Shuru
Apke Nagar Ki App…
மறவமங்கலம் இடுகாட்டில் மின்கம்பம் சாய்ந்து 20 நாட்களாக ஆகியும் இன்று வரை சரிசெய்ய வில்லை இடம் கிழக்குத்தெரு
A.poovan
மறவமங்கலம் இடுகாட்டில் மின்கம்பம் சாய்ந்து 20 நாட்களாக ஆகியும் இன்று வரை சரிசெய்ய வில்லை இடம் கிழக்குத்தெரு
More news from தமிழ்நாடு and nearby areas
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சியோன் நகரில் கடந்த 6 ஆம் தேதி இருவரை வாளால் வெட்டிய வழக்கில் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் கோபி ஆகிய வரை போலீசார் கைது செய்தனர் இதில் ஆகாஷ் போலீசார் கைது செய்த போது மேல பசலை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அதற்கான சிகிச்சை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆகாஷ் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்ததாக தெரிய வருகிறது இந்நிலையில் ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் மானாமதுரையில் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் மதுரை உயர்நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்ட நிலையிலும் மூன்றாவது நாளாக இந்த போராட்டம் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது அது மட்டுமல்லாமல் போக்குவரத்தும் 30 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகள் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாததால் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது இந்தப் போராட்டம் நடத்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களில் கோரிக்கையாக உள்ளது.1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்தி வரும் சாலை மறியல் போராட்டம் 24 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதனால் மதுரை–இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதும் உடன்பாடு எட்டப்படவில்லை. நள்ளிரவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், அதிகாலையில் மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.1
- மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோவில் பயங்கர தீபத்தில் உரிய நடவடிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அறநிலைத்துறையில் கேட்டுக்கொள்கிறீர்களா1
- மதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆகாஷ் என்ற பட்டியலின இளைஞர் காவல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகாஷ் என்ற இளைஞரை கொலை செய்துவிட்டது. இந்த மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒரே சாதியினராக இருந்து கொண்டு, சாதி சங்கங்களைப் போல செயல்படுகின்றனர். ஏற்கனவே மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறையினரால் கொல்லப்பட்ட சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆகாஷ் என்ற இளைஞரின் காலை உடைத்தது காவல்துறைதான். ஆனால், அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றதாக காவல்துறை பொய் சொல்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.1
- திருமங்கலம் பன்னிரண்டாவது வார்டு முனிசிபல் காலனி பகுதியில் சுமார் மூன்று மாத காலமாக கழிவுநீர் சாக்கடை அடைத்துக் கொண்டிருக்கிறது அதில் கொசு புழு உற்பத்தி ஆகிறது சிறுவர்களுக்கு காய்ச்சல் அப்பப்போது வருகிறது அதனால் சாக்கடை மற்றும் சாக்கடை போகும் பாதையை சரி செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நன்றி4
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்1
- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த சிறுகனூரில் நேற்று திமுக மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் . பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அதேநேரம் முதல்வர் விமான நிலையம் செல்லும் திருச்சி -புதுக்கோட்டை சாலையில் நாளை 11 ஆம் தேதி திருச்சி வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று, வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சியினர் மற்றும் போலீசார் அகற்றி சாலையில் வீசி எறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.1
- மானாமதுரை அருகே இளைஞர் ஆகாஷ் மரணத்துக்கு நீதி கோரி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தும் சாலை மறியல் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. நூற்றுக்கணக்கானோர் சாலையில் அமர்ந்து முழக்கமிட்டதால் மதுரை–ராமேஸ்வரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி வலியுறுத்தப்பட்ட நிலையில், அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.1