Shuru
Apke Nagar Ki App…
முன்னாள் திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி இராமநாதன் மற்றும் முன்னாள் இணக்கனேரி திமுக கிளை செயலாளர் மணிக்குண்டு ஆகியோர் தலைமையில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் அதிமுக இணைந்தனர்.அதே போன்று இன்று இசலி கிராமத்தை சேர்ந்த சுமார் 20 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். கழகத்தில் இணைந்தவர்களை திருச்சுழி தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
Paramasivam A
முன்னாள் திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி இராமநாதன் மற்றும் முன்னாள் இணக்கனேரி திமுக கிளை செயலாளர் மணிக்குண்டு ஆகியோர் தலைமையில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் அதிமுக இணைந்தனர்.அதே போன்று இன்று இசலி கிராமத்தை சேர்ந்த சுமார் 20 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். கழகத்தில் இணைந்தவர்களை திருச்சுழி தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
More news from Virudhunagar and nearby areas
- அதன் ஒரு பகுதியாக, இன்று திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்ட ம.லட்சுமிபுரம், ம.ரெட்டியாபட்டி, புதூர், சிலுக்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் நேரில் சென்று மக்களுடன் சந்தித்து வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு கிராமத்திலும் மக்களை நேரடியாக சந்தித்து, அரசு மேற்கொண்ட நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கினார். மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள புதிய திட்டங்களையும் பொதுமக்களிடம் பகிர்ந்து, ஆதரவை கோரினார். பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளையும் கவனமாக கேட்டு, அவற்றை தீர்க்க உறுதி அளித்தார். அவரது வருகையையொட்டி பல இடங்களில் உற்சாகமான வரவேற்பு காணப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தும், இளைஞர்கள் மலர்மாலை அணிவித்தும் அவரை வரவேற்றனர். சில இடங்களில் உள்ளூர் மக்கள் கூட்டம் திரண்டு, உற்சாக கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டு, வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் திருச்சுழி தொகுதியில் தேர்தல் சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.1
- சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.37 லட்சத்து 32 ஆயிரத்து 257 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நிர்வாக மாஜிஸ்திரேட் மற்றும் பறக்கும் படைத் தலைவர் கோ.சந்தன பெருமாள் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில், A.சரவணக்குமார் என்பவரிடமிருந்து இந்தப் பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் முத்திரையிடப்பட்ட பையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சிவகங்கை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, 7 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- Post by P.G.m Paintings1
- மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் அவர்கள் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று (ஏப்.20) காலை அவர் அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது தள்ளுவண்டி கடையில் வடை சுட்டு அங்கிருந்தவர்களிடம் வாக்குகளை கேட்டார். உடன் திமுக பகுதி செயலாளர் ஈஸ்வரன், வட்டசெயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1
- காரைக்குடி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற* *முற்போக்கு கூட்டணி இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர்* எஸ்.மாங்குடி அவர்களை ஆதரித்து தேவகோட்டை அண்ணா அரங்கில் தேர்தல் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எம்பி ,சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம்,திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுசெயலாளர் சுப.வீரபாண்டியன்,முன்னாள் அமைச்சர் தென்னவன்,திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஜோன்ஸ் ரூசோ ,நகர செயலாளர் பெரி.பாலமுருகன்,காங்கிரஸ் கட்சி நகர தலைவர் சஞ்சய் ,திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் மற்றும் ஒன்றிய,நகர செயலாளர்கள்,திமுக ,காங்கிரஸ்,தேமுதிக , எஸ் டி பி ஐ,விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- Post by மா.சுடலைமணி1
- திண்டுகல் மாவட்டம் ஆண்டி நகர் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஆரம்பம் இன்று பூ அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது1
- மதுரை திருப்பரங்குன்றம் கோட்டை தெரு பகுதியில் நேற்று (ஏப்.19) இரவு ரூ. 50 லட்சம் பணத்துடன் நின்று கொண்டிருந்த திமுகவினரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பான செய்தி அறிந்த தவெக வேட்பாளர் சி டி ஆர் நிர்மல் குமார் காவல் நிலையம் வந்து குற்றவாளிகளை விடுவிக்க கூடாது என்றும், பணம் பட்டுவாடா தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.1