logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

*ரூ.1000 கோடி வேலை நியமன முறைகேடு.. கே.என்.நேரு வழக்கில் இன்று முக்கிய விசாரணை !* வேலைக்கு பணம் பெற்றதாகக் கூறப்படும் புகாரில் அமைச்சர் கே.என். நேரு மீது FIR பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்காலத் தடை மனுமீதான விசாரணை இன்று வருகிறது. *ரூ.1000 கோடி வேலை நியமன முறைகேடு.. கே.என்.நேரு வழக்கில் இன்று முக்கிய விசாரணை !* வேலைக்கு பணம் பெற்றதாகக் கூறப்படும் புகாரில் அமைச்சர் கே.என். நேரு மீது FIR பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்காலத் தடை மனுமீதான விசாரணை இன்று வருகிறது.

4 hrs ago
user_NAMADHU ARASU(Krishna M Com)
NAMADHU ARASU(Krishna M Com)
எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
4 hrs ago

*ரூ.1000 கோடி வேலை நியமன முறைகேடு.. கே.என்.நேரு வழக்கில் இன்று முக்கிய விசாரணை !* வேலைக்கு பணம் பெற்றதாகக் கூறப்படும் புகாரில் அமைச்சர் கே.என். நேரு மீது FIR பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்காலத் தடை மனுமீதான விசாரணை இன்று வருகிறது. *ரூ.1000 கோடி வேலை நியமன முறைகேடு.. கே.என்.நேரு வழக்கில் இன்று முக்கிய விசாரணை !* வேலைக்கு பணம் பெற்றதாகக் கூறப்படும் புகாரில் அமைச்சர் கே.என். நேரு மீது FIR பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்காலத் தடை மனுமீதான விசாரணை இன்று வருகிறது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    18 hrs ago
  • *மத தீவிரவாதிகளை தடுப்போம்.மதவாதத்தை ஒழிப்போம்* *மத தீவிரவாதிகள் அரசியலுக்குள் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதை மேலே உள்ள வீடியோவில் பாருங்கள்.* *சிந்தித்து செயல்படுங்கள்*. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையாக செயல்படும் இடம் திருவாங்கூர் சமஸ்தான காலத்தில் கொன்னை மரங்களும் புன்னை மரங்களும் நிறைந்த காடு. திருவாங்கூர் சமஸ்தானத்தின் தெக்கன் பகுதியில் அதாவது இன்றைய குமரி மாவட்ட பகுதியில் காசநோய் பெரிதாக பரவி வந்த காலத்தில் காசநோய்க்கென்று ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையின் தேவை இருந்தது......... 1937 ஆம் ஆண்டு சித்திரை திருநாள் மன்னராக இருந்தபோது நூறு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அந்த அடர்ந்த காட்டு பகுதியில் காசநோய்க்கென்று தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனை தொடங்கப்பட்டது. அன்று அந்த மருத்துவமனையில் செவிலியர்களும் மருத்துவர்களும் பலரும் கிறித்தவம் ஏற்ற மக்கள். அந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் மிஷனரி நபர்கள் குடியிருந்த பகுதியாக இருந்ததாலும் காசநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றதாலும் அதில் திருவாங்கூர் சமஸ்தானம் ஒரு கிறித்தவ ஆலயம் கட்ட அனுமதி தந்தது.......... மருத்துவமனை தொடங்கிய காலம் தொட்டு இயங்கி வந்த அந்த ஆலயம் பிற்காலத்தில் காசநோய் மருத்துவமனை செயலிழந்ததோடு செயல்பாட்டில் இல்லாமல் போனது. இரண்டாயிரத்தில் நாகர்கோவில் கோட்டாரில் இயங்கிவந்த அரசு மருத்துவமனை ஆசாரிப்பள்ளத்திற்கு மாற்றப்பட்டு இன்று மருத்துவ கல்லூரியாக உயர்வு பெற்று இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அரசு மருத்துவ கல்லூரி செயல்பட தொடங்கிய காலத்தில் அந்த கிறித்தவ ஆலயம் இருந்த பகுதி மரண ரெக்கார்டுகள் வைக்கும் அறையாக மாறிப்போனது......... இன்று ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரிக்குள் சிறிய அளவிலான ஒரு இந்து வழிபாட்டு தலம் உள்ளது. சில கிறித்தவ அமைப்புகள் அதை காரணம் காட்டி திருவாங்கூர் சமஸ்தானம் தந்த