Shuru
Apke Nagar Ki App…
காஞ்சிபுரம் : ஸ்ரீ 1008 சந்திரபிரபநாதர் ஆலயத்தில் கோலப்போட்டி காஞ்சிபுரம் மாநகரம் அடுத்த திருப்பருத்திகுன்றம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ 1008 திரைலோக்யநாதர். ஸ்ரீ 1008 சந்திரபிரபநாதர் பகவான் ஆலயத்தில் பொங்கல் விழா மற்றும் கோலப்போட்டி இன்று (ஜன.11) நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோயில் உள்பிரகாரத்தை சுற்றி உள்ள பகுதிகளில் வண்ண கோலமாவில் பல்வேறு விதமான கோலங்களை வரைந்து, தங்களில் திறமையை வெளிகாட்டினர். பின்னர், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளாக LED TV வழங்கப்பட்டது.
Naga Rajan
காஞ்சிபுரம் : ஸ்ரீ 1008 சந்திரபிரபநாதர் ஆலயத்தில் கோலப்போட்டி காஞ்சிபுரம் மாநகரம் அடுத்த திருப்பருத்திகுன்றம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ 1008 திரைலோக்யநாதர். ஸ்ரீ 1008 சந்திரபிரபநாதர் பகவான் ஆலயத்தில் பொங்கல் விழா மற்றும் கோலப்போட்டி இன்று (ஜன.11) நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோயில் உள்பிரகாரத்தை சுற்றி உள்ள பகுதிகளில் வண்ண கோலமாவில் பல்வேறு விதமான கோலங்களை வரைந்து, தங்களில் திறமையை வெளிகாட்டினர். பின்னர், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளாக LED TV வழங்கப்பட்டது.
More news from தமிழ்நாடு and nearby areas
- மாவட்டத்தில் இன்று பதிவான மழையின் விவரம் தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் தற்போது வரை பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது இந்த நிலையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையின் விவரம். வேப்பம்பட்டி 4.4 மிமீ, சூரியக்கடை 4மிமீ, கேத்துரெட்டிபட்டி 2.8 மிமீ, பெரியப்பட்டி 2.8 மிமீ, மருதிப்பட்டி 2.4 மிமீ, தென்கரைக்கோட்டை 2.4 மிமீ, பையர்நத்தம் 2.4மிமீ, தீர்த்தமலை 2மிமீ என மழை பதிவாகி உள்ளது1
- தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தை சேர்ந்த செல்லம்பட்டி மோப்பிரிப்பட்டி அச்சல்வாடி பெரியப்பட்டி மொரப்பூர் போளையம்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட திமுக,தவெக, உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் அதிமுக நிர்வாகி விக்னேஷ் தலைமையில் இன்று அக்கட்சியில் இருந்து விலகி தர்மபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே பி அன்பழகன் எம் எல் ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.புதியதாக இணைந்தவர்களுக்கு கழக துண்டினை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி,ஒன்றிய செயலாளர்கள் சிவபிரகாசம்,பழனி, முருகன்,மருத்துவர் சந்திரமோகன்,ஐடி விங் மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஏகநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.1
- திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே சேலத்தில் இருந்து கொடுமுடி நோக்கிச் சென்ற வந்த ஆம்னி வேனுக்குள்இருந்து திடீர் புகை எழுந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று காருக்குள் இருந்த பெண்களை மீட்டு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ பிடிக்காமல் தடுத்தனர். கேஸ் வண்டி என்பதால் திடீரென புகை எழுந்துள்ளது.இதுகுறித்து விசாரித்தபோதுகொடுமுடியைச் சேர்ந்த அன்வர் அலி என்பவரது மகன் இமாம் ஜாபர் சாதிக் என்பவருக்கு சொந்தமான ஆம்னி வேனில் சேலத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு ஓட்டுநர், 5 பெண்கள் 2 குழந்தைகள் ஒரு குழுவினரும் மற்றவர்கள் ஒரு டெம்போ ட்ராவலர் வேனிலும் சென்றுள்ளனர். திருமணம் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது டெம்போ ட்ராவலர் வேன் முன்னால் சென்றுவிட பின்னால் அன்வர் அலியின் மருமகன் அக்பர்லி ஓட்டி வந்தஆம்னி வேன் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே வரும்போது ஆம்னி வேனுக்குள் திடீரென புகை எழ ஆரம்பித்தது உடனடியாக காரை அக்பர் அலி ஓரம் கட்டி நிறுத்திய நிலையில் புகையுடன் கார் நிற்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் காரின் கதவுகளை திறந்து காருக்குள் இருந்தவர்களை மீட்டு அருகில் அமர வைத்தனர்.அந்த வழியாக வந்த கார் மெக்கானிக் ஒருவர் கேஸ் வெடித்து தீ பரவாமல் தடுக்க கார் கேஸ் குழாயைதுண்டித்தார் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக காருக்குள் இருந்து கீழே இறங்கி விடப்பட்ட ஐந்து பெண்கள் இரண்டு குழந்தைகளும் பதட்டம் அடைந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து சம்பவ இடத்திற்கு நிலைய அலுவர் கரிகாலன்உத்தரவன் பேரில், சிறப்பு உதவிநிலைய அலுவலர் நடராஜன் தலைமையில் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் மேலும் தீ விபத்து ஏற்பட்டு விடாமல் பாதுகாத்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காரை சாய்த்து காருக்குள் புகை வந்த இடம் முழுவதும் தண்ணீரை பீச்சி அடித்து புகையை கட்டுப்படுத்தினர்.காருக்குள் காரை ஓட்டி வந்த அக்பர் அலி அவரது மனைவி,அன்வர் அலியின் மனைவியும், அக்பர் அலியின் மாமியார் மற்றும் அன்வர் அலியின் தங்கை தம்பி மகள்கள் இரண்டு பேர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்து உள்ளனர். அதில்காருக்குள் புகை எழுந்ததால் அன்வர் அலியின் மனைவி மிகவும் பதட்டமான நிலையில் காணப்பட்டார். உடனடியாகதகவல் அறிந்து விரைந்து வந்த உறவினர்கள் அவரை ஆசுவாசப் படுத்திய வேறு காரில் அவரை ஊருக்கு அழைத்துச் சென்றனர்.சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சம்பவத்தால் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு பரபரப்பு ஏற்பட்டது.1
