அருமனை அருகே பஸ் ஏற முயன்ற போது பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அருமனை அருகே பஸ் ஏற முயன்றபோது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - பைக்கில் தப்பிய வாலிபருக்கு வலை அருமனை அருகே உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பஸ் ஏற முயன்றபோது மாணவிக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருமனை அருகே ஆண்டுகோடு பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கூடம் முடித்தும் வீட்டிற்கு செல்வதற்காக மாணவிகள் பள்ளிக்கு அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது பஸ் ஒன்று வந்துள்ளது. அதில் ஏறுவதற்காக பத்தாம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் பஸ் படிக்கட்டில் கால் வைத்துள்ளனர். அந்த சமயம் பஸ்சின் பின்னால் இருந்து திடீரென ஓடி வந்த வாலிபர் ஒருவர் படிக்கட்டில் ஏறி கொண்டிருந்த 2 மாணவிகளுக்கும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துவிட்டு பஸ்சுக்கு பின்னால் நின்ற பைக்கை எடுத்து கொண்டு வேகமாக தப்பி சென்று விட்டார். இதை பார்த்துக் கொண்டிருந்த சக மாணவர்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட 2 மாணவிகளையும் பள்ளிக்கூடத்திற்குள் அழைத்து சென்று அங்கிருந்த ஆசிரியர்களிடம் நடந்த விவரத்தை கூறினர். பின்னர் ஆசிரியர்கள் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பஸ்சின் பின்னால் வந்த ஒரு காரில் இருந்த சிசிடிவி கேமராவில் வாலிபர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காட்சிகள் பதிவு ஆகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் பள்ளி மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி அருகே மாணவிகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் போது போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிங்கப்பெண் படையை சேர்ந்த போலீசார் பள்ளிக்கூட பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கோரிக்கையும் எழுந்துள்ளது.
அருமனை அருகே பஸ் ஏற முயன்ற போது பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அருமனை அருகே பஸ் ஏற முயன்றபோது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - பைக்கில் தப்பிய வாலிபருக்கு வலை அருமனை அருகே உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பஸ் ஏற முயன்றபோது மாணவிக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருமனை அருகே ஆண்டுகோடு பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கூடம் முடித்தும் வீட்டிற்கு செல்வதற்காக மாணவிகள் பள்ளிக்கு அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது பஸ் ஒன்று வந்துள்ளது. அதில் ஏறுவதற்காக பத்தாம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் பஸ் படிக்கட்டில் கால் வைத்துள்ளனர். அந்த சமயம் பஸ்சின் பின்னால் இருந்து திடீரென ஓடி வந்த வாலிபர் ஒருவர் படிக்கட்டில் ஏறி கொண்டிருந்த 2 மாணவிகளுக்கும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துவிட்டு பஸ்சுக்கு பின்னால் நின்ற பைக்கை எடுத்து கொண்டு வேகமாக தப்பி சென்று விட்டார். இதை பார்த்துக் கொண்டிருந்த சக மாணவர்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட 2 மாணவிகளையும் பள்ளிக்கூடத்திற்குள் அழைத்து சென்று அங்கிருந்த ஆசிரியர்களிடம் நடந்த விவரத்தை கூறினர். பின்னர் ஆசிரியர்கள் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பஸ்சின் பின்னால் வந்த ஒரு காரில் இருந்த சிசிடிவி கேமராவில் வாலிபர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காட்சிகள் பதிவு ஆகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் பள்ளி மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி அருகே மாணவிகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் போது போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிங்கப்பெண் படையை சேர்ந்த போலீசார் பள்ளிக்கூட பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கோரிக்கையும் எழுந்துள்ளது.
