிளக்கை ஏற்றிச் சென்றனர்.
    1
    ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு அருள்மிகு கௌமாரியம்மன் சிறப்பு பூஜை
*ஆடி மாதத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்*
தேனி மாவட்டம் தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது .
மிகவும் புகழ்பெற்ற பழ நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோயிலில் இன்று ஆடி மாத  வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனை தரிசனம் செய்வதற்கு காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.
அம்மனுக்கு பட்டுடுத்தி சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த கௌமாரியம்மன் தரிசனம் செய்வதற்காக பெண்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர் .
பக்தர்களின் வசதிக்கேற்ப கோயில் அறநிலையத்துறை சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டும் பொதுமக்கள் ஒரே வரிசையில் சென்று வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வீரபாண்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .
காப்புக் கட்டி விரதம் ஏற்பட்ட பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து கோயில் வளாகத்தில் திருவிளக்கை ஏற்றிச் சென்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • ஒரு நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் சௌந்தரபாண்டி 🌹 இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி 🌹 அன்புச் சகோதரர்... ஆருயிர் தோழர்... இணைபிரியா நண்பர்... திரு. சௌந்தரபாண்டி முத்து நாயக்கர் அவர்களுக்கு கண்ணீர் கலந்த புகழ் வணக்கம். 🕯️ இரண்டு ஆண்டுகள் காலம் கடந்துவிட்டது; ஆனால் உங்கள் நினைவுகள் காலத்தின் மணலில் அழியவில்லை. எங்கள் இதயங்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டாய் என்றும் நிலைத்திருக்கின்றன. நாகசிவா என்ற விதை இன்று ஆலமரமாய் நிழல் தருவதற்கு, இரவு பகல் பாராது வியர்வையை விதைத்த அமைதியான உழைப்பின் சிற்பி நீங்கள். நாகசிவா வெள்ளை மாளிகை கட்டிடங்களால் மட்டும் எழவில்லை; உங்கள் நம்பிக்கை, உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை என்ற கற்களால் கட்டப்பட்டது. நண்பன் என்ற சொல்லுக்கு புதிய அர்த்தம் தந்தவர் நீங்கள்; வழிகாட்டியாக நடந்தவர், வாழ்க்கையை வழிநடத்திக் கற்றுத் தந்தவர். தனக்காக வாழ்வதைவிட, பிறருக்காக வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை என்று அமைதியாக வாழ்ந்து காட்டிய மாமனிதர் நீங்கள். உங்கள் புன்னகை ஒரு மலர்... 🌸 உங்கள் பணிவு ஒரு மணம்... 🌺 உங்கள் உதவி ஒரு நிழல்... 🌳 உங்கள் நட்பு ஒரு ஆயுள் வரம்... 🤝 மன்னர்கள் விட்டுச் சென்ற புகழைப் போல, நல்ல மனிதர்கள் விட்டுச் செல்லும் நினைவுகள்தான் காலத்தை வெல்லும். அந்த வரிசையில் என்றும் நிலைத்திருப்பவர் நீங்கள். உங்கள் உடல் மண்ணோடு கலந்திருக்கலாம்; ஆனால் உங்கள் சிந்தனைகள் எங்கள் ஒவ்வொரு முயற்சியிலும் இன்னும் உயிருடன் நடந்து கொண்டிருக்கின்றன. "மலர்கள் வாடினாலும் மணம் மறைவதில்லை; மாமனிதர்கள் மறைந்தாலும் அவர்கள் செய்த நன்மை மறைவதில்லை." நீங்கள் ஏற்றிய உழைப்பின் தீபம் அணையாது எரியும்; நீங்கள் விதைத்த நம்பிக்கையின் விதைகள் தலைமுறைகள் வரை செழித்து வளரும். மண்ணுலகம் இருக்கும் வரை உங்கள் சேவையும், உங்கள் அர்ப்பணிப்பும், உங்கள் நட்பும், உங்கள் நினைவும் என்றென்றும் அழியாது. "இறைவன் உங்களை எங்களிடமிருந்து பிரித்திருக்கலாம்; ஆனால் எங்கள் இதயங்களிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது." 🌹 உங்கள் கரங்கள் விதைத்த நன்மைகள், இன்று ஆயிரம் இதயங்களில் நம்பிக்கையாக மலர்கின்றன. நீங்கள் கட்டிய வெற்றிப் பாதையில், நாங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறோம். உங்கள் குடும்பம் ஒருபோதும் தனிமையில் இல்லை... நாகசிவா குடும்பம் என்றும் உங்கள் குடும்பத்தின் உறவாகவும், உறுதுணையாகவும், தோளாகவும், வாழ்நாள் முழுவதும் துணைநிற்கும். நட்பை காலம் பிரிக்காது... உறவை மரணம் முடிக்காது... நல்ல உள்ளங்கள் பிரிந்தாலும், அவர்கள் விட்டுச் சென்ற அன்பு என்றும் அழியாது. 🌺 மலர்கள் உதிரலாம்... மணம் உதிராது... மாமனிதர்கள் மறையலாம்... அவர்கள் புகழும், சேவையும், அர்ப்பணிப்பும் மண்ணுலகம் இருக்கும் வரை மறையாது. என்றும் எங்கள் இதயங்களில் வாழும் அன்பு நண்பர் திரு. சௌந்தரபாண்டி முத்து நாயக்கர் அவர்களுக்கு கண்ணீர் மல்கிய புகழ் வணக்கம். 🌹 அன்புடன், ❤️ நாகராஜ் பெரியசாமி பிள்ளை ❤️ உங்கள் ஆசிர்வாதத்துடன் தலைவர் வேட்பாளர்
    3
    ஒரு நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் சௌந்தரபாண்டி
🌹 இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி 🌹
அன்புச் சகோதரர்...
