Shuru
Apke Nagar Ki App…
coimpatore news &video
Saba Pathi
coimpatore news &video
More news from Tamil Nadu and nearby areas
- Post by Senthilkumarankumaran1
- திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகமான அம்மா மாளிகையில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 289 பூத் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அவர்களது மகத்தான பணி குறித்த ஒளிப்பட விளக்ககூட்டம் நடைபெற்றது.....1
- நம்பியூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணி இயக்கம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இன்று நம்பியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் நம்பியூர் பேரூர் கழக பொறுப்பாளர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகளை வழங்கினர்.1
- ஒட்டன்சத்திரம் மற்றும் ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள மாணவர்கள், மாணவியர்கள் ஒட்டன்சத்திரம் நகரில் வந்து கல்வி கற்று சொந்த ஊருக்கு திரும்பி செல்கிறனர். இந்நிலையில் பள்ளி விடும் நேரத்தில் அரசு சார்பில் ஊதிய பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் நீண்ட நேரம் காத்திருந்து தாருங்கள் பேருந்து தங்களுடைய ஊருக்கு செல்ல வேண்டியதாக மாணவியர்கள் குற்றம் சாட்டி வருகிறனர். மேலும் பள்ளி விடும் நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க பள்ளி மாணவியர்கள் கோரிக்கை.1
- எடப்பாடி அருகே அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஒட்டப்பட்டி அருள்மிகு ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தெப்பத்தேரில் அலங்கரித்து தாலாட்டு பாடலை பாடி தெப்பத்தேரை வலம் பிடித்து ஆட்டினர்... மேலும் ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சாமிக்கு தீபாரனதை அளிக்கப்பட்டு சுவாமியை விழா குழுவினர் முக்கிய வீதி வழியாக எடுத்துச் சென்று வழிபட்டனர்... அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்...1
- தேனியில் 13வது நாளாக தொடரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் தேனி ஆட்சியர் அலுவலகம் முன் சாப்பாட்டு தட்டை கடண்டியல் அடித்து "ஓசை எழுப்பி" அதன் மூலம்தமிழக முதல்வருக்கு கோரிக்கையை வலியுறுத்தும் "கவன ஈர்ப்பு" போராட்டம் * தேனியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் காலவரையற்ற போராட்டத்தின் 13 வது நாளில், தேனி ஆட்சியர் அலுவலகம் முன், சாப்பாட்டு தட்டை கடண்டியல் அடித்து "ஓசை எழுப்பி " அதன் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கையை வலியுறுத்தும் "கவன ஈர்ப்பு" போராட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசின் கடந்த தேர்தல் வாக்குறுதி 313ன் படி, காலமுறை ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கடந்த ஃபெப்ரவரி மூன்றாம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களின் இந்த "ஓசை எழுப்பும்" போராட்டம் பலரின் கவனத்தையும் ஈர்ப்பதாய் அமைந்துள்ளது.1
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சத்துணவு -அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பாரி வைத்தல் போராட்டம் காத்திருப்பு போராட்டம் சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து இன்று சாப்பிடும் தட்டை கொண்டு கரண்டியை கொண்டும் தாளம் அடித்து வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கால முறை ஊதியம்,வழங்க வேண்டும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்1
- Post by Senthilkumarankumaran1