Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கீதா ஜீவன் போல்பேட்டை கீதா மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் வாக்கினை செலுத்தினார்.
மா.சுடலைமணி
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கீதா ஜீவன் போல்பேட்டை கீதா மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் வாக்கினை செலுத்தினார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளுக்க சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு வாக்களிக்க வசதியாக இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாஞ்சோலை பகுதிகளுக்கு தற்போது வழக்கமாக ஒரு முறை மட்டுமே சென்று வரும் நிலையில், இன்றும் நாளையும் மூன்று முறை பேருந்துகள் இயக்கம்..2
- புளியங்குடி வாக்கு சாவடி அருகே லேசான சலசலப்பு ஏற்பட்டது உடனடியாக விரைந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர் தொடர்ந்து அமைதியாக வாக்கு பதிவு நடக்கிறது1
- கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் இன்று தோவாளை அரசு பள்ளியில் தனது வாக்கைபதிவு செய்வதற்கு வருகை தந்தார். அப்போது அங்கு மக்களுடன் மக்களாக நீண்ட வரிசையில் நின்று அவர் தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் அவரது மகள் தம்பரசியும் தனது வாக்கினை பதிவு செய்தார்.1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்குப்பதிவிற்காக காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்த அவர், பொதுமக்களுடன் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். தமிழரசி ரவிக்குமார் கடந்த மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் வாக்களிப்பு அப்பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. வாக்குச்சாவடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், தேர்தல் அதிகாரிகள் மேற்பார்வையில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.1
- தமிழகத்தில் இன்று (ஏப்.23) காலை 7 மணி முதல் தமிழக சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செல்லூர் பகுதியில் உள்ள பள்ளியில் குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.1
- மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் 3 ம் நாள் நிகழ்ச்சி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி நாதக வேட்பாளர் பல் மருத்துவர் பால்ராச் ராமசாமி அவரது வாக்கினை செலுத்தினார்1
- கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரெ. மகேஷ். நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட SLB அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள பூத் எண் 195-ல் குடும்பத்தினருடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.1
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான இன்று (ஏப்.22) காலை தங்கப்பல்லாக்கில் சுவாமியும் , அம்மனும் தெற்கு வாசல் வில்லாபுரம் பகுதியில் உள்ள பாவற்காய் மண்டபத்திற்கு எழுந்தருளினார்கள். மீண்டும் மாலையில் அங்கிருந்து புறப்பட்டு தெற்கு வாசல் சின்னக்கடை தெரு, தொட்டியகிணறு தெரு, தெற்காவணிமூலவீதி, வழியாக நான்கு சித்திரை வீதிகளை பவனி வந்து திருக்கோவில் சென்று அடைந்தது. சுவாமியும் அம்மனும் தெற்கு வாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் முன்பாக சென்றபோது அங்கிருந்த இஸ்லாமியர்கள் மத வேற்றுமையை கடந்து ரோஸ்மில்க் வழங்கி இந்து முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றினார்கள்1