திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணம், பரிசு கூப்பன்கள், டோக்கன்கள் பறிமுதல் திண்டுக்கல்லில் மணிகண்டன் தலைமையிலான தேர்தல் பறக்கும் பணியினர் நள்ளிரவில் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு விலாஸ் இறக்கம் பகுதியில் திமுக பிரமுகர் முத்துமாமுண்டி(51) என்பவர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து கொண்டிருந்தார். தேர்தல் பறக்கும் படையினரை கண்டதும் முத்துமாமுண்டி தப்பி ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் முத்துமாமுண்டியின் வீட்டை சோதனை செய்த போது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1,34,000, ரூ.8000-ம் பரிசு கூப்பன்கள், டோக்கன்கள், வாக்காளர் பட்டியல், வாக்காளர்களின் ஆதார் அட்டை நகல்கள், குடும்ப அட்டை நகல்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான்சிக்கந்தர், துணை தாசில்தார் பிரேம்குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்
திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணம், பரிசு கூப்பன்கள், டோக்கன்கள் பறிமுதல் திண்டுக்கல்லில் மணிகண்டன் தலைமையிலான தேர்தல் பறக்கும் பணியினர் நள்ளிரவில் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு விலாஸ் இறக்கம் பகுதியில் திமுக பிரமுகர் முத்துமாமுண்டி(51) என்பவர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து கொண்டிருந்தார். தேர்தல் பறக்கும் படையினரை கண்டதும் முத்துமாமுண்டி தப்பி ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் முத்துமாமுண்டியின் வீட்டை சோதனை செய்த போது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1,34,000, ரூ.8000-ம் பரிசு கூப்பன்கள், டோக்கன்கள், வாக்காளர் பட்டியல், வாக்காளர்களின் ஆதார் அட்டை நகல்கள், குடும்ப அட்டை நகல்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான்சிக்கந்தர், துணை தாசில்தார் பிரேம்குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்
- திண்டுகல் மாவட்டம் ஆண்டி நகர் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஆரம்பம் இன்று பூ அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்தில் 20/04/2026 இன்று தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு ஆத்தூர் நிலைய அலுவலர் சு.கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு ஆத்தூர் சடையாண்டி கோயில் அருகில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா வாட்டர் கம்பெனியில் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வடமதுரை மேற்கு ஒன்றிய பகுதிகளில் இன்று வேடசந்தூர் அதிமுக வேட்பாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் மக்களோடு மக்களாக தேவராட்டம் ஆடி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். அதிமுக ஆட்சியின் சாதனைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் மற்றும் வடமதுரையில் அதிமுக ஆட்சி காலத்தில் செய்த மேம்பாட்டு பணிகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி தீவிர பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் வேடசந்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- Post by G.thangarasu1
- அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் பத்மநாதன் இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் இதில் போடி வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை பகுதியில் இருந்து , திருவள்ளுவர் சிலை, காவல் நிலையம், தேவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் வீதி வீதியாக சென்று பொது மக்களை சந்தித்து தென்னந்தோப்பு சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்1
- தமிழகமெங்கும் வரும் (ஏப்ரல் 23ந்தேதி) சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் எந்த வித அச்சமின்றி 100% வாக்களிக்க வேண்டும். இதனையடுத்து இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் பிரச்சாரத்தை மாற்று வழிகளில் செய்தல் மற்றும் வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்தல்,பொருட்கள், மதுபானம் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 1950, 8939146100, 100 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.1
- மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவரங்குச்சியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனித நேயம் கட்சி வேட்பாளர் அப்துல் சமது அவர்களை ஆதரித்து செல்வகுமார் இன்று துவரங்குறிச்சி பூதநாயகம் கோவில் அருகில் உள்ள நாடக மேடையில் பேசும்போது பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் முத்தரைய சமுதாயத்தை அசிங்கப்படுத்திய ஏளனமாக பார்த்தார்கள் தமிழக முதல்வர் நல்லாட்சி நாயகன் சமூகநீதியுடன் பார்த்தார் இந்த நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கடந்து கூட அரசியலில் புறந்தள்ள பட்டு ஒதுக்கப்பட்டு முத்தரையர் சமுதாயத்தில் சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு தந்த தாய் உள்ளம் கொண்ட முதல்வர் தான் நம்ம முதல்வர் என்று செல்வகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்1
- தமிழக வெற்றிக்கழக சார்பாக பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சபரி என்பவருக்கு ஆதரவாக கம்பம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா இன்று வடுகபட்டி பகுதியில் பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் அப்போது தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை போதைப் பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர் தமிழகம் முழுவதும் மது விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதால் இளைஞர்கள் மாணவர்களின் மது பழக்கத்துக்கு அடிமையாகி அவர்கள் வாழ்க்கை சீர்குலைந்துள்ளது திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விசில் சின்னத்துக்கு வாக்களித்து தளபதி விஜய் அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் என பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்1