சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட மராத்தான் போட்டியில், தமிழக முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலாளர், டிஜிபி, மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை ஓடினார். பொதுவாக, இத்தகைய விழிப்புணர்வு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முக்கியப் பிரமுகர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, சம்பிரதாயத்திற்காகச் சிறு தூரம் மட்டுமே ஓடுவது வழக்கம். ஆனால், இந்த மராத்தான் போட்டியில் முதலமைச்சர் விஜய்யே நீண்ட தூரத்திற்குத் தொடர்ந்து ஓடியதால், அவருடன் இணைந்து மற்ற உயர் அதிகாரிகளும் ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆர்வத்துடன் ஓடும் இந்தச் சுவாரசியமான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அதிகாரிகளையும் ஓடவிட்ட முதலமைச்சர் விஜய்யின் இந்தச் செயல், சமூக ஊடகங்களில் ஒரு 'மாஸ் வீடியோ'வாகப் பரவி வருகிறது.
சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட மராத்தான் போட்டியில், தமிழக முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலாளர், டிஜிபி, மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை ஓடினார். பொதுவாக, இத்தகைய விழிப்புணர்வு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முக்கியப் பிரமுகர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, சம்பிரதாயத்திற்காகச் சிறு தூரம் மட்டுமே ஓடுவது வழக்கம். ஆனால், இந்த மராத்தான் போட்டியில் முதலமைச்சர் விஜய்யே நீண்ட தூரத்திற்குத் தொடர்ந்து ஓடியதால், அவருடன் இணைந்து மற்ற உயர் அதிகாரிகளும் ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆர்வத்துடன் ஓடும் இந்தச் சுவாரசியமான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அதிகாரிகளையும் ஓடவிட்ட முதலமைச்சர் விஜய்யின் இந்தச் செயல், சமூக ஊடகங்களில் ஒரு 'மாஸ் வீடியோ'வாகப் பரவி வருகிறது.
- மா.சுடலைமணிதூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடுசூப்பர் வாழ்த்துக்கள் 🎉14 hrs ago
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை ஏற்படுத்தும் மந்திதோப்பு சாலையை விரிவாக்கம் செய்யக் கோரியும், முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் தாலூகா செயலாளர் பாபு தலைமையில், மந்திதோப்பு சாலையில் பால்பண்ணை அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கட்சியினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த மேற்கு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.1
- தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான குற்றாலம் அருவிகளில், தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். இரவு நேரத்திலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது, அவர்கள் ஐந்தருவியில் மிகுந்த உற்சாகத்துடன் குளியல் போட்டு மகிழ்ந்தனர்.1
- உலகம் முழுவதும் இன்று போதை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, கன்னியாகுமரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர் ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பொறுப்பு மேரி பிரின்சி லதா தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இந்த ஓட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர், மேலும் ஓட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.1
- மதுரை, பசுமலை விநாயகர் நகரைச் சேர்ந்த 19 வயதான தேவா மற்றும் முத்துப்பட்டியைச் சேர்ந்த 20 வயதான ரோகித் ஆகியோர் சின்ன உடைப்பு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று (ஜூன் 25) காலை இவர்கள் இருவரும் கல்லூரிக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர். இந்த வாகனத்தை ரோகித் ஓட்டிச் சென்றார். பெருங்குடி கணேசபுரம் அருகே வந்தபோது, இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த தேவா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். ரோகித்தும் படுகாயமடைந்தார். உயிருக்குப் போராடிய நிலையில், தேவா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ரோகித் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சாலை விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- சிவகங்கை மாவட்டம் திருவேம்பத்தூர் அருகே உள்ள நீடோடை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்லை பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 31 ஜோடி மாடுகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தின. இந்த மாட்டு வண்டி பந்தயம் பெரிய மாடு, சிறிய மாடு மற்றும் பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. பெரிய மாட்டுப் பிரிவில் 11 ஜோடி மாடுகள் 8 மைல் தூரத்திற்கும், சிறிய மாட்டுப் பிரிவில் 16 ஜோடி மாடுகள் 6 மைல் தூரத்திற்கும், பூஞ்சிட்டுப் பிரிவில் 11 ஜோடி மாடுகள் 5 மைல் தூரத்திற்கும் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்டு போட்டியிட்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், சீறிப்பாய்ந்த காளைகள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்ற காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. காளையார்கோவில், புலியடித்தம்பம், திருவேம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று போட்டியை உற்சாகமாக கண்டுகளித்தனர். போட்டியின் முடிவில், முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு ரொக்கப் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.1
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள திம்மரச நாயக்கனூரில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான கோகுலகிருஷ்ணன் கோவிலில், ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய கும்பாபிஷேக விழா, இன்று வளர்பிறை துவாதசி தினமான வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தக் கோவிலில் கடைசியாக கடந்த 2014ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்தது. விழாவிற்கு முன்னதாக, கடந்த ஆறு மாதங்களாக கோவிலின் புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெற்றன. கும்பாபிஷேக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மூன்று கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி, கோவிலின் கலசத்தில் 108 புண்ணிய தீர்த்தங்களில் இருந்து சேகரித்துக் கொண்டுவரப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, கோவிலில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. பின்னர், பக்தர்களின் மீது தீர்த்தங்கள் தெளித்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதால், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், பாதுகாப்பு கருதி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.1
- கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் நிலவி வந்த நிலையில், இன்று காலை முதல் வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. இந்நிலையில், காலை திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பார்வதிபுரம், வடசேரி, ஆசாரிப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த மழை பெய்தது. மழையின் காரணமாக மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.1
- மதுரை தெப்பக்குளம் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மகாலில், சென்னையைச் சேர்ந்த மிக்கி ஃபேஷன் நிறுவனம் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை ஏற்பாடு செய்துள்ளது. தொடர் விடுமுறை தினங்களான ஜூன் 26, 27, 28 ஆகிய மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த விற்பனையில், பெண்களுக்கான அனைத்து வகை ஆடைகளும் ₹35 முதல் ₹500 வரையிலான விலைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை முதலே ஏராளமான பெண்கள் இந்த தள்ளுபடி ஆடைகளை வாங்குவதற்காகக் குவிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தெரிவித்த தகவலின்படி, சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிமணிகள் தற்போது விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. விற்பனை சிறப்பாகத் தொடரும் பட்சத்தில், மேலும் அதிக துணிமணிகள் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.1
- தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கருப்பசாமி கோயில் பகுதிகளில் கரடிகள் தொடர்ந்து சுற்றித் திரிந்து வருகின்றன. இந்த சூழலில், நேற்று இரவு அணைக்கரைப்பட்டி கிராமச் சாலையின் ஓரத்தில் இரண்டு கரடிக் குட்டிகள் உலா வந்தன. அவ்வழியே வாகனத்தில் சென்ற ஒரு நபர் தனது செல்போனில் இந்தப் காட்சிகளைப் படம் பிடித்ததுடன், வாகனத்தின் வெளிச்சத்தைக் கண்டு அச்சமடைந்த கரடிக் குட்டிகள் அருகே உள்ள தோட்டத்திற்குள் சென்று மறைந்த காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. கிராமச் சாலைகளில் அவ்வப்போது கரடிகள் உலா வருவதால் அணைக்கரைப்பட்டி கிராம மக்களுக்கு இது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உருவாகியுள்ளது. எனவே, வனத்துறையினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1