பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூல் செய்து அமலாக்கத்துறை கட்டுப்பாடு இருக்கும் அமைச்சரையும், பணி நியமனம்,பணி ஒப்பந்தம் செய்த அமைச்சரின் முறைகேடுகளை ஆதாரத்தோடு குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை குறித்து இதுவரை முதலமைச்சர் ஏன் விளக்கம் சொல்லவில்லை ? தலையில் மீது கத்தி தொங்கும் தனக்கு ஆதரவாக திருச்சி மாநாட்டில் விளக்கம் சொல்வார் என எதிர்பார்த்த அமைச்சர் நேருக்கு ஏமாற்றமே மிஞ்சியது ? எடப்பாடியார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை பற்றி ஸ்டாலின் எத்தனை அவதூறு பிரச்சாரத்தை செய்தாலும் மக்கள் நம்ப மாட்டார்கள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வலுவாக உள்ளது தற்போது ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி எங்கே உள்ளது ? சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூல் செய்து அமலாக்கத்துறை கட்டுப்பாடு இருக்கும் அமைச்சரையும், பணி நியமனம்,பணி ஒப்பந்தம் செய்த அமைச்சரின் முறைகேடுகளை ஆதாரத்தோடு குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை குறித்து இதுவரை முதலமைச்சர் ஏன் விளக்கம் சொல்லவில்லை ? தலையில் மீது கத்தி தொங்கும் தனக்கு ஆதரவாக திருச்சி மாநாட்டில் விளக்கம் சொல்வார் என எதிர்பார்த்த அமைச்சர் நேருக்கு ஏமாற்றமே மிஞ்சியது ? எடப்பாடியார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை பற்றி ஸ்டாலின் எத்தனை அவதூறு பிரச்சாரத்தை செய்தாலும் மக்கள் நம்ப மாட்டார்கள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வலுவாக உள்ளது தற்போது ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி எங்கே உள்ளது ? சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் ஸ்டாலின் பேசியதற்கு பதிலடி கொடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது; நடைபெற்ற திமுக திருச்சி மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்றனர் என முதலமைச்சர் ஸ்டாலின் இருமாப்புடன் பேசி உள்ளார். அதில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பற்றி கற்பனை கலந்த விமர்சனத்தை செய்துள்ளார் கட்சியை டெல்லியில் அடமானம் வைத்து விட்டார் எடப்பாடியார் என்றும், அதிமுகவை பாஜக விழுங்க பார்க்கிறது என்றும்,அதிமுக கூட்டணி சாரி அப்படி சொன்னால் மோடிஜி, அமிர்ஷாஜி கோபித்துக் கொள்வார்கள் என்று தேசிய ஜனநாயக கூட்டணி பற்றி நக்கலாக சொல்லி உள்ளார். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது தற்போது அவர் சார்ந்த கூட்டணி எங்கே உள்ளது என்பதை அவர் விளக்கம் சொல்ல முன் வருவாரா? பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூல் செய்து இன்றைக்கு அமலாக்க துறை விசாரணை கட்டுப்பாடு இருக்கும் அமைச்சரையும், பணி நியமனம், பணி மாறுதல், பணி ஒப்பந்தம் ஆகியவற்றில் அமைச்சரின் முறைகேடு குறித்து அமலாக்கத்துறை எழுதிய கடிதம் பற்றி, திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் அமலாக்கத்துறை அளித்துள்ள குற்றச்சாட்டு குறித்து ஒரு வரி கூட விளக்கம் சொல்லவில்லை. ஆனால் அதிமுக