Shuru
Apke Nagar Ki App…
திருப்பூர் மாவட்டம் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை காங்கேயம் அருகே விவசாயிகள் கைது காங்கேயம் அருகே விவசாயிகள் கைது. திருப்பூர் மாவட்டம் : காங்கேயம் பகுதியில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் இனாம்நலம் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றாமல் மீண்டும் காங்கேயம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதால் கருப்புக் கொடி காட்ட இருந்த 25க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர் . மேலும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கருப்பு கொடி காட்ட இருப்பதால் காங்கேயம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
Prabhu.s
திருப்பூர் மாவட்டம் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை காங்கேயம் அருகே விவசாயிகள் கைது காங்கேயம் அருகே விவசாயிகள் கைது. திருப்பூர் மாவட்டம் : காங்கேயம் பகுதியில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் இனாம்நலம் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றாமல் மீண்டும் காங்கேயம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதால் கருப்புக் கொடி காட்ட இருந்த 25க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர் . மேலும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கருப்பு கொடி காட்ட இருப்பதால் காங்கேயம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
More news from தமிழ்நாடு and nearby areas
- மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பன்னாங்கொம்பு பகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திமுக கூட்டணி கட்சி மமக வேட்பாளர் ப.அப்துல் சமது உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.2
- மணப்பாறையில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குத்துவிளக்கு பூஜையுடன் சித்திரை மாத திருவிழா துவங்கியது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் நிகழ்ச்சி வரும் (ஏப்- 26) அன்று நடைபெற உள்ளது. இதில் மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தவறாமல் கலந்து கொள்ள கோவில் அறங்காவலர் ஆர்விஎஸ். மணி அறிவுறுத்தியுள்ளார்.1
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் அத்தனூர் சித்திரை மாத தேர் பண்டிகை முன்னிட்டு அருள்மிகு அத்தனூர் அம்மன் திருவீதி உலா நடைபெற்றன விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்1
- பெற்றோர் Vs குழந்தைகள் !!! குழந்தை நல்லவராவதும் தீயவராவதும் பெற்றோர் வளர்ப்பில்லை !!! #family1
- Post by P.G.m Paintings1
- தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும் 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தியும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர் காவல் துறையின் சார்பில் மதுரை காவல்துறை காவலர்கள் மற்றும் குஜராத் மாநில ஆயுதப்படை போலீசார், மத்திய துணை ராணுவ படையினர் இணைந்து இன்று (ஏப்.19) மாலை தெற்கு வாசல் உதவி காவல் ஆணையர் சந்திரலேகா தலைமையில் தெற்கு வாசல் பகுதியில் உள்ள முக்கிய தெருக்களில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தினார்கள்.1
- தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு சோத்துப்பாறை சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்டு வரும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மற்றும் அங்கு உள்ள விளையாட்டு வீரர்களை சந்தித்து குக்கர் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் அதனைத் தொடர்ந்து மார்க்கெட் வீதியில் உள்ள இறைச்சி கடை மற்றும் காய்கறி கடைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து குக்கர் சின்னத்துக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார் மேலும் அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து தங்கள் வாக்குகளை குக்கர் சின்னத்துக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யுங்கள் என கை எடுத்து கும்பிட்டு வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார் இதில் நகரச் செயலாளர்கள் குபேந்திரன், பாலா, நகர்மன்ற உறுப்பினர் மணி வெங்கடேஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அபுதாஹிர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சிவசுப்பிரமணியன், அதிமுக நகர செயலாளர் பழனியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்1
- மணப்பாறை தொகுதியில் தவெக சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஆர். கதிரவன் நேற்று இரவு மணப்பாறை அடுத்த அனியாப்பூர் அருகே என்.பூலாம்பட்டியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து பரப்புரை ஆற்றி வாக்குகள் சேகரித்தனர். இந்த நிகழ்வில் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். இதில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான தவெகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.1
- சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் களத்தில் உள்ள வேட்பாளர்கள் தங்கள் சுழன்று சுழன்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர். விஜயகுமார், இன்று மாலை மணப்பாறை நகர பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பேருந்து நிலையம், மாரியம்மன் கோவில், அண்ணாவிநகர், எட்டுத் தெரு, காமராஜர்சிலை, காந்திநகர், சேதுரெத்தினபுரம், ராஜீவ் நகர், முத்தன் தெரு பாத்திமா மலை, சந்தியாகுபுரம் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளுக்கும் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர். பிரச்சாரத்தின்போது வேட்பாளர் டாக்டர்.விஜயகுமார் பேசுகையில், மணப்பாறை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வெளிவட்ட சுற்றுசாலை, காவிரி குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை, விபத்துகளை குறைக்க பறக்கும் சாலை, நகரில் பாதாள சாக்கடை அமைத்து சுகாதாரத்தை பேணி காப்பேன் எனவும் வாக்குறுதி அளித்தார். வேட்பாளருடன் கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.1