நிலத்தில் கட்டப்பட்டு இன்று வழக்கில் இல்லாமல் இருக்கும் அந்த ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் கோரிக்கை வைத்தனர்......... இந்த கோரிக்கை ஏற்புடையதா என்றால் இன்றைய காலகட்டத்தில் மருத்துவ அறிவியல் சார்ந்த முன்னேற்றங்கள் தான் தேவை என்றாலும் மக்களின் ஆன்மீக தேடலுக்கு அவரவருக்கு தேவை . இந்துக்களுக்கு ஒரு ஆன்மீக தேடலுக்கான இடம் இருக்க கிறிஸ்தவர்களுக்கும் ஒரு ஆன்மீக தேடலுக்கான இடம் தேவை தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அப்படி ஆன்மீக தேடலை முன்னிறுத்தும் போது அங்கே ஒரு சமய வழிபாட்டு இடங்கள் வைப்பது தவறு. ஏற்கனவே இந்து வழிபாட்டு அடையாளங்கள் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக ஆலயம் திறக்கப்படலாம் கூடவே இஸ்லாமியருக்கான தொழுகை மையமும் திறக்கலாம். ஒரு பல்மத வழிபாட்டு அறையாக எந்த ஒரு அடையாளமும் இல்லாத ஒரு வழிபாட்டு அறை ஒதுக்கலாம்............. ஆனால் தற்போதைய சட்டமன்ற தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ஐம்பது ஆண்டுகளாக மத கலவரத்தை மட்டுமே நம்பி குமரியில் தேர்தல் களம் காணும் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் நேரத்தில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருக்கும் மிகப் பழமையான இந்த கிறித்தவ ஆலய பிரச்சனையே கையில் எடுத்திருக்கிறது....... குளச்சல் தொகுதியில் போட்டியிடும் வக்கீல் சிவக்குமார் குளச்சல் தொகுதியில் மக்கள் வாழ்வாதார பிரச்சனைகள் பல இருக்க நாகர்கோவில் தொகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குள் இருக்கும் ஆலய பிரச்சனையை தூக்கித் திரிவது வெட்கக்கேடான செயல்......... குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் பங்குனி உத்திரத்தின் போது யானை ஊர்வலமும் யானை தெருக்களில் வருவதும் ஒரு வழக்கமாக இருக்கிறது. கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் இல்லாத இந்த வழக்கம் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தான் தொடங்கியிருக்க வேண்டும்....... மேற்கு மாவட்டத்தில் கேரள தொடர்புகள் உள்ள சாதிகள் நெருக்கமாக வாழும் பகுதியில் மட்டும் தான் இது இருந்தது. பிற்காலத்தில் யானைகளை வழிபாட்டு தலங்களில் பயன்படுத்துவதற்கான விதிகள் கடினமாக்கப்படவும் யானை வளர்ப்பு பெரும் பொருளாதார சம்பந்தப்பட்டதாக இருப்பதாலும் அதுவும் நீர்த்துபோனது......... இப்படியிருக்க மீன்பிடி, விவசாயம், தொழில் மற்றும் கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகள் நிரம்பி இருக்கும் குளச்சல் தொகுதியில் போட்டியிடும் வக்கீல் சிவக்குமார் இரண்டு வாக்குறுதிகளை முன்னிறுத்தி தேர்தல் களம் காண்கிறார்..... ஒன்று ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்குள் பழமையான அந்த ஆலயத்தை திறக்கவிடமாட்டேன் என்கிறார். இரண்டு பங்குனி உத்திரத்தின் போது யானை ஊர்வலம் நடத்துவேன் என்கிறார்..... ஒரு லட்சம் இந்துக்களும் ஒன்றரை லட்சம் கிறித்தவர்களும் இருபத்தைந்தாயிரம் இஸ்லாமியரும் இணக்கமாக வாழும் தொகுதியில் அவரது சிந்தனை ஒருங்கிணைந்த மக்கள் வளர்ச்சியை நோக்கியதாக இல்லை. எப்படியாவது மதத்தை முன்னிறுத்தி மதம் சார்ந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி இந்து வாக்குகளை ஒருங்கே பெற்று வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.......... குமரி மாவட்ட தேர்தல் களத்தில் தோற்கடிக்கப்படவேண்டிய முக்கிய வேட்பாளராக தான் வக்கீல் சிவக்குமார் உள்ளார்...,. தீர்ப்பை குளச்சல் தொகுதி மக்கள் எழுதட்டும்..... ஆக மொத்தம் BJP வீட்டுக்கும் நாட்டுக்கும் சமூகத்திற்கும் ஒட்டு மொத்த மக்கள் சமுதாயத்திற்கும் கேடு விளைவிக்கும் தீய சக்தி ஆகும்.