ஆருயிர் தோழர்...
இணைபிரியா நண்பர்...
திரு. சௌந்தரபாண்டி முத்து நாயக்கர் அவர்களுக்கு
கண்ணீர் கலந்த புகழ் வணக்கம். 🕯️
இரண்டு ஆண்டுகள் காலம் கடந்துவிட்டது;
ஆனால் உங்கள் நினைவுகள் காலத்தின் மணலில் அழியவில்லை.
எங்கள் இதயங்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டாய்
என்றும் நிலைத்திருக்கின்றன.
நாகசிவா என்ற விதை
இன்று ஆலமரமாய் நிழல் தருவதற்கு,
இரவு பகல் பாராது வியர்வையை விதைத்த
அமைதியான உழைப்பின் சிற்பி நீங்கள்.
நாகசிவா வெள்ளை மாளிகை
கட்டிடங்களால் மட்டும் எழவில்லை;
உங்கள் நம்பிக்கை, உழைப்பு, அர்ப்பணிப்பு,
நேர்மை என்ற கற்களால் கட்டப்பட்டது.
நண்பன் என்ற சொல்லுக்கு
புதிய அர்த்தம் தந்தவர் நீங்கள்;
வழிகாட்டியாக நடந்தவர்,
வாழ்க்கையை வழிநடத்திக் கற்றுத் தந்தவர்.
தனக்காக வாழ்வதைவிட,
பிறருக்காக வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை என்று
அமைதியாக வாழ்ந்து காட்டிய
மாமனிதர் நீங்கள்.
உங்கள் புன்னகை ஒரு மலர்... 🌸
உங்கள் பணிவு ஒரு மணம்... 🌺
உங்கள் உதவி ஒரு நிழல்... 🌳
உங்கள் நட்பு ஒரு ஆயுள் வரம்... 🤝
மன்னர்கள் விட்டுச் சென்ற புகழைப் போல,
நல்ல மனிதர்கள் விட்டுச் செல்லும்
நினைவுகள்தான் காலத்தை வெல்லும்.
அந்த வரிசையில் என்றும் நிலைத்திருப்பவர் நீங்கள்.
உங்கள் உடல் மண்ணோடு கலந்திருக்கலாம்;
ஆனால் உங்கள் சிந்தனைகள்
எங்கள் ஒவ்வொரு முயற்சியிலும்
இன்னும் உயிருடன் நடந்து கொண்டிருக்கின்றன.
"மலர்கள் வாடினாலும் மணம் மறைவதில்லை;
மாமனிதர்கள் மறைந்தாலும் அவர்கள் செய்த நன்மை மறைவதில்லை."
நீங்கள் ஏற்றிய உழைப்பின் தீபம்
அணையாது எரியும்;
நீங்கள் விதைத்த நம்பிக்கையின் விதைகள்
தலைமுறைகள் வரை செழித்து வளரும்.
மண்ணுலகம் இருக்கும் வரை
உங்கள் சேவையும்,
உங்கள் அர்ப்பணிப்பும்,
உங்கள் நட்பும்,
உங்கள் நினைவும்
என்றென்றும் அழியாது.
"இறைவன் உங்களை எங்களிடமிருந்து பிரித்திருக்கலாம்;
ஆனால் எங்கள் இதயங்களிலிருந்து
ஒருபோதும் பிரிக்க முடியாது."
🌹 உங்கள் கரங்கள் விதைத்த நன்மைகள்,
இன்று ஆயிரம் இதயங்களில் நம்பிக்கையாக மலர்கின்றன.
நீங்கள் கட்டிய வெற்றிப் பாதையில்,
நாங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறோம்.
உங்கள் குடும்பம் ஒருபோதும் தனிமையில் இல்லை...
நாகசிவா குடும்பம் என்றும்
உங்கள் குடும்பத்தின் உறவாகவும்,
உறுதுணையாகவும், தோளாகவும்,
வாழ்நாள் முழுவதும் துணைநிற்கும்.
நட்பை காலம் பிரிக்காது...
உறவை மரணம் முடிக்காது...
நல்ல உள்ளங்கள் பிரிந்தாலும்,
அவர்கள் விட்டுச் சென்ற அன்பு என்றும் அழியாது.
🌺 மலர்கள் உதிரலாம்...
மணம் உதிராது...
மாமனிதர்கள் மறையலாம்...
அவர்கள் புகழும், சேவையும், அர்ப்பணிப்பும்
மண்ணுலகம் இருக்கும் வரை மறையாது.
என்றும் எங்கள் இதயங்களில் வாழும்
அன்பு நண்பர்
திரு. சௌந்தரபாண்டி முத்து நாயக்கர் அவர்களுக்கு
கண்ணீர் மல்கிய புகழ் வணக்கம். 🌹
அன்புடன், ❤️
நாகராஜ் பெரியசாமி பிள்ளை ❤️ உங்கள் ஆசிர்வாதத்துடன் தலைவர் வேட்பாளர்
    user_நாகராஜ் பெரியசாமி பிள்ளை
    நாகராஜ் பெரியசாமி பிள்ளை
    நத்தம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    17 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.