Shuru
Apke Nagar Ki App…
குடியாத்தத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் A, சிந்து அவர்கள் இன்று லட்சுமி திரையரங்கு அருகிலிருந்து காமராஜர் பாலம், பெரியார் சிலை, பழைய புதிய பேருந்து நிலையம் நான்கு முனை கூட்ரோடு , அம்பேத்கர் சிலை, வழியாக மேல தாளங்கள் முழங்க மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்களுடன் , ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியான கோட்டாட்சியரிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார்
Tamil success
குடியாத்தத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் A, சிந்து அவர்கள் இன்று லட்சுமி திரையரங்கு அருகிலிருந்து காமராஜர் பாலம், பெரியார் சிலை, பழைய புதிய பேருந்து நிலையம் நான்கு முனை கூட்ரோடு , அம்பேத்கர் சிலை, வழியாக மேல தாளங்கள் முழங்க மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்களுடன் , ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியான கோட்டாட்சியரிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார்
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Vinayagam Vinayagam1
- “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்ற முக்கியமான பிரச்சார நிகழ்ச்சி இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள வீடுகளில் நடைபெற்றது. இதில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் திரு.ராதாகிருஷ்ணன், திரு. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், ஓட்டு என்பது ஒரு உரிமை மட்டுமல்ல… அது நம்ம எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தி என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர். நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. ஜாய், திரு. KGS சுரேஷ் , திரு. முனிராஜ், திரு. அன்பு, திரு. திருக்குமரன், திரு. கோபிநாத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.1
- நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நாட்டுக்கோழி சந்தை நடைபெறுவது வழக்கம். இன்று (ஏப்.05) நடைபெற்ற சந்தையில் சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் நாட்டுக்கோழிகள் ரூ.400 - 1,300 வரை விற்பனையானது. மேலும் இன்று ஒரே நாளில் மொத்தம் ரூ.3.70 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.1
- தர்மபுரி மாவட்டம், தர்மபுரி சட்டமன்றத் தொகுதிக்கான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளர் சௌமியா அன்புமணி பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், தர்மபுரி அடுத்துள்ள சோகத்தூர் கூட்ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்கு சேகரிப்பு திட்டங்கள், பிரசார முறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய சௌமியா அன்புமணி, “தர்மபுரி தொகுதியில் மக்கள் ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகமாக உள்ளது. இந்த ஆதரவை வாக்குகளாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும், வீடு தோறும் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு அளிக்கும் நோக்கில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் கூட்டத்தில் பேசிய சௌமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றால் தொப்பூர் கணவாய் மேம்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பபோம் என்றும் கிடப்பில் போடப்பட்டுள்ளது வத்தல்மலை சுற்றுலா தளம் திட்டத்தை விரிவுபடுத்தி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாள் வேலை திட்டமாக மாற்றப்படும் என்றும் ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தையும் நிறைவேற்றுவோம் என்றும் கூறினார் கூட்டணிக் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்றும், இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பு முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.1
- Post by JEK MEDIAtamil2
- Amazing Talent ❤️❤️❤️1
- சென்னை ஆர்.கே நகர் மேற்கு பகுதி திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா பகுதி செயலாளர் வழக்கறிஞர் எஸ் ஜெப தாஸ் பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் , தேர்தல் பொறுப்பாளர் சுபா சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தனர் அருகில் கிழக்குப் பகுதி செயலாளர் இரா.லட்சுமணன் உட்பட மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1
- Post by Vinayagam Vinayagam1