Shuru
Apke Nagar Ki App…
அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
More news from தமிழ்நாடு and nearby areas
- கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிம். மன்னவனூர். ஊராட்சி கவுஞ்சி. ராஜபுரம். மற்றும் அருந்ததியர் காலனி ஆகிய பகுதிகளில். கடந்த ஒரு வார காலமாக குடிதண்ணீர். தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மக்கள் பெரும் அவதி கண்டு கொள்ளுமா மாவட்ட நிர்வாகம் குடிநீருக்காக சுற்றி உள்ள பகுதி மக்கள் அவதி......1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- சென்னை இராயபுரம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சின்னசேமியம்மன் திருக்கோவிலில் 40ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா மற்றும் வடபத்திரகாளி அம்மனுக்கு 9ஆம் ஆண்டு வளையல் திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அக்கினி கூண்டு மற்றும் அக்னி சட்னி எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.1
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்களால் ஸ்ரீ பெருமந்தூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனபுறம் கே .பழனி அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ஸ்ரீ பெருமந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜான், நகர செயலாளர் போந்தூர் மோகன், கழக பாசறை துணை செயலாளர் இருங்காட்டுக்கோட்டை சிவக்குமார் , கழக செயலாளர் இறையூர் முனுசாமி, மாவட்ட பிரதிநிதி சார்லஸ், கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிள்ளைப்பாக்கம் வெங்கடேசன், கொளத்தூர் கிளை செயலாளர் பிச்சிமணி, மண்ணூர் ஊராட்சி மன்ற தலைவர் அரிவிச்செல்வன், தண்டலம் கவுன்சிலர் கோபிநாத், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- *விழுப்புரம் மாவட்ட காவல்துறை* *விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு* *விற்பனைக்காக இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்தவர் கைது* புதுச்சேரியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மதுபானங்கள் எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் .ஆனந்தி, உதவி ஆய்வாளர் .லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் தலைமையில் V.அகரம்பாட்டை மெயின் ரோட்டில் வாகன தணிக்கை செய்ததில் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் ஒருகோடி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராஜாமணி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (41) என்பது தெரிவந்ததை அடுத்து குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்2
- கிருஷ்ணகிரிநகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டுபகுதியில் ரம்ஜான் மற்றும் உரூஸ் திருவிழாவினை முன்னிட்டு ஹக்கே பஞ்சத்தன் பொதுஅறக்கட்டளை சார்பாக ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி உணவுவழங்கும் விழா நடைபெற்றது. ஹக்கே பஞ்சத்தன்பொது அறக்கட்டளை நிறுவனர் அன்சர் தலைமையில் நடைபெற்றது.சையத் பாஷா மலையின் மேல் உள்ள தர்காவில் சிறப்பு துவா பாத்தியா நடைபெற்றது1
- நாகப்பட்டினம் மாவட்டம் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாகை தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாத்திமா பர்கானா போட்டி இடுவதை சிக்கல் அருள்மிகு சிங்கார வேலர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்து விட்டு நாகை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதால் மேளதாளம் முழங்க புறப்பட்டார். நாம் தமிழர் கட்சி உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.3
- Post by அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்1