வெற்றி கூட்டணிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நன்மதிப்பை குறைக்க வகையில் அவர் பேசியுள்ளார் அது ஒருபோதும் மக்களிடம் எடுபடாது. இன்றைக்கு திருச்சியில் மாநாடு நடத்தியுள்ளனர் அதற்கு எங்கே இருந்து நிதி வந்தது? இன்றைக்கு திருச்சி திமுக மாநாட்டை நடத்திய அமைச்சர் மீது அமலாகத்துறை ஆதாரங்கள் முறைகேடு குறித்து கடிதம் கொடுத்துள்ளது. தனது தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது இது குறித்து மாநாட்டில் விளக்கம் சொல்லுவார் அல்லது ஒரு கருத்தை கூட பதிவு செய்வார் என்று அமைச்சர் நேரு எதிர்பார்த்து இருந்தார். ஆனால் தனக்கு ஆதரவாக ஒரு கருத்தை கூட ஸ்டாலின் சொல்லவில்லை என்பதால் அந்த மாநாடு நடத்திய நேருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழகத்தை ஒரு குடும்பத்தின் நாடாக மாற்றுவதற்கு ஸ்டாலின் எடுத்து வரும் முயற்சிக்கு இன்றைக்கு எடப்பாடியார் சிம்ம சொப்பனமாக இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியை சிறப்பாக தமிழகத்தில் வழி நடத்தி வருகிறார் . இன்றைக்கு திமுகவை நெஞ்சுரத்துடன் எதிர்க்கும் கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது.இன்றைக்கு மக்களின் நம்பிக்கை பெற்ற கூட்டணியாகவும் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. இன்றைக்கு மக்கள் நம்பிக்கை பெற்ற இந்த கூட்டணியை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல் திசை திருப்பும் வேலையில் தான் மாநாட்டில் ஸ்டாலின் கூப்பாடு போட்டு உள்ளார். அந்த மாநாட்டில் பொய்யை மாலையாக தொடுத்துள்ளார் ஆனால் உண்மையை ஒருபோதும் மறைக்க முடியாது .இன்றைக்கு திமுகவை மக்கள் நிராகரித்து விட்டனர் அதனால் திமுக வண்டவாளம், தண்டவாளம் ஏறிவிடும் என்ற அச்சம் உள்ளது. அதனால் தான் தேசிய ஜனநாயக கூட்டணி பற்றி வாய் கூசாமல் விமர்சனம் செய்து வருகிறார். எடப்பாடியார் பல்வேறு சாதனைகள் செய்தார், அதேபோல மத்திய அரசும் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை தந்தது. மத்திய அரசும், மாநில அரசு இணைந்து தான் மாநிலத்தின் வளர்ச்சியை பெற முடியும். தமிழ்நாட்டில் அது போன்ற வளர்ச்சியை எடப்பாடியார் பெற்று தந்தார். இதையெல்லாம் தங்கள் வசதிக்காக மறைத்துவிட்டு ஏதோ ஸ்டாலின் புலம்பி வருகிறார் .அதிகாரம் போய்விடும் என்ற அச்சத்தில் இன்றைக்கு ஸ்டாலின் அறைகூவல் விடுவதை தமிழக மக்கள் நிராகரித்து விட்டனர். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் . பாரதப் பிரதமர் தொடர்ந்து திமுகவின் பொய் முகத்திரையை மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடியார் வருவார். வரும் தேர்தலில் உங்களுக்கு சரியான பதிலடியை மக்கள் கொடுப்பார்கள் அப்போதுதான் உண்மையான கள நிலவரம் என்ன என்பதை உங்களுக்கு புரியும். இன்றைக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம், மூன்று லட்சம், நாலு லட்சம் என தொண்டர்களை கூப்பிட்டு கூப்பாடு போட்டாலும் ஒருபோதும் மக்களிடத்தில் எடுபடாது. எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் செல்வாக்கை ஒருபோதும் திசை திருப்ப முடியாது எனக் கூறினார்.
பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூல் செய்து அமலாக்கத்துறை கட்டுப்பாடு இருக்கும் அமைச்சரையும், பணி நியமனம்,பணி ஒப்பந்தம் செய்த அமைச்சரின் முறைகேடுகளை ஆதாரத்தோடு குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை குறித்து இதுவரை முதலமைச்சர் ஏன் விளக்கம் சொல்லவில்லை ? தலையில் மீது கத்தி தொங்கும் தனக்கு ஆதரவாக திருச்சி மாநாட்டில் விளக்கம் சொல்வார் என எதிர்பார்த்த அமைச்சர் நேருக்கு ஏமாற்றமே மிஞ்சியது ? எடப்பாடியார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை பற்றி ஸ்டாலின் எத்தனை அவதூறு பிரச்சாரத்தை செய்தாலும் மக்கள் நம்ப மாட்டார்கள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வலுவாக உள்ளது தற்போது ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி எங்கே உள்ளது ? சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூல் செய்து அமலாக்கத்துறை கட்டுப்பாடு இருக்கும் அமைச்சரையும், பணி நியமனம்,பணி ஒப்பந்தம் செய்த அமைச்சரின் முறைகேடுகளை ஆதாரத்தோடு குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை குறித்து இதுவரை முதலமைச்சர் ஏன் விளக்கம் சொல்லவில்லை ? தலையில் மீது கத்தி தொங்கும் தனக்கு ஆதரவாக திருச்சி மாநாட்டில் விளக்கம் சொல்வார் என எதிர்பார்த்த அமைச்சர் நேருக்கு ஏமாற்றமே மிஞ்சியது ? எடப்பாடியார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை பற்றி ஸ்டாலின் எத்தனை அவதூறு பிரச்சாரத்தை செய்தாலும் மக்கள் நம்ப மாட்டார்கள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வலுவாக உள்ளது தற்போது ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி எங்கே உள்ளது ? சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் ஸ்டாலின் பேசியதற்கு பதிலடி கொடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது; நடைபெற்ற திமுக திருச்சி மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்றனர் என முதலமைச்சர் ஸ்டாலின் இருமாப்புடன் பேசி உள்ளார். அதில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பற்றி கற்பனை கலந்த விமர்சனத்தை செய்துள்ளார் கட்சியை டெல்லியில் அடமானம் வைத்து விட்டார் எடப்பாடியார் என்றும், அதிமுகவை பாஜக விழுங்க பார்க்கிறது என்றும்,அதிமுக கூட்டணி சாரி அப்படி சொன்னால் மோடிஜி, அமிர்ஷாஜி கோபித்துக் கொள்வார்கள் என்று தேசிய ஜனநாயக கூட்டணி பற்றி நக்கலாக சொல்லி உள்ளார். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது தற்போது அவர் சார்ந்த கூட்டணி எங்கே உள்ளது என்பதை அவர் விளக்கம் சொல்ல முன் வருவாரா? பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூல் செய்து இன்றைக்கு அமலாக்க துறை விசாரணை கட்டுப்பாடு இருக்கும் அமைச்சரையும், பணி நியமனம், பணி மாறுதல், பணி ஒப்பந்தம் ஆகியவற்றில் அமைச்சரின் முறைகேடு குறித்து அமலாக்கத்துறை எழுதிய கடிதம் பற்றி, திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் அமலாக்கத்துறை அளித்துள்ள குற்றச்சாட்டு குறித்து ஒரு வரி கூட விளக்கம் சொல்லவில்லை. ஆனால் அதிமுக வெற்றி கூட்டணிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நன்மதிப்பை குறைக்க வகையில் அவர் பேசியுள்ளார் அது ஒருபோதும் மக்களிடம் எடுபடாது. இன்றைக்கு திருச்சியில் மாநாடு நடத்தியுள்ளனர் அதற்கு எங்கே இருந்து நிதி வந்தது? இன்றைக்கு திருச்சி திமுக மாநாட்டை நடத்திய அமைச்சர் மீது அமலாகத்துறை ஆதாரங்கள் முறைகேடு குறித்து கடிதம் கொடுத்துள்ளது. தனது தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது இது குறித்து மாநாட்டில் விளக்கம் சொல்லுவார் அல்லது ஒரு கருத்தை கூட பதிவு செய்வார் என்று அமைச்சர் நேரு எதிர்பார்த்து இருந்தார். ஆனால் தனக்கு ஆதரவாக ஒரு கருத்தை கூட ஸ்டாலின் சொல்லவில்லை என்பதால் அந்த மாநாடு நடத்திய நேருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழகத்தை ஒரு குடும்பத்தின் நாடாக மாற்றுவதற்கு ஸ்டாலின் எடுத்து வரும் முயற்சிக்கு இன்றைக்கு எடப்பாடியார் சிம்ம சொப்பனமாக இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியை சிறப்பாக தமிழகத்தில் வழி நடத்தி வருகிறார் . இன்றைக்கு திமுகவை நெஞ்சுரத்துடன் எதிர்க்கும் கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது.