Shuru
Apke Nagar Ki App…
காலை வணக்கம் 🙏 ஓம் நமசிவாய 🙏
J.MUTHU
காலை வணக்கம் 🙏 ஓம் நமசிவாய 🙏
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Firojali Sk1
- Post by Deoprasad Say2
- தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி அருகே செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து பள்ளியின் வளாகத்தில் உள்ள கல்வி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.1
- பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதியில் நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர் பிளேட்டில் வாகன எண் எழுதாமல் ஜாதி அடையாளம் உள்ளிட்ட வேறு வாசகங்களுடன் பல வாகனங்கள் உலாவி வந்ததையடுத்து, பொன்னமராவதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கதிரேசன், காவலர் செந்தில் ஆகியோர் பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.1
- Post by Chella Pandi1
- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலை மிகவும் மோசமான குண்டும் குழியுமாக உள்ளது இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் அவ்வப்போது விபத்தும் நடைபெற்று வருகிறது. சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.1
- திண்டுக்கல்லில் களை கட்டிய பொங்கல் விழா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் சரவணன் குதிரை வண்டியில் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலை கட்டிய பொங்கல் விழா அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் சிறப்பாக கொண்டாடினர்1
- *மணப்பாறையில் திமுகவின் திராவிட பொங்கல் விழா.* *சமத்துவ பொங்கல் வைத்து மாநில அளவிலான கபாடி போட்டி துவக்கம்.* திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதிய காலனியில் உள்ள கலைஞர் விளையாட்டு அரங்கில் தெற்கு ஒன்றிய திமுகவின் சார்பில் திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபாடி போட்டி துவங்கியது. முன்னதாக விழா அரங்கம் முன்பாக புதுப்பானையில் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர். அதனைத்தொடர்ந்து ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற கபாடி போட்டியை திமுக திருச்சி தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் லீலாவேலு, முன்னாள் ஒன்றிய சேர்மன் அமிர்தவள்ளி ஆகியோர் முதல் போட்டியில் களமிறங்கிய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து போட்டியை துவக்கிவைத்தனர். போட்டியில் திருச்சி, திண்டுக்கல், சென்னை, கரூர், புதுக்கோட்டை, மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 அணிகள் பங்கேற்றுள்ளன. வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.30 ஆயிரம், தலா ரூ.20 ஆயிரம் மூன்றாம் நான்காம் பரிசாக வழங்கப்பட உள்ளது. போட்டியை திமுக வினர் மற்றும் கபாடி ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர்.1