Shuru
Apke Nagar Ki App…
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்துச்செல்லும் பேட்டரி வாகனம் பழுதாகியுள்ளதால், மாற்றுத்திறனாளிகள் பஸ் ஸ்டாப்பில் இருந்து மருத்துவமனை வளாகத்திற்கு சிகிச்சைக்காகச் செல்வதில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் 24 மணிநேரமும் அவசர சிகிச்சை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை புறநோயாளிகள் பிரிவு இயங்குகிறது. தினசரி 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வரும் நிலையில், சுமார் 800 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Ramaraj
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்துச்செல்லும் பேட்டரி வாகனம் பழுதாகியுள்ளதால், மாற்றுத்திறனாளிகள் பஸ் ஸ்டாப்பில் இருந்து மருத்துவமனை வளாகத்திற்கு சிகிச்சைக்காகச் செல்வதில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் 24 மணிநேரமும் அவசர சிகிச்சை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை புறநோயாளிகள் பிரிவு இயங்குகிறது. தினசரி 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வரும் நிலையில், சுமார் 800 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- காரைக்குடியில் அமைந்துள்ள சித்தர் அரசயோகி கருவூரார் திருக்கோயிலில் நேற்று ஆசாட நவராத்திரி திருவிழாவின் ஐந்தாம் நாள் பஞ்சமியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு சிறப்பான முறையில் பூஜை நடைபெற்றது. வாராகி அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் மாதுளை முத்துக்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையைத் தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டதுடன், அப்பகுதி பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு வழிபட்டனர்.1
- சிங்கம்புணரி அருகே முறையூரில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலின் ஆனி திருமஞ்சன பெருவிழா இன்று (ஜூன் 20) கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. இந்த விழாவின் தொடக்கமாக, ரிஷப கொடியுடன் ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகள் விமர்சையாக நடைபெற்றன. சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, ஜூன் 27 அன்று திருக்கல்யாணம் மற்றும் ஜூன் 28 அன்று திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.1
- தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று (ஜூன் 19) இரவு மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு தங்கத்தேர் வழிபாடு நடைபெற்றது. தவெக நிர்வாகிகள் சசி முருகன் மற்றும் ரேஷன் கடை கார்த்திக் ஆகியோரின் ஏற்பாட்டில் நடந்த இந்த வழிபாட்டில், ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு தங்கத் தேரினை இழுத்து முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா நெம்மேலிக்காடு கிராமத்தில் உள்ள ஒரு குளத்தின் நடுவே உயர்அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. இந்த கம்பிகளைத் தாங்கி நிற்கும் மூன்று மின்கம்பங்கள் காங்கிரீட் உதிர்ந்து, எந்நேரமும் ஒடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்தால், அப்பகுதியில் பெரிய அளவிலான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, தற்போது குளத்தில் தண்ணீர் இல்லாத சூழலைப் பயன்படுத்தி, இந்த மூன்று ஆபத்தான மின் கம்பங்களையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக நிர்வாகம் உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பெரியார் நகர் சிறுவர் பூங்காவில், ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு தினத்தையொட்டியும், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும், மரம் நடு விழா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சாத்தூர் நகர் தலைவர் குருசாமி, நகராட்சி ஆணையாளர் ஜெகதீஸ்வரி, தொண்டு நிறுவன அமைப்பினர், சிலம்பம் கலைக்கூட ஆசான் மற்றும் மாணவ மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தொண்டு நிறுவன அமைப்பினர், பொதுமக்கள் ஆர்வத்துடன் விலங்குகளை வளர்ப்போம் என்ற எண்ணத்தில் மாடுகளை சாலைகளில் துரத்திவிடுவது பெரும் ஆபத்தை விளைவிப்பதாகக் குறிப்பிட்டனர். இதேபோன்று, நாய்களை விருப்பப்பட்டு வளர்த்து, பின்பு பராமரிக்க முடியாமல் தெருக்களில் விட்டுவிடுவதால் பல்வேறு இடர்பாடுகளும் பொதுமக்களுக்கு ஆபத்தும் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினர். இதனால் பொதுமக்கள் முறைப்படி நாய்களை வளர்க்க லைசன்ஸ் பெற்று வளர்க்க வேண்டும் என்றும், ஆர்வத்துடன் நாய்களை வளர்த்து தெருவில் விட்டுவிடுவதால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, நாகர்கோவில் சேர்மன், ஆணையாளர், தொண்டு நிறுவன அமைப்பினர் மற்றும் மாணவர்கள் அனைவரும் அப்பகுதியில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், பிளாஸ்டிக்கால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்து, பிளாஸ்டிக் ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர். இறுதியாக, சிலம்பக் கலைக்கூட மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையான சிலம்பக் கலைகளைச் சுழற்றி வெளிப்படுத்தினர்.1
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் விமானப் பயிற்சி மையத்தின் (Flying Training Organization - FTO) கட்டுமானப் பணிகளைக் கண்காணிப்பதற்கான முக்கிய நடவடிக்கையை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (TIDCO) மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிறுவனமான TIDCO, இந்தப் பணிகளை மேற்பார்வையிட ஒரு சுயாதீன பொறியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான மின்னணு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, கட்டுமானப் பணிகளின் தரம், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் திட்ட முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்து ஆலோசனை வழங்கும் தகுதியான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள நிறுவனங்கள் டெண்டர் ஆவணங்களை TIDCO மற்றும் தமிழ்நாடு அரசின் மின்னணு டெண்டர் இணையதளங்களிலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒப்பந்தப் புள்ளிகள் மற்றும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற ஜூலை 15ஆம் தேதி மதியம் 3 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விமானப் பயிற்சி மையம் கோவில்பட்டி வட்டம் கயத்தாறு பகுதியில் அமைய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் உயர்தரத்துடன் பணிகள் நிறைவேறுவதை உறுதி செய்வதே இந்த டெண்டரின் முக்கிய நோக்கம் என்று TIDCO தெரிவித்துள்ளது. கோவில்பட்டியில் உருவாகி வரும் இந்த விமானப் பயிற்சி மையம் செயல்பாட்டுக்கு வந்தால், தமிழகத்தில் விமானப் பயிற்சி மற்றும் விமானத் துறை சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் வலுப்பெறும் எனக் கருதப்படுகிறது. மேலும், தென் தமிழக இளைஞர்களுக்கு விமானப் பயிற்சி பெறும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்பதுடன், அப்பகுதியின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் இது ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.1
- முக்கண்ணாமலைப்பட்டியில் அன்னவாசல் காவல்துறையினர் நடை ரோந்துப் பணியிலும், விழிப்புணர்வுப் பணியிலும் ஈடுபட்டனர்.1
- தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகேயுள்ள ராசா பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பாலாஜி பட்டாசு ஆலையில் இன்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்தவர்கள் பட்டாசு ஆலைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். சாத்தூர் அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட சுமார் 15க்கும் மேற்பட்டோருக்கு முதலுதவி மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் நத்தத்துப்பட்டி, மாசார்பட்டி, எம். நாகலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்; இவர்களில் அதிகமான பெண்கள் அடங்குவர். இந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.1