அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அருகே பழைய மது பாட்டில்கள் சேகரிக்கும் நபர் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் மது போதையில் அந்த நபரை காலி மது பாட்டிலை உடைத்து குத்தி கொலை செய்ததாக இளைஞர் கைது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மதுபான கடை அருகே பாரத ஸ்டேட் வங்கி எதிர்புறம் உள்ள காம்ப்ளக்ஸ் வாசலில் அடையாளம் தெரியாத பழைய இரும்பு பொருட்கள் மது பாட்டில்கள் சேகரிக்கும் நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் விக்னேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சுஜாதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்பநாய் உதவியுடனும் அப்பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். போலீசார் இறந்து கிடந்த சடலத்தை ஆய்வு செய்த போது அந்த நபர் கழுத்து அறுக்கப்பட்டும் பல இடங்களில் ரத்த காயங்கள் இருப்பதும் தெரியவந்தது. அப்பகுதி அருகே ஆங்காங்கே ரத்தம் சிதறி கிடந்ததால் இறந்த கிடந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் போலீசார் விசாரணையில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்த நிலையில் கடந்த அந்த நபர் அருப்புக்கோட்டை வடக்கு துரைராஜபுரம் தெருவை சேர்ந்த பெரிய சர்க்கரை என்பவரது மகன் சந்திரசேகர்(49) என்பது தெரிய வந்தது. சந்திரசேகர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சரியாக வேலைக்குச் செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி குடிப்பதற்காக மது பாட்டில்களை சேகரித்து அதை இரும்பு கடையில் போட்டு பணம் ஆக்கி தினமும் மது அருந்தி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. சந்திரசேகர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அமரர் ஊர்தி மூலம் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சந்திரசேகர் கொலை செய்யப்பட்டாரா கொலை செய்தது யார் முன் விரோதமாக கொலை நடைபெற்றது வேறு என்ன காரணம் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்ததில் சம்பவத்தன்று இரவு மதுபான கடையில் இருந்து மது போதையில் இருந்த சந்திரசேகரை இளைஞர் ஒருவர் கை தாங்கலாக பிடித்து அழைத்துச் சென்றது பதிவாகி இருந்தது. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் அருப்புக்கோட்டை அருகே போடம்பட்டியை சேர்ந்த அந்த இளைஞர் கருப்பசாமியை(22) போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளைஞர் கருப்பசாமி அவ்வப்போது கட்டிட வேலைக்கு செல்வதாகவும் சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி விட்டு சுற்றி திரிந்ததாகவும், வழக்கமாக புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்துவதாகவும் அப்போது கொலை செய்யப்பட்ட சந்திரசேகருக்கும், கருப்பசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரிய வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று கொலை செய்யப்பட்ட சந்திரசேகர் மது போதையில் நடக்க முடியாமல் தள்ளாடியபடி சென்றதாகவும், இதனால் அந்த இளைஞர் கருப்பசாமி சந்திரசேகரை கை தாங்கலாக மதுபான கடையில் இருந்து வெளியே அழைத்துச் சென்றதாகவும், அப்போது மிகுந்த போதையில் இருந்த சந்திரசேகர் தன்னை யாரோ இழுத்துச் செல்வதாக நினைத்து கெட்ட வார்த்தைகளால் கருப்பசாமியை மிகவும் அசிங்கமாக திட்டியதாகவும் இதனால் மது போதையில் இருந்த கருப்பசாமி ஆத்திரத்தில் அங்கு கீழே கிடந்த காலி மது பாட்டிலை எடுத்து உடைத்து சந்திரசேகரின் வயிறு நெஞ்சு உள்ளிட்ட பல இடங்களில் குத்தி உள்ளார். மேலும் மது போதையில் என்ன செய்கிறோம் என தெரியாமல் சந்திரசேகரின் கழுத்திலும் குத்தி கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சந்திரசேகர் உயிரிழந்தார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் நடந்து காலையில் வந்து சந்திரசேகர் இறந்துவிட்டாரா என கருப்பசாமி வந்து பார்த்து சென்றதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து சந்திரசேகரை கொலை செய்ததாக போலீசார் கருப்பசாமியை கைது செய்தனர். தொடர்ந்து கருப்பசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அருகே பழைய மது பாட்டில்கள் சேகரிக்கும் நபர் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் மது போதையில் அந்த நபரை காலி மது பாட்டிலை உடைத்து குத்தி கொலை செய்ததாக இளைஞர் கைது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மதுபான கடை அருகே பாரத ஸ்டேட் வங்கி எதிர்புறம் உள்ள காம்ப்ளக்ஸ் வாசலில் அடையாளம் தெரியாத