Shuru
Apke Nagar Ki App…
*எட்டையாபுரம் ஜோதி நாயகி சமேத எட்டீஸ்வரர் மூர்த்தி சிவன் கோவில் மற்றும் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவிலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நமது மண்ணின் மைந்தர் வெற்றி வேட்பாளர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் சுவாமி தரிசனம் செய்தார்கள்.* உடன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர நாராயணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மா.சுடலைமணி
*எட்டையாபுரம் ஜோதி நாயகி சமேத எட்டீஸ்வரர் மூர்த்தி சிவன் கோவில் மற்றும் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவிலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நமது மண்ணின் மைந்தர் வெற்றி வேட்பாளர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் சுவாமி தரிசனம் செய்தார்கள்.* உடன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர நாராயணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- இரண்டாவதாக திமுக பற்றி கண்டன தெரிவித்த பாஜக இணையதளத்தில் வெளியிட்ட வீடியோ1
- Post by மா.கணேஷ்1
- கயத்தாறு யூனியனைச் சேர்ந்த செட்டி குறிச்சி பஞ்சாயத்தில் வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் அருள்மிகு வரணவீராச்சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இவ்விழாவிற்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்தில் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜ் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேகத்தில் கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவைச் இணைச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன் செட்டி குறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.4
- வேட்புமனு தாக்கல் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.கவிதா அவர்கள் நாள் : ( 30-03-2026) அன்று காலை 11 மணி அளவில் தள்ளுவண்டியை கொண்டு சாலையில் தள்ளிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தார்2
- தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் அறிமுக கூட்டம் நடந்தது இதில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் அறிமுகப்படுத்தி பேசினார்1
- விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு துணைமாலை அம்மன் சமேத ஸ்ரீ திருமேனிநாதர் திருக்கோவிலில் பங்குனி மஹா திருவிழாவை முன்னிட்டு இன்று முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோயிலின் ஆண்டு திருவிழா கடந்த மார்ச் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் சிம்ம வாகனம், கிளி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நேற்றைய தினம் திருக்கல்யாண வைபவம் நடைபெற்ற நிலையில், இன்று நடைபெற்ற திருத்தேரோட்டம் திருவிழாவின் உச்ச நிகழ்வாக அமைந்தது. சிவ வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் “சிவாய நம” கோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு ஒலித்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். திருத்தேரானது தீயணைப்பு நிலையம், மேலரத வீதி, தெற்கு ரத வீதி, தேவர் சிலை, காவல் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று இறுதியில் கோவிலை வந்தடைந்தது. வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரில் வீற்றிருந்த சுவாமி மற்றும் அம்பாளை வழிபட்டு மகிழ்ந்தனர். திருவிழாவை முன்னிட்டு திருச்சுழி காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.1
- 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைந்துள்ளதாக அதன் தலைவர் கருணாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தரும்1
- திமுகவை பற்றி கேவலமாக பேசும் பாஜக இணையதளத்தில் வெளியீடு1