- இருதயத்தில் உள்ள இரத்த அடைப்பை மாற்ற இந்த பொருட்களை பயன்படுத்துங்கள்1
- த.வெ.க சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா. தமிழக வெற்றி கழக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 100 நாட்கள் நிறைவடைந்ததை கொண்டாடி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. இதில் சமபந்தி விருந்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தூய்மை பணியாளர்களோடு சேர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வானது த.வெ.க நிர்வாகி பால்ராஜ் முன்னிலையில் த.வெ.க கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் நலத்திட்டங்களை வழங்கினார். தூய்மை பணியாளர்கள் அனைவரும் சமபந்தி விருந்து அளித்த த.வெ.க வினரை பாராட்டி வாழ்த்தி சென்றனர்.1
- கிருஷ்ணன் கோவில் ஆதிபராசக்தி சித்தர் பீட கோவிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவிலில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீட கோவிலில் இன்று ஓணம் பண்டிகையை ஒட்டி ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது.இதனை ஒட்டி கோவிலில் அம்மன் சன்னதி முன்பு பல்வேறு வகை பூக்களினால் பெண்கள் கேரள பாரம்பரிய உடை அணிந்த நிலையில் அத்தப் பூ கோலமிட்டனர்.பின்னர் கோவிலில் சிறப்பு பூஜையும் வழிபாடும் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை சித்தர் பீட தலைவர் சின்னத்தம்பி செய்து இருந்தார்.1
- தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது இந்நிலையில் இன்று விடுமுறை தினமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது இதனால் ஐந்தருவி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது1
- கயத்தாறு தாலுகா தலையால் நடந்தால் குளம் கிராமத்தில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த புதிய பேருந்து புதிய வழித்தடத்தில் தொடக்கம் கயத்தாறு தாலுகா தெற்கு மயிலோடை பஞ்சாயத்தை சேர்ந்த தலையால் நடந்தான்குளம் கிராமத்திற்கு திருநெல்வேலி சங்கர் நகர் கங்கைகொண்டான் பார்த்திங்களா ராஜா பெருங்குடி வழியாக தலையால் நடந்தால் கிராமத்திற்கு தமிழக முதல்வர் தொடங்கி வைத்த பஸ்களில் இந்த 9 எல் என்ற வழித்தடத்தில் இந்த புதிய பஸ்சை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் தொடக்க விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இணை செயலாளர் கருப்பசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர், தலையால் நடந்தால் குளம் கிளைச் செயலாளர் பால்பண்ணைமுத்து, ஏ.சி.பால்முருகன்,கவிதா, கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் பேச்சியம்மாள், மற்றும் கட்சி நிர்வாகிகள் வள்ளிவேல், முத்துமாலை, பலவேசமுத்து, இமானுவேல், முத்துக்குமார், ஊர் நாட்டாண்மைகள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.4
- திருச்செந்தூர் அருகே பெருங்குளம் குளத்தில் குவியும் உள்நாட்டு பறவைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலர். பெருங்குளம் குளத்தில் குவியும் உள்நாட்டு பறவைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயிலும், வறட்சியும் நிலவி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படும் நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளம் குளத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணைக்கட்டில் இருந்து பிரியும் கீழக்கால்வாயின் கடைசி குளமாக பெருங்குளம் அமைந்துள்ளது. சுமார் 900 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் தற்போது தண்ணீர் அதிகளவில் இருப்பதால், ஏராளமான உள்நாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக நத்தை கொத்தி நாரை, கருப்புகோட்டான், கரண்டிவாயன், அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, ஜம்பு நாரை, சாம்பல் நாரை, மூக்குழிப்பான், பாம்பு தாரா, கூழைக்கடா உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் பெருங்குளத்தில் முகாமிட்டுள்ளன. இதுதவிர வெள்ளைக் கொக்கு, பெரிய கொக்கு, சாம்பல் கொக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான கொக்குகளும் காணப்படுகின்றன. தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் பெருங்குளம் குளத்தில் முகாமிட்டுள்ளது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக குளத்தில் இறங்கும் பறவைகள், அங்குள்ள மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை உணவாக உட்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் பெருங்குளம் குளத்தில் காணப்படும் உள்நாட்டு பறவைகளை பார்வையிட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் வருகை தந்தார். வருகை தந்த அவர் பைனாகுலர் கொண்டு குளத்தில் காணப்படும் பறவைகளை பார்வையிட்டு அங்கு நின்ற மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார். தொடர்ந்து பறவைகளை பாதுகாப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.1
- தூத்துக்குடி மழைக்கால நிவாரணம் உயர்வு தொழிலாளர்கள் கொண்டாட்டம் தூத்துக்குடி உப்பளதொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரணம் ரூபாய் 5 ஆயிரத்திலிருந்து 7000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து உட்பள தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் அனைத்து உப்பள தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது மேலும் இந்த உப்பு உற்பத்தியில் 80 சதவீதம் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உட்பட தொழிலாளர்கள் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூபாய் 5000 இலிருந்து பத்தாயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டுமென உப்பள தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழக அரசு உப்பள தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரணத்தை ரூபாய் 5000 லிருந்து 7000 ஆக உயர்த்தி வழங்கபடும் என சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இதைத்தொடர்ந்து மழைக்கால நிவாரணத் தொகையை 7000 ஆக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி முடுக்கு காடு பகுதியில் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உப்பள தொழிலாளர் ராமலட்சுமி தலைமையில் பெண் உட்பள தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் மழைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் தொழிற்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது உடன் உட்பள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மழைக்கால நிவாரணத்தை அனைத்து உப்பள தொழிலாளர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு தான் என்று இருக்கும் அரசாணையை ரத்து செய்து குடும்பத்தில் கணவன் மனைவி உட்பள தொழிலாளர்களாக இருந்தால் அவர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் முடங்கி கிடக்கும் உப்பள தொழிலாளர்கள் நல வாரியத்தை முறையாக செயல்படுத்தி உப்பள தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர் மேலும் உப்பளங்களில் உப்பள தொழிலாளர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் உட்பள தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம்கள் உபகரணங்கள் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் மேலும் மழைக்கால நிவாரணத்தை ரூபாய் பத்தாயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.1
- கோதை கிராமம் காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு -பக்தர்கள் தரிசனம் நாகர்கோவிலில் அடுத்துள்ள கோதை கிராமம் காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்பாள் திருக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஒட்டி சிவபெருமானுக்கு பால் பன்னீர் சந்தனம் களபம் தயிர் மூலிகைச்சாறு உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பிரதோஷ விநாயகர் காளை வாகனத்தில் கோவிலை மும்முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.1