பேராசிரியையை கத்தியால் குத்திய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் - நீதிமன்றம் தீர்ப்பு நித்திரவிளையை அடுத்த சின்னத்துறையை சேர்ந்தவர் அனுகெயின்சி ( 25). இவர் கல்லூரி பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவரை பெஜி காஸ்ட்ரோ (27) என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்தார். இந்நிலையில் அனு கெயின்சிக்கும், வேறு ஒருவருடன் கடந்த 5-1-2017 அன்று திருமணம் நடக்க இருந்தது. இதையறிந்த பெஜி காஸ்ட்ரோ கடந்த 1-1-2017 அன்று அதிகாலை 1 மணி அளவில் அனுகெயின்சி புத்தாண்டு பிரார்த்தனைக்கு ஆலயத்திற்கு சென்ற நிலையில் அங்கு வந்த பெஜி காஸ்ட்ரோ அனுகெயின்சியை கத்தியால் குத்தினார். இது தொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள மகிளா விரைவு கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி சுந்தரையா குற்றம் சாட்டப்பட்ட பெஜி காஸ்ட்ரோவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 16,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் நதியா அழகேசன் ஆஜராகி வாதாடினார்.
பேராசிரியையை கத்தியால் குத்திய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் - நீதிமன்றம் தீர்ப்பு நித்திரவிளையை அடுத்த சின்னத்துறையை சேர்ந்தவர் அனுகெயின்சி ( 25). இவர் கல்லூரி பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவரை பெஜி காஸ்ட்ரோ (27) என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்தார். இந்நிலையில் அனு கெயின்சிக்கும், வேறு ஒருவருடன் கடந்த 5-1-2017 அன்று திருமணம் நடக்க இருந்தது. இதையறிந்த பெஜி காஸ்ட்ரோ கடந்த 1-1-2017 அன்று அதிகாலை 1 மணி அளவில் அனுகெயின்சி புத்தாண்டு பிரார்த்தனைக்கு ஆலயத்திற்கு சென்ற நிலையில் அங்கு வந்த பெஜி காஸ்ட்ரோ அனுகெயின்சியை கத்தியால் குத்தினார். இது தொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள மகிளா விரைவு கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி சுந்தரையா குற்றம் சாட்டப்பட்ட பெஜி காஸ்ட்ரோவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 16,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் நதியா அழகேசன் ஆஜராகி வாதாடினார்.
- அணுக்கனிம சுரங்க அனுமதி நீட்டிப்பு ரத்து செய்யப்படுமா ?ஆஸ்டின் எம்எல்ஏ கேள்வி தமிழக சட்டமன்றத்தில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆஸ்டின் பேசுகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அணு கனிம சுரங்கம் அமைப்பது தொடர்பான அனுமதியை திமுக அரசு நிறுத்தி வைத்திருந்தது ஆனால் தற்போது புதிதாக பதவி ஏற்று உள்ள அரசு ஓர் ஆண்டு காலத்திற்கு அந்த அனுமதியை நீட்டித்து வழங்கி உள்ளது.இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.இந்த அனுமதி ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் மக்களுக்கு எதிரான எந்த திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தாது என்று கூறினார்.1
- இருதயத்தில் உள்ள இரத்த அடைப்பை மாற்ற இந்த பொருட்களை பயன்படுத்துங்கள்1
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணியை ஆவணித் திருவிழாவிற்கு ஒலிக்க வைக்க வேண்டும். பக்தர்கள் கோரிக்கை. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணியை ஆவணித் திருவிழாவிற்கு ஒலிக்க வைக்க வேண்டும். பக்தர்கள் கோரிக்கை. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் சுமார் 137 அடி உயரமும், 9 நிலைகள் கொண்ட கோவில் ராஜகோபுரம் உள்ளது. இந்த ராஜகோபுரத்தில் கி.பி.18 ஆம் நூற்றாண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி உள்ளது. அந்த காலத்தில் நாள்தோறும் 12 மணிக்கு நடைபெறும் உச்சிக்கால பூஜை முடிந்து கோபுர மணி ஒலிக்கப்படும். இந்த கோபுர மணி ஒலிக்கப்பட்ட பின்னரே வீரபாண்டிய கட்டபொம்மன் மதிய உணவை உண்டதாக கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மணி கோபுரத்தின் உச்சியில் உள்ள 9வது நிலையில் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் 300 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வந்த பெருந்திட்ட வளாக பணிகளில் இந்த மணியும் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்த மணி ஒலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய ஆலய மணியை வருகின்ற ஆவணித்திருவிழா நாட்களில் தினமும் ஒலிக்க வைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தென்காசி மாவட்டம் குற்றாலம் இன்றைய நிலவரம் மிதமான மழை இதமான காற்று லேசான வெயில் அனைத்து அருவிகளிலும் சீராக விழும் தண்ணீர் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்1
- தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேரிடர் மீட்பு ஆலோசனை கூட்டம் கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து இன்று வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மீட்பு துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேரிடர் மீட்பு பணிகள் சம்பந்தமாக எடுக்கப்பட்டு வரும் திட்டப் பணிகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.1
- புதுக்கோட்டை அருகே வீட்டில் 3½ பவுன் நகை திருட்டு – சிசிடிவி காட்சி வைரல்1
- விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி உலக சுற்றுலா மையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது இங்கு சூரியன் உதயம் மற்றும் சூரியன் மறையும் காட்சியை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியும் இதன் காரணமாக விடுமுறை தினங்களில் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள் ஓணம் விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்துள்ளனர் அவர்கள் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர் கன்னியாகுமரியில் இயற்கை அழகை கண்டு ரசித்த அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள நினைவகங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர் இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது1
- நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி சுமார் 300 இந்தியர்கள் உட்பட 466 வெளிநாட்டினர், 113 நேபாளிகள் என மொத்தம் 579 பேர் மாயம் என அந்நாட்டு அரசு அதிர்ச்சித் தகவல்! *🔴 300 இந்தியர்கள் நிலை என்ன?* நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி சுமார் 300 இந்தியர்கள் உட்பட 466 வெளிநாட்டினர், 113 நேபாளிகள் என மொத்தம் 579 பேர் மாயம் என அந்நாட்டு அரசு அதிர்ச்சித் தகவல்! உயிரிழப்பு 200-ஐ தாண்டியது; இதுவரை 165 பேரின் உடல்கள் மீட்பு.1