- *புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மரம் திரும்பிய பறவைகள் என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று மரியாதை செலுத்திய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது* புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2003 ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் புத்தாம்பூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக புத்தாம்பூர் தென்னங்குடி மாரியம்மன் ஆர்ச்சிலிருந்து முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுடன் ஒன்றிணைந்து பட்டாசு வெடித்து ஆசிரியர்களுக்கு சந்தன மாலை அணிவித்து ஊர்வலமாக அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வந்தடைந்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். பள்ளிப் பருவத்தில் அனுபவித்த சுவாரசிய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியோடு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மரம் திரும்பிய பறவைகள் என்ற தலைப்பில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று குத்து விளக்கேற்றி அனைவருக்கும் மேடையிலேயே பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி கௌரவித்து நினைவு பரிசாக கேடயம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருகை தந்த அணைவருக்கும் முன்னாள் மாணவர்கள் சார்பில் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வு அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பைட்: 1 பிரவீன்குமார் (தலைமைஆசிரியர்) பைட்:2 சந்திரசேகரன் (கணித ஆசிரியர்) பைட் : 3 வைதேகி (தமிழாசிரியர்) பைட் : 4 வினித்தா (முன்னாள் மாணவி) பைட் : 5 ஸ்ரீராம் சுந்தர் (முன்னாள் மாணவர்) பைட்: 6 சத்யா (முன்னாள் மாணவி)1
- சிறப்பு பேருந்தை துவக்கி வைத்த அமைச்சர் பள்ளி மாணவர்கள் சிரமத்தைபோக்கும் வகையில், தமிழ்நாடு முதலைமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் படி, இன்று புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு பேருந்தனை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை எஸ். ரகுபதி துவக்கி வைத்து சிறப்பித்தார். உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா மாநகர மேயர் திலகவதி செந்தில் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.1
- மணப்பாறை வழியாக அடாத மழையிலும் விடாமல் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தை மாதம் தொடங்கும் முன்னர் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் பழனி முருகனுக்கு பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து பின்னர் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இதே போல் இன்னும் சில தினங்களில் தை மாதம் தொடங்க உள்ள நிலையில் பலரும் பழனிக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அதன்படி இன்று திருச்சி மாவட்டம், மணப்பாறை வழியாக திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அதிக சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரையிலும், மாற்றுத் திறனாளிகளும் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் அந்த மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தங்களின் பாதயாத்திரையில் கவனம் செலுத்தி முருகனை காண பக்தி பரவசத்துடன் மகிழ்ச்சியோடு சென்று வருகின்றனர். அதிக அளவிலானோர் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கடத்தூரில் 9 லட்சத்திற்கு வெற்றிலைகள் விற்பனை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூரில் ஞாயிறுதோறும் வெற்றிலை விற்பனைக்காக பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறும் வழக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் வெற்றிலைகளை விற்க & வாங்க வந்திருந்தனர் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.10,000 முதல் ரூ.26,000 வரை விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 9 லட்சத்திற்கு வெற்றிலை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்1
- தர்மபுரி கோட்டை பரவாசுதேவ பெருமாள் திருக்கோவி-லில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் "திருக்கல்யாண வைபவம். கோட்டை பரவாசுதேவ பெருமாள் திருக்கோவி-லில் வருகின்ற மார்கழி 27 காலை 9.30 - 12.30 மணிக்குள் பெருமாளுக்கும் "சூடிக்கொடுத்த சுடர்கொடி"ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் "திருக்கல்யாண வைபவம்"1