பழைய இரும்பு பொருட்கள் மது பாட்டில்கள் சேகரிக்கும் நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் விக்னேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சுஜாதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்பநாய் உதவியுடனும் அப்பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். போலீசார் இறந்து கிடந்த சடலத்தை ஆய்வு செய்த போது அந்த நபர் கழுத்து அறுக்கப்பட்டும் பல இடங்களில் ரத்த காயங்கள் இருப்பதும் தெரியவந்தது. அப்பகுதி அருகே ஆங்காங்கே ரத்தம் சிதறி கிடந்ததால் இறந்த கிடந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் போலீசார் விசாரணையில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்த நிலையில் கடந்த அந்த நபர் அருப்புக்கோட்டை வடக்கு துரைராஜபுரம் தெருவை சேர்ந்த பெரிய சர்க்கரை என்பவரது மகன் சந்திரசேகர்(49) என்பது தெரிய வந்தது. சந்திரசேகர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சரியாக வேலைக்குச் செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி குடிப்பதற்காக மது பாட்டில்களை சேகரித்து அதை இரும்பு கடையில் போட்டு பணம் ஆக்கி தினமும் மது அருந்தி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. சந்திரசேகர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அமரர் ஊர்தி மூலம் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சந்திரசேகர் கொலை செய்யப்பட்டாரா கொலை செய்தது யார் முன் விரோதமாக கொலை நடைபெற்றது வேறு என்ன காரணம் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்ததில் சம்பவத்தன்று இரவு மதுபான கடையில் இருந்து மது போதையில் இருந்த சந்திரசேகரை இளைஞர் ஒருவர் கை தாங்கலாக பிடித்து அழைத்துச் சென்றது பதிவாகி இருந்தது. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் அருப்புக்கோட்டை அருகே போடம்பட்டியை சேர்ந்த அந்த இளைஞர் கருப்பசாமியை(22) போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளைஞர் கருப்பசாமி அவ்வப்போது கட்டிட வேலைக்கு செல்வதாகவும் சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி விட்டு சுற்றி திரிந்ததாகவும், வழக்கமாக புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்துவதாகவும் அப்போது கொலை செய்யப்பட்ட சந்திரசேகருக்கும், கருப்பசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரிய வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று கொலை செய்யப்பட்ட சந்திரசேகர் மது போதையில் நடக்க முடியாமல் தள்ளாடியபடி சென்றதாகவும், இதனால் அந்த இளைஞர் கருப்பசாமி சந்திரசேகரை கை தாங்கலாக மதுபான கடையில் இருந்து வெளியே அழைத்துச் சென்றதாகவும், அப்போது மிகுந்த போதையில் இருந்த சந்திரசேகர் தன்னை யாரோ இழுத்துச் செல்வதாக நினைத்து கெட்ட வார்த்தைகளால் கருப்பசாமியை மிகவும் அசிங்கமாக திட்டியதாகவும் இதனால் மது போதையில் இருந்த கருப்பசாமி ஆத்திரத்தில் அங்கு கீழே கிடந்த காலி மது பாட்டிலை எடுத்து உடைத்து சந்திரசேகரின் வயிறு நெஞ்சு உள்ளிட்ட பல இடங்களில் குத்தி உள்ளார். மேலும் மது போதையில் என்ன செய்கிறோம் என தெரியாமல் சந்திரசேகரின் கழுத்திலும் குத்தி கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சந்திரசேகர் உயிரிழந்தார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் நடந்து காலையில் வந்து சந்திரசேகர் இறந்துவிட்டாரா என கருப்பசாமி வந்து பார்த்து சென்றதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து சந்திரசேகரை கொலை செய்ததாக போலீசார் கருப்பசாமியை கைது செய்தனர். தொடர்ந்து கருப்பசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்புதுறையினர் இன்று மதியத்திற்கு மேல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.சாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்வரன்(கிராம ஊராட்சி),உஷா(வட்டார ஊராட்சி) ஆகியோர் அறைகள் மற்றும் மேலாளர்,உதவியாளர்கள் ஆகிய அறைகளில் சோதனை நடத்தினார்கள். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் மகேஷ்வரனிடம் இருந்த ரூபாய் 3000 பணம் ரெக்க மாக கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் மேலும் மகேஷ்வரன் வங்கி கணக்கிற்கு Gpay மூலம் 4 லட்சம் பணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.1
