முதுகுளத்தூர் அருகே அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து முதுகுளத்தூர் அருகே அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து 32 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்; சிலருக்கு லேசான காயம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பூசேரி பகுதியில் அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. முதுகுளத்தூரில் இருந்து தேரிருவேலி, பூசேரி வழியாக 32 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பூசேரி சுடுகாட்டு பகுதி அருகே பேருந்து வந்தபோது, எதிரே ஆட்டோ மற்றும் கார் வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு வழிவிடுவதற்காக பேருந்தை சாலையோரமாக ஒதுக்கியபோது, இன்று பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாக இருந்ததால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. சில பயணிகளுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து சிக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுகுளத்தூர் அருகே அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து முதுகுளத்தூர் அருகே அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து 32 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்; சிலருக்கு லேசான காயம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பூசேரி பகுதியில் அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. முதுகுளத்தூரில் இருந்து தேரிருவேலி, பூசேரி வழியாக 32 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பூசேரி சுடுகாட்டு பகுதி அருகே பேருந்து வந்தபோது, எதிரே ஆட்டோ மற்றும் கார் வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு வழிவிடுவதற்காக பேருந்தை சாலையோரமாக ஒதுக்கியபோது, இன்று பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாக இருந்ததால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. சில பயணிகளுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து சிக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதுகுளத்தூர் அருகே அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து முதுகுளத்தூர் அருகே அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து 32 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்; சிலருக்கு லேசான காயம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பூசேரி பகுதியில் அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. முதுகுளத்தூரில் இருந்து தேரிருவேலி, பூசேரி வழியாக 32 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பூசேரி சுடுகாட்டு பகுதி அருகே பேருந்து வந்தபோது, எதிரே ஆட்டோ மற்றும் கார் வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு வழிவிடுவதற்காக பேருந்தை சாலையோரமாக ஒதுக்கியபோது, இன்று பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாக இருந்ததால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. சில பயணிகளுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து சிக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதர்கள் மண்டி கிடப்பதால் மாணவிகள் அச்சம்: திருவாடானை பாரதிநகரில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நூற்றுக்கணக்கான மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.இப்பள்ளி வளாகத்திற்குள் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற பொருட்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதன் காரணமாக, பள்ளி வளாகத்தில் அவ்வப்போது விஷப் பூச்சிகள் மற்றும் ஊர்வன நடமாட்டம் தென்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், தினமும் பள்ளிக்கு வரும் மாணவிகள் அச்சத்துடனேயே கல்வி பயிலும் சூழல் நிலவுகிறது.எனவே, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- என் ஊர் திருவிழா நாளைக்கு கும்பாபிஷேகம் விழா எல்லோரும் வாங்க1
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி வார சந்தை விலை நிலவரம் வெங்காயம் 2 கி ரூ.140 தக்காளி 1 .500 ரூ.50 உருளைக்கிழங்கு 1.500 ரூ. 50 பீட்ரூட் 1 தட்டு ரூ.20 அவரைக்காய் 1 தட்டு ரூ. 20 முட்டைகோஸ் ரூ. 30-40 இஞ்சி 100 கி ரூ.30 கொத்தமல்லி ரூ.10 வெண்டைக்காய்1/2 கி ரூ.50 முள்ளங்கி 1 தட்டு ரூ 20 கேரட் 1/2 கி ரூ 50 தேங்காய் 1 காய் 20 -50 ரூ கொடை மிளகாய் 3 காய் 20 ரூ முருங்கை காய் 3 காய் 20 ரூ ஆப்பிள் 1 கி 200 ரூ சாத்துக்குடி 1 கி 80 ரூ திராட்சை பழம் 1/2 கி 40 ரூ விநாயகர் சிலை 50 -200 ரூ அகல் விளக்கு 10 விளக்கு 10 ரூ பொரி 20 ரூ கதம்பம் 1 மோலம் 25 ரூ என்ற விலைக்கு விற்கப்பட்டது.1
- பொன்னமராவதியில் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி திமுக நகரச் செயலாளர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. அதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- புதுக்கோட்டை பெரியா நகரை சேர்ந்த சாய் திவ்யாஉலக சாதனை படைத்த சிறுமி புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் ராதா தம்பதிகளில் 6 வயது குழந்தை சாய் திவ்யா ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் உலக சாதனை திகழ்ந்தார்4
- மாணவர்களுடன் காலை உணவு அருந்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர். விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.09.2026) திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுகாதாரம் மற்றும் உணவு வழங்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தி, அவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் கல்வி, பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.1
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்குழி உற்சவம் நடைபெற்றது ஆர்எஸ் மங்கலம் தாலுகா உப்பூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வெயில் உகந்த விநாயகர் ஆலயம் உள்ளது என்ற ஆலயத்தை ராமபிரான் வழிபட்டதாக ஸ்தல வரலாறுகள் உள்ளது இக்கோவிலுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கி நடைபெற்று வந்த நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்களில் விரதம் இருந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக இறங்கி வழிபட்டனர் இந்நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டனர்1