    1
    *மத தீவிரவாதிகளை தடுப்போம்.மதவாதத்தை ஒழிப்போம்* 
*மத தீவிரவாதிகள் அரசியலுக்குள் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதை மேலே உள்ள வீடியோவில் பாருங்கள்.* 
*சிந்தித்து செயல்படுங்கள்*.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையாக செயல்படும் இடம் திருவாங்கூர் சமஸ்தான காலத்தில் கொன்னை மரங்களும் புன்னை மரங்களும் நிறைந்த காடு. திருவாங்கூர் சமஸ்தானத்தின் தெக்கன் பகுதியில் அதாவது இன்றைய குமரி மாவட்ட பகுதியில் காசநோய் பெரிதாக பரவி வந்த காலத்தில் காசநோய்க்கென்று ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையின் தேவை இருந்தது.........
1937 ஆம் ஆண்டு சித்திரை திருநாள் மன்னராக இருந்தபோது நூறு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அந்த அடர்ந்த காட்டு பகுதியில் காசநோய்க்கென்று தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனை தொடங்கப்பட்டது. அன்று அந்த மருத்துவமனையில் செவிலியர்களும் மருத்துவர்களும் பலரும் கிறித்தவம் ஏற்ற மக்கள். அந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் மிஷனரி நபர்கள் குடியிருந்த பகுதியாக இருந்ததாலும் காசநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றதாலும் அதில் திருவாங்கூர் சமஸ்தானம் ஒரு கிறித்தவ ஆலயம் கட்ட அனுமதி தந்தது..........
மருத்துவமனை தொடங்கிய காலம் தொட்டு இயங்கி வந்த அந்த ஆலயம் பிற்காலத்தில் காசநோய் மருத்துவமனை செயலிழந்ததோடு செயல்பாட்டில் இல்லாமல் போனது. இரண்டாயிரத்தில் நாகர்கோவில் கோட்டாரில் இயங்கிவந்த அரசு மருத்துவமனை ஆசாரிப்பள்ளத்திற்கு மாற்றப்பட்டு இன்று மருத்துவ கல்லூரியாக உயர்வு பெற்று இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அரசு மருத்துவ கல்லூரி செயல்பட தொடங்கிய காலத்தில் அந்த கிறித்தவ ஆலயம் இருந்த பகுதி மரண ரெக்கார்டுகள் வைக்கும் அறையாக மாறிப்போனது.........
இன்று ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரிக்குள் சிறிய அளவிலான ஒரு இந்து வழிபாட்டு தலம் உள்ளது.   சில கிறித்தவ அமைப்புகள் அதை காரணம் காட்டி திருவாங்கூர் சமஸ்தானம் தந்த நிலத்தில் கட்டப்பட்டு இன்று வழக்கில் இல்லாமல் இருக்கும் அந்த ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் கோரிக்கை வைத்தனர்.........
இந்த கோரிக்கை ஏற்புடையதா என்றால் இன்றைய காலகட்டத்தில் மருத்துவ அறிவியல் சார்ந்த முன்னேற்றங்கள் தான் தேவை என்றாலும் மக்களின் ஆன்மீக தேடலுக்கு அவரவருக்கு தேவை  . இந்துக்களுக்கு ஒரு ஆன்மீக தேடலுக்கான இடம் இருக்க கிறிஸ்தவர்களுக்கும் ஒரு ஆன்மீக தேடலுக்கான இடம் தேவை தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அப்படி ஆன்மீக தேடலை முன்னிறுத்தும் போது அங்கே ஒரு சமய வழிபாட்டு இடங்கள் வைப்பது தவறு. ஏற்கனவே இந்து வழிபாட்டு அடையாளங்கள் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக ஆலயம் திறக்கப்படலாம் கூடவே இஸ்லாமியருக்கான தொழுகை மையமும் திறக்கலாம்.  ஒரு பல்மத வழிபாட்டு அறையாக எந்த ஒரு அடையாளமும் இல்லாத ஒரு வழிபாட்டு அறை ஒதுக்கலாம்.............
