Shuru
Apke Nagar Ki App…
பூசேரி பகுதியில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவர்ந்து விபத்துக்குள்ளானது #ராமநாதபுரம் மாவட்டம் @முதுகுளத்தூர் அருகே பூசேரி பகுதியில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, எதிரே வந்த காருக்கு வழி விடுவதற்காக சாலையோரம் ஒதுங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவர்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்... சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...
SIMMA
பூசேரி பகுதியில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவர்ந்து விபத்துக்குள்ளானது #ராமநாதபுரம் மாவட்டம் @முதுகுளத்தூர் அருகே பூசேரி பகுதியில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, எதிரே வந்த காருக்கு வழி விடுவதற்காக சாலையோரம் ஒதுங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவர்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்... சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...
More news from தமிழ்நாடு and nearby areas
- என் ஊர் திருவிழா நாளைக்கு கும்பாபிஷேகம் விழா எல்லோரும் வாங்க1
- கடலில் தவறி விழுந்து இரண்டு மீனவர்கள் பரிதாப பலி: திருப்பாலைக்குடி, பாசிப்பட்டினத்தில் சோகம்! திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த செல்லக்குழந்தை என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பாலைக்குடி கடல் பகுதியில் தனியாக மீன்பிடிக்கச் சென்றிருந்தார். அப்போது தள்ளுவலை (தள்ளுபடி வலை) இழுத்தபோது எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவ்வழியாகச் சென்ற சக மீனவர்கள், கடலில் மிதந்த அவரது உடலை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.அதேபோல், திருவாடானை அருகே உள்ள பாசிப்பட்டினத்தைச் சேர்ந்த நாகூர்செல்வம் என்பவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, நங்கூரத்தைக் கடலில் இறக்கியபோது தவறி விழுந்து கடலில் மூழ்கி பலியானார். இவரது உடல் கரை ஒதுங்கிய நிலையில், அதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் உடலைக் கைப்பற்றினர்.இச்சம்பவங்கள் குறித்துத் தகவலறிந்த கடலோரக் காவல் குழுமப் போலீசார், உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக (Post-mortem) ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்1
- சாயல்குடி தவெக நிர்வாகிகள் மீது அவதூறு பரப்புவதாக காவல் நிலையத்தில் புகார்: ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தில் பரபரப்பு சாயல்குடி தவெக நிர்வாகிகள் மீது அவதூறு பரப்புவதாக காவல் நிலையத்தில் புகார்: ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தில் பரபரப்பு! ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாயல்குடி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி அக்கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன், சாயல்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ். மணிகண்டன் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் தொடக்கத்திலிருந்தே கட்சிக்காக தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கிராமங்கள் தோறும் இளைஞர்களை ஒருங்கிணைத்து கட்சியை வலுப்படுத்தும் இவர்களது களப்பணிகளுக்கு உள்ளூர் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் கட்சியில் இணைய விரும்பிய சில நபர்களுக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கட்சிப் பதவிகள் வழங்குவதற்காகப் பேரம் பேசப்பட்டதாகப் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தவெக தொண்டர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பதவி கிடைக்கவில்லை என்பதற்காக பல ஆண்டுகளாக வியர்வை சிந்தி உழைத்தவர்களின் நற்பெயரைக் களங்கப்படுத்துவதை ஏற்க முடியாது" என்று தவெகவினர் தெரிவித்துள்ளனர். மேலும், கட்சிக்காக உழைக்கும் உண்மையான தொண்டர்களின் உழைப்புக்கு எப்போதும் உரிய மரியாதை அளிக்கப்படும் என்றும் அவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். தங்கள் மீதான அவதூறு பரப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக, சாயல்குடி வணிகர் சங்கப் பிரமுகர் பெத்தராஜ் மீது சாயல்குடி காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் மனு அளிக்கப்பட்டு விசாரணையில் உள்ளது. இதனிடையே, இந்தச் சூழலில் கடலாடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அடிப்படை ஆதாரமற்ற அவதூறுச் செய்திகளைப் பரப்புவதை சம்பந்தப்பட்டவர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தவெக நிர்வாகிகள் தரப்பு எச்சரித்துள்ளது. 1
- தேவகோட்டையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா , சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில், 23-ஆவது வட்டக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில், திமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அண்ணாவின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணாவின் சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவராலும் சிறப்பிக்கப்பட்டது.1
- ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூசை நடைபெற்றது. தண்டாயுதபாணிக்கு 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தானம் மற்றும் மலர் அலங்கரித்து மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து வெற்றிலை விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- மாணவர்களுடன் காலை உணவு அருந்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர். விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.09.2026) திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுகாதாரம் மற்றும் உணவு வழங்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தி, அவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் கல்வி, பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசயனர் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிட பெண்ணாக அவதரித்து பாமாலை பாடி பின் பூமாலை சுற்றி ஸ்ரீரங்கநாதரை அடைந்தார் என்பது ஐதீகம்.ஆண்டாள் தினமும் தான் சூடி கலைந்த மாலையை ஸ்ரீரங்கநாதரின் அம்சமான ஸ்ரீ வடபத்ரசயனருக்குத்தான் சாற்றி வந்துள்ளார். இந்த வடபத்ர சயனருக்கான புரட்டாசி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று துவங்கும் உற்சவம் 12 நாட்கள் நடைபெறும்.ஐந்தாம் திருநாள் தங்க கருட சேவையும், ஒன்பதாம் திருநாள்(23.09.26) செப்பு திருத்தேரோட்டமும் நடைபெற உள்ள நிலையில் தினந்தோறும் பூதேவி ஸ்ரீதேவி சமேத வடபத்ரசயனர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.1
- முதுகுளத்தூர் அருகே அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து முதுகுளத்தூர் அருகே அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து 32 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்; சிலருக்கு லேசான காயம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பூசேரி பகுதியில் அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. முதுகுளத்தூரில் இருந்து தேரிருவேலி, பூசேரி வழியாக 32 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பூசேரி சுடுகாட்டு பகுதி அருகே பேருந்து வந்தபோது, எதிரே ஆட்டோ மற்றும் கார் வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு வழிவிடுவதற்காக பேருந்தை சாலையோரமாக ஒதுக்கியபோது, இன்று பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாக இருந்ததால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. சில பயணிகளுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து சிக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.1