- ஆபத்தான ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதாக 3 பேர் கைது விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அவற்றை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பியதாக 3 இளைஞர்களை காரியாபட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அச்சம்பட்டி முத்தாலம்மன் கோவில் கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்துராமன் (22), அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (23) மற்றும் ஆவியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (23) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகவும், அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்ததாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இதுபோன்ற காட்சிகள் வெளியிடப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர். இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களை காரியாபட்டி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, முத்துராமன், ராமச்சந்திரன், கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஆபத்தான ஆயுதங்களைக் காட்டி வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.1
- RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK1
- குலுங்கியது குன்றம் ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர் *குலுங்கியது குன்றம் ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர்* மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான இன்று ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர். இன்று காலை பௌர்ணமி திதி 9 52க்கு தொடங்கி நாளை காலை 10 மணி வரை உள்ளது. இதனால் மாலை 6 மணிக்கு முதல் திருப்பரங்குன்றத்தில் கிரிவலம் செல்ல ஏராளமான பெண் பக்தர்கள் ஆண்கள் பக்தர்கள் மற்றும் குடும்பத்துடன் வந்து கோயில் வாசல் முன்பாக சாமி கும்பிட்டு பக்தர்கள் கிரிவலம் வந்தனர். ' ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் வந்ததால் பக்தர்கள் கூட்டம் அலை மோதி குன்றம் குலுங்கியது. கிரிவலம் வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தை பெற்று சென்றார்கள்1
- திருச்செந்தூர் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ. 1.51 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மீன்வளத்துறை அதிகாரியிடம் விசாரணை நடத்தினர்.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாம்பரையில் கடம்பா குளம் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை உள்ளது. இங்கு உரிமம் புதுப்பித்தல், மீன் பங்கு வைத்தல் உள்ளிட்டவை நடந்து வருகிறது. இங்கு தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் பால்துரை தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அங்கு இருந்த ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.அதனை தொடர்ந்து திருச்செந்தூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் உத்தரண்டராமன், உதவி ஆய்வாளர் சேந்தராஜன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடித்து விசாரணை. பறிமுதல் செய்யப்பட்ட பணம் கணக்கில் வராத லஞ்ச பணமா என்று விசாரணை நடத்தினர்.1
- கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை ஆரோக்கியமான குழந்தை பிறப்பு முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பால் நடக்க முடியாமல் அவதிப்பட்ட 28 வார கர்ப்பிணிக்கு, மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சவாலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அந்த பெண் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். 28 வயதான கர்ப்பிணிக்கு தொடர்ந்து கடுமையான முதுகுத்தண்டு வலி ஏற்பட்டதுடன், நடப்பதில் சிரமமும் மார்புக்குக் கீழ் உணர்விழப்பும் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளில் முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நரம்புகளுக்கு அதிக அழுத்தம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முதுகுத்தண்டுவடத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும் வகையில் Decompressive Laminectomy அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாய் மற்றும் சேய் இருவரையும் காக்க வேண்டும் மற்றும் 28 வார கர்ப்பம் என்பதால் அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது தாயின் உயிருக்கும் உடல்நலத்திற்கும் சிகிச்சை அளிப்பதுடன், வயிற்றில் இருந்த கருவின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியிருந்தது. பரிசோதனைகளில் T1–T2 பகுதியில் முதுகுத்தண்டு பாதிப்பு, முதுகுத்தண்டில் கூன் விழுந்தது போன்ற