Shuru
Apke Nagar Ki App…
சின்னமனூர் நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்: சின்னமனூர் உழவர் சந்தையில் (ஜன.13) கத்தரி ரூ.20, தக்காளி ரூ.34, வெண்டை ரூ.45/40, அவரை ரூ.25, கொத்தவரை ரூ.38, சுரை ரூ.10, புடலை ரூ.20, பாகல் ரூ.25, பூசணி ரூ.20-12, மிளகாய் ரூ.40/38, சேனை ரூ.34, கருணை ரூ.35, உள்ளி ரூ.54-50, பல்லாரி ரூ.32, பீட்ரூட் ரூ.20, நூல்கோல் ரூ.25, முள்ளங்கி ரூ.18/15, பீன்ஸ் ரூ.76-44, கோஸ் ரூ.25, கேரட் ரூ.44, எலுமிச்சை ரூ.36, உருளை ரூ.44/28, சௌசௌ ரூ.16 க்கு விற்கப்படுகிறது.
Theni Godwin
சின்னமனூர் நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்: சின்னமனூர் உழவர் சந்தையில் (ஜன.13) கத்தரி ரூ.20, தக்காளி ரூ.34, வெண்டை ரூ.45/40, அவரை ரூ.25, கொத்தவரை ரூ.38, சுரை ரூ.10, புடலை ரூ.20, பாகல் ரூ.25, பூசணி ரூ.20-12, மிளகாய் ரூ.40/38, சேனை ரூ.34, கருணை ரூ.35, உள்ளி ரூ.54-50, பல்லாரி ரூ.32, பீட்ரூட் ரூ.20, நூல்கோல் ரூ.25, முள்ளங்கி ரூ.18/15, பீன்ஸ் ரூ.76-44, கோஸ் ரூ.25, கேரட் ரூ.44, எலுமிச்சை ரூ.36, உருளை ரூ.44/28, சௌசௌ ரூ.16 க்கு விற்கப்படுகிறது.
More news from தமிழ்நாடு and nearby areas
- 0திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.1
- திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருசில பகுதிகளில் சாரல் மழை திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது காலை 8:30 மணிக்கு மேல் தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் சாரல் மழை பொழிந்து வருகின்றது இந்த சாரல் மழை பொழிந்து வருவதால் மாவட்டம் முழுவதும் குளுர்ச்சியான சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது1
- தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி அருகே செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து பள்ளியின் வளாகத்தில் உள்ள கல்வி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.1
- அழகான பேச்சு. கேளுங்கள்.1
- திருச்செங்கோடு தோக்கவாடி ஊராட்சி கே.எஸ். ஆர். கல்வி நகர் பகுதியில் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் மயில்சாமி என்பவரது வீட்டிலும்,ஆவின் நிறுவனத்தில் கால்நடை மருத்துவராக வேலை பார்த்து வரும் முத்துவேல் என்பவரது வீட்டிலும் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் இரு குடும்பத்தினரும் வெளியூர் சென்று இருப்பதை அறிந்து மர்ம நபர்கள் கைவரிசை ஒரு வீட்டில் ஐந்து பவுன் நகை ரொக்கம் மற்றும் மயில்சாமி என்பவரது வீட்டில் 20 பவுன் நகை 60 ஆயிரம் பணம் உண்டியல் காசுகள் வெள்ளிப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் திருட்டு. ஊரக போலீசார் தீவிர விசாரணை கைரேகை நிபுணர்கள் வரவழைத்து தீவிர சோதனை2
- தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட இந்து மக்கள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.1
- ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது தமிழர் பாரம்பரிய முறைப்படி பட்டுபுடவை , வேஷ்டி,சட்டை அணிந்து வந்து பொங்கல் வைத்து கொண்டாடிய மாணவ மாணவிகள் சாரல் மழையில் நனைந்துகொண்டே சினிமா பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டும் உறியடி போட்டி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றும் உற்சாகம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.தைப்பொங்கல் திருநாள் நெருங்கி வருவதையடுத்து கல்லூரியில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.இதற்காக தமிழர் பாரம்பரிய முறைப்படி மாணவர்கள் வேஷ்டி சட்டை அணிந்தும் மாணவ மாணவிகள் பட்டுப்புடவை அணிந்தும் வந்திருந்து கல்லூரியின் மையப்பகுதியில் உள்ள தரைப்பகுதியில் வண்ணக்கோலங்கள் இட்டு , சுற்றிலும் கரும்புகள் வைத்து பொங்கல் பானை வைத்து பொங்கலோ பொங்கல் என குலவை இட்டு பொங்கல் வைத்தனர்.பின்னர் மத்தளம் ட்ரம் செட் இசை முழங்க, பொங்கல் பானைகளை தூக்கிகொண்டு கல்லூரி வளாகம் முழுவதும் ஆடிக்கொண்டே மாணவிகள் கொண்டு வர மாணவர்கள் சினிமா பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டனர்.மேலும் கல்லூரி வளாகத்தில் கண்களை கருப்பு துணிகளால் கட்டிக்கொண்டு மாணவ மாணவிகள் உரியடிக்கும் போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்ற நிலையில் அதில் உற்சாகமாக கலந்துகொண்ட கல்லூரி மாணவ மாணவிகள் மகிழ்ச்சியாக சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.இதில் கல்லூரி ஆசிரியர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டு அவர்களும் சமத்துவ பொங்கல் மகிழ்ச்சியாக கொண்டாடினர்1
- திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் பகுதியில் 15 அடி நீளமுள்ள அலகு குத்தி பக்தர் ஆட்டம்.1
- *மணப்பாறையில் திமுகவின் திராவிட பொங்கல் விழா.* *சமத்துவ பொங்கல் வைத்து மாநில அளவிலான கபாடி போட்டி துவக்கம்.* திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதிய காலனியில் உள்ள கலைஞர் விளையாட்டு அரங்கில் தெற்கு ஒன்றிய திமுகவின் சார்பில் திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபாடி போட்டி துவங்கியது. முன்னதாக விழா அரங்கம் முன்பாக புதுப்பானையில் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர். அதனைத்தொடர்ந்து ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற கபாடி போட்டியை திமுக திருச்சி தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் லீலாவேலு, முன்னாள் ஒன்றிய சேர்மன் அமிர்தவள்ளி ஆகியோர் முதல் போட்டியில் களமிறங்கிய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து போட்டியை துவக்கிவைத்தனர். போட்டியில் திருச்சி, திண்டுக்கல், சென்னை, கரூர், புதுக்கோட்டை, மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 அணிகள் பங்கேற்றுள்ளன. வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.30 ஆயிரம், தலா ரூ.20 ஆயிரம் மூன்றாம் நான்காம் பரிசாக வழங்கப்பட உள்ளது. போட்டியை திமுக வினர் மற்றும் கபாடி ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர்.1