ஆனால் தற்போதைய சட்டமன்ற தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ஐம்பது ஆண்டுகளாக மத கலவரத்தை மட்டுமே நம்பி குமரியில் தேர்தல் களம் காணும் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் நேரத்தில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருக்கும் மிகப் பழமையான இந்த கிறித்தவ ஆலய பிரச்சனையே கையில் எடுத்திருக்கிறது.......
குளச்சல் தொகுதியில் போட்டியிடும் வக்கீல் சிவக்குமார் குளச்சல் தொகுதியில் மக்கள் வாழ்வாதார பிரச்சனைகள் பல இருக்க நாகர்கோவில் தொகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குள் இருக்கும் ஆலய பிரச்சனையை தூக்கித் திரிவது வெட்கக்கேடான செயல்.........
குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் பங்குனி உத்திரத்தின் போது யானை ஊர்வலமும் யானை தெருக்களில் வருவதும் ஒரு வழக்கமாக இருக்கிறது. கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் இல்லாத இந்த வழக்கம் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தான் தொடங்கியிருக்க வேண்டும்.......
மேற்கு மாவட்டத்தில் கேரள தொடர்புகள் உள்ள சாதிகள் நெருக்கமாக வாழும் பகுதியில் மட்டும் தான் இது இருந்தது. பிற்காலத்தில் யானைகளை வழிபாட்டு தலங்களில் பயன்படுத்துவதற்கான விதிகள் கடினமாக்கப்படவும் யானை வளர்ப்பு பெரும் பொருளாதார சம்பந்தப்பட்டதாக இருப்பதாலும் அதுவும் நீர்த்துபோனது.........
இப்படியிருக்க மீன்பிடி, விவசாயம், தொழில் மற்றும் கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகள் நிரம்பி இருக்கும் குளச்சல் தொகுதியில் போட்டியிடும் வக்கீல் சிவக்குமார் இரண்டு வாக்குறுதிகளை முன்னிறுத்தி தேர்தல் களம் காண்கிறார்.....
ஒன்று ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்குள் பழமையான அந்த ஆலயத்தை திறக்கவிடமாட்டேன் என்கிறார்.
இரண்டு பங்குனி உத்திரத்தின் போது யானை ஊர்வலம் நடத்துவேன் என்கிறார்.....
ஒரு லட்சம் இந்துக்களும் ஒன்றரை லட்சம் கிறித்தவர்களும் இருபத்தைந்தாயிரம் இஸ்லாமியரும் இணக்கமாக வாழும் தொகுதியில் அவரது சிந்தனை ஒருங்கிணைந்த மக்கள் வளர்ச்சியை நோக்கியதாக இல்லை. எப்படியாவது மதத்தை முன்னிறுத்தி மதம் சார்ந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி இந்து வாக்குகளை ஒருங்கே பெற்று வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்..........
குமரி மாவட்ட தேர்தல் களத்தில் தோற்கடிக்கப்படவேண்டிய முக்கிய வேட்பாளராக தான் வக்கீல் சிவக்குமார் உள்ளார்...,.
தீர்ப்பை குளச்சல் தொகுதி மக்கள் எழுதட்டும்.....
ஆக மொத்தம் BJP வீட்டுக்கும் நாட்டுக்கும் சமூகத்திற்கும் ஒட்டு மொத்த மக்கள் சமுதாயத்திற்கும் கேடு விளைவிக்கும் தீய சக்தி ஆகும்.