இன்றைக்கு மக்களின் நம்பிக்கை பெற்ற கூட்டணியாகவும் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. இன்றைக்கு மக்கள் நம்பிக்கை பெற்ற இந்த கூட்டணியை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல் திசை திருப்பும் வேலையில் தான் மாநாட்டில் ஸ்டாலின் கூப்பாடு போட்டு உள்ளார். அந்த மாநாட்டில் பொய்யை மாலையாக தொடுத்துள்ளார் ஆனால் உண்மையை ஒருபோதும் மறைக்க முடியாது .இன்றைக்கு திமுகவை மக்கள் நிராகரித்து விட்டனர் அதனால் திமுக வண்டவாளம், தண்டவாளம் ஏறிவிடும் என்ற அச்சம் உள்ளது. அதனால் தான் தேசிய ஜனநாயக கூட்டணி பற்றி வாய் கூசாமல் விமர்சனம் செய்து வருகிறார். எடப்பாடியார் பல்வேறு சாதனைகள் செய்தார், அதேபோல மத்திய அரசும் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை தந்தது. மத்திய அரசும், மாநில அரசு இணைந்து தான் மாநிலத்தின் வளர்ச்சியை பெற முடியும். தமிழ்நாட்டில் அது போன்ற வளர்ச்சியை எடப்பாடியார் பெற்று தந்தார். இதையெல்லாம் தங்கள் வசதிக்காக மறைத்துவிட்டு ஏதோ ஸ்டாலின் புலம்பி வருகிறார் .அதிகாரம் போய்விடும் என்ற அச்சத்தில் இன்றைக்கு ஸ்டாலின் அறைகூவல் விடுவதை தமிழக மக்கள் நிராகரித்து விட்டனர். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் . பாரதப் பிரதமர் தொடர்ந்து திமுகவின் பொய் முகத்திரையை மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடியார் வருவார். வரும் தேர்தலில் உங்களுக்கு சரியான பதிலடியை மக்கள் கொடுப்பார்கள் அப்போதுதான் உண்மையான கள நிலவரம் என்ன என்பதை உங்களுக்கு புரியும். இன்றைக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம், மூன்று லட்சம், நாலு லட்சம் என தொண்டர்களை கூப்பிட்டு கூப்பாடு போட்டாலும் ஒருபோதும் மக்களிடத்தில் எடுபடாது. எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் செல்வாக்கை ஒருபோதும் திசை திருப்ப முடியாது எனக் கூறினார்.
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்1
- வணிக சிலிண்டர் தட்டுப்பாடு - மதுரையில் 3 நாட்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம் – வணிகர்கள் எச்சரிக்கை. மதுரை, மார். 10 - சர்வதேச அளவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட அதிர்வுகள், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் விநியோக தட்டுப்பாடும் உருவாகியுள்ளது. இந்த நிலைமையால் சிறு வணிகர்கள், உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் பல தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. சமீபத்திய அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.115 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் ரூ.1,929-க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் தற்போது ரூ.2,043.50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.60 உயர்ந்து ரூ.928.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களிலும் விலை உயர்வு பதிவாகியுள்ளது. போர் பதற்றம் – கச்சா எண்ணெய் விலைய அதிகரிப்பு. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றம் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உலகின் முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை வழியாக உலக நாடுகளின் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பகுதியில் உருவான பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருவதுடன், அதன் தாக்கம் சமையல் எரிவாயு சந்தையிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் அதிகரித்த முன்பதிவு இந்த அச்சநிலையைத் தொடர்ந்து கடந்த 5 முதல் 6 நாட்களுக்குள் எரிவாயு முன்பதிவு 15% முதல் 20% வரை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பல பகுதிகளில் விநியோக தாமதம் மற்றும் தட்டுப்பாடு உருவாகி வருகிறது. இந்த நிலைமையை குறித்து சமையல் எரிவாயு விநியோகத்தில் பணியாற்றும் தனியார் நிறுவன பணியாளர் இளங்கோவன் கூறுகையில், “சமீப நாட்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் உணவகங்கள் மற்றும் டீக்கடைகளுக்கு தேவையான அளவு சிலிண்டர்கள் கிடைக்காமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல கடைகளில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளது. அதன் பிறகு கடைகளை மூட வேண்டிய நிலை உருவாகும் அபாயம் உள்ளது,” என தெரிவித்தார். மதுரையில் உணவகங்களுக்கு கடும் பாதிப்பு. மதுரை மாவட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட உணவகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றை நம்பி 25,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அதேபோல் சாலையோர உணவக கடைகள் சுமார் 10,000 உணவகங்கள் மற்றும் டீக்கடைகளும் நகரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளன. வணிக சிலிண்டர் கிடைக்காததால் சாலையோர சிறிய கடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மதுரையில் மகபூப்பாளையம் 20 ஆண்டுகளாக சாலையோர வடைக் கடை நடத்தி வரும் ஜெயக்குமார் கூறுகையில், “சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் கடையை நடத்த அதிக முதலீடு தேவைப்படுகிறது. எங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே சிரமமாகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் முதல் 1500 ரூபாய் வரை தான் வியாபாரம் இருக்கும். ஒரு சிலிண்டர் ஐந்து நாட்களுக்கு தான் பயன்படுத்த முடியும். சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால் எங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும்,” என்று தெரிவித்தார். கருப்புச் சந்தை குற்றச்சாட்டு சில இடங்களில் வணிக சிலிண்டர்கள் விநியோகிக்க வேண்டாம் என டீலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தையில் கிடைக்காத சிலிண்டர்கள் கருப்புச் சந்தையில் ரூ.3,000 வரை விற்கப்படுகின்றன என வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து கோச்சடை நடராஜ் நகர் பகுதியில் இயங்கி வரும் பாரத் கேஸ் சிலிண்டர் சேமிப்பு கிடங்கில் பணியாற்றிய ஒரு தொழிலாளி கூறுகையில் முன்பு வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் முதல் நாள் புக் செய்தால் மறுநாள் கொண்டு போய் வீடுகளுக்கு கொடுக்கப்படும் ஆனால் இப்போது புக்கிங் செய்தார்கள் என்றால் சுமார் ஒரு வாரம் கழித்து தான் கொடுக்க முடிகிறது அந்த அளவிற்கு தற்போது தட்டுப்பாடு என்பது அதிகரித்துள்ளது. மேலும் இதே நிலை நீடித்தால் புக்கிங் செய்பவர்களுக்கு இன்னும் கொடுக்க காலதாமதம் ஏற்படும் .மேலும் வணிக ரீதியான சிலிண்டரை முதலில் நேரடியாக நாங்கள் ஆர்டர் போட்டவுடன் கொண்டு போய் வழங்குவோம் இப்பொழுது நேரடியாக சென்னையில் உள்ள மையத்திற்கு தகவல் கொடுத்தால் அதுவும் குறிப்பாக மருத்துவமனை மற்றும் தங்கும் விடுதிகளுக்கு மட்டுமே கொடுக்கச் சொல்லி உள்ளார்கள் அப்படி இவர்கள் புக்கிங் செய்து அவர்கள் எங்களுடைய நிறுவனத்திற்கு தகவல் கொடுப்பார்கள் அந்த அடிப்படையில் தான் வணிகரீதியான சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது அதுவும் குறைவான எண்ணிக்கையில் தான் இப்போது வந்துள்ளது இதனால் தற்போது வீடுகளிலும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு அபாயம். வணிக சிலிண்டர் விலை உயர்வும் தட்டுப்பாடும் தொடர்ந்தால், தோசை, இட்லி, பரோட்டா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை இருமடங்கு உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்களின் அன்றாட உணவு செலவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் தாக்கம் மதுரையில் பல ஆயிரம் மாணவர்கள் விடுதிகளில் தங்கி கல்வி கற்கின்றனர். அதேபோல் வெளிமாவட்டங்களில் இருந்து வேலைக்காக வந்திருக்கும் தொழிலாளர்களும் உணவகங்களையே பெரிதும் நம்பி உள்ளனர். உணவகங்கள் மூடப்பட்டால் அவர்களின் அன்றாட உணவு தேவைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சிலர் கூறுகின்றனர். பொருளாதார பாதிப்பு குறித்து வணிகர்கள் கவலை சர்வதேச போர் பதற்றம் நீடித்தால் அதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும் கடுமையாக இருக்கும் என வணிகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக பொதுமக்களின் வாங்கும் சக்தி குறையும் நிலையும் உருவாகலாம் என எச்சரிக்கப்படுகிறது. போர் நிறுத்தத்திற்கு இந்தியா முயற்சி எடுக்க வேண்டும் எனவே, ஈரான் தொடர்பான போர் நடவடிக்கைகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நிறுத்தும் வகையில் இந்திய அரசு சர்வதேச அளவில் ஆலோசனைகள் மேற்கொண்டு அமைதியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு போர் பதற்றத்தை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இந்தியாவில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பொருளாதார பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதே நேரத்தில், நாட்டில் உருவாகியுள்ள வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டை உடனடியாக சீரமைத்து விநியோகத்தை அதிகரிக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜெ. பொன்மாறன்.2
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் இன்று (மார்ச்.10) மாலை தொடங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம், திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது. 16 கால் மண்டபம் ,கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது .1
- திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்1
- மதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆகாஷ் என்ற பட்டியலின இளைஞர் காவல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகாஷ் என்ற இளைஞரை கொலை செய்துவிட்டது. இந்த மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒரே சாதியினராக இருந்து கொண்டு, சாதி சங்கங்களைப் போல செயல்படுகின்றனர். ஏற்கனவே மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறையினரால் கொல்லப்பட்ட சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆகாஷ் என்ற இளைஞரின் காலை உடைத்தது காவல்துறைதான். ஆனால், அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றதாக காவல்துறை பொய் சொல்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.1
- திண்டுக்கல் மாநகராட்சி நாகல்புதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி (குட்டவாத்தியார் பள்ளி ) 1926 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டு அன்று முதல் இன்று வரை சுமார் நூறு ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பான கல்வி முறையை பயிற்றுவித்து வருகிறது. இந்நிலையில் இப்பள்ளியின் நூற்றாண்டு திருவிழா திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா மாநகராட்சி ஆணையர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் விஜயா முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக 30வது வார்டு மாமன்ற உறுப்பினர் N.A.லட்சுமி மற்றும் 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் உமாதேவி பாரதி முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்த நூற்றாண்டு திருவிழாவில் மாநகராட்சி பள்ளியின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் S.M.C உறுப்பினர்கள் முன்னாள் மாணவர்கள் தற்போதைய மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். இத்திருவிழாவின் இறுதி நிகழ்வாக பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளுக்கான ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது பள்ளியின் நீண்டகால வரலாற்றையும் அதன் கல்வி பங்களிப்பையும் நினைவு கூர்ந்தது.1
- பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெரியகுளம் ஆடுபாலம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் கரகம் ஜோடிக்கப்பட்டு அங்கிருந்து பெரியகுளம் முக்கிய வீதிகளான தேரடி வீதி மேலரது வீதி அரண்மனை தேர்வு புதிய பேருந்து நிலையம் பகவதி அம்மன் கோவில் வழியாக சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்தபடி ஊர்வலமாக கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்1
- மதுரையில் இன்று போலீசார் அணிவகுப்பு நடைபெற்றது. மதுரையில் இன்று (மார்ச் 10) காலை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு அண்ணாமலை தியேட்டர் முன்பாக ஆரம்பித்து முக்கிய சாலைகள் வழியாக முனிச்சாலை அருகே நிறைவு பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசாரும் கலந்து கொண்டனர்.1