    user_Arasu Malar Editor V.Balamurugan
    Arasu Malar Editor V.Balamurugan
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    18 hrs ago
  • ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேட்பாளர் லட்சுமிபதி அரக்கோணம் எஸ் ஆர் கே பகுதியில் இருந்து ஜோதி நகர் வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்களோடு மேளதாளங்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
    1
    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்  சட்டமன்ற தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேட்பாளர் லட்சுமிபதி அரக்கோணம் எஸ் ஆர் கே பகுதியில் இருந்து ஜோதி நகர் வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்களோடு மேளதாளங்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
    user_BADRI PRASAD YADAV
    BADRI PRASAD YADAV
    Local News Reporter அரக்கோணம், ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்வாசல் அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் 100% வாக்களிப்போம் என்று உறுதி எடுக்க வேண்டும் என விளம்பர பலகையுடன் முக்கிய கடைவீதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
    1
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்வாசல் அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் 100% வாக்களிப்போம் என்று உறுதி எடுக்க வேண்டும் என விளம்பர பலகையுடன் முக்கிய கடைவீதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
    user_Dhamodharan R
    Dhamodharan R
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் அரசியல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,உரிய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தா.உதயசூரியன் அவர்கள் இன்று வெள்ளிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வருகையை முன்னிட்டு வெள்ளிமலை பகுதி மக்கள் உற்சாகக் கடலாக திரண்டனர். மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி,ஆர்ப்பாட்டக் குரல்களுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும், கட்சி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடனமாடி,ஆர்வமுடன் அவரை வரவேற்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் தேர்தல் உற்சாகத்தை மேலும் உயர்த்தியது. வாக்கு சேகரிப்பின் போது, தா.உதயசூரியன் அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து,தங்களது தேர்தல் அறிக்கைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கினார்.மக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு,தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தினர். வெள்ளிமலை பகுதியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு,அந்த தொகுதியில் வேட்பாளருக்கு கிடைக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் அரசியல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,உரிய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தா.உதயசூரியன் அவர்கள் இன்று வெள்ளிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவர் வருகையை முன்னிட்டு வெள்ளிமலை பகுதி மக்கள் உற்சாகக் கடலாக திரண்டனர். மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி,ஆர்ப்பாட்டக் குரல்களுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும், கட்சி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடனமாடி,ஆர்வமுடன் அவரை வரவேற்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் தேர்தல் உற்சாகத்தை மேலும் உயர்த்தியது.
வாக்கு சேகரிப்பின் போது, தா.உதயசூரியன் அவர்கள்  பொதுமக்களை நேரில் சந்தித்து,தங்களது தேர்தல் அறிக்கைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கினார்.மக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், 
உள்ளூர் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு,தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தினர். வெள்ளிமலை பகுதியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு,அந்த தொகுதியில் வேட்பாளருக்கு கிடைக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • Post by CONSUMER CHAIRMAN CHAIRMAN
    3
    Post by CONSUMER CHAIRMAN CHAIRMAN
    user_CONSUMER CHAIRMAN CHAIRMAN
    CONSUMER CHAIRMAN CHAIRMAN
    NGO Worker கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • தேர்தல் நெருங்கும் நிலையில் அரூர் பகுதியில் பிடிக்கப்பட்ட ரூபாய் 22 லட்சத்து 3000 ரொக்கம் பறிமுதல் - கேட்பாரற்று கிடந்த ஸ்கூட்டி டிக்கியில் சோதனை. தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் அருகே இருக்கக்கூடிய பெட்ரோல் பங்க் முன்பு சுமார் 20க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது அவ்வழியாக சென்ற தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. பின்பு அங்கே கேட்பாராற்று இருந்த இருசக்கர வாகனத்தை, சந்தேகம் அடைந்த தேர்தல் பறக்கும் படை குழுவினர் சோதனை செய்ததில் ஸ்கூட்டி டிக்கியில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாகவும், அதில் 22 லட்சத்து 3 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படை குழுவினர் அரூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான செம்மலையிடம் ஒப்படைத்தனர். மேலும் கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் சந்தேகத்திற்கு இடமான பகுதியில் பணம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என அருகே இருந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
    1
    தேர்தல் நெருங்கும் நிலையில் அரூர் பகுதியில் பிடிக்கப்பட்ட ரூபாய் 22 லட்சத்து 3000 ரொக்கம் பறிமுதல் - கேட்பாரற்று கிடந்த  ஸ்கூட்டி டிக்கியில் சோதனை.
தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் அருகே இருக்கக்கூடிய பெட்ரோல் பங்க் முன்பு சுமார் 20க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது அவ்வழியாக சென்ற தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் அவர்கள் ஓட்டம்  பிடித்ததாக கூறப்படுகிறது. பின்பு அங்கே கேட்பாராற்று இருந்த இருசக்கர வாகனத்தை, சந்தேகம் அடைந்த தேர்தல் பறக்கும் படை குழுவினர் சோதனை செய்ததில் ஸ்கூட்டி டிக்கியில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாகவும், அதில் 22 லட்சத்து 3 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படை குழுவினர் அரூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான  செம்மலையிடம் ஒப்படைத்தனர். மேலும் கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் சந்தேகத்திற்கு இடமான பகுதியில் பணம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என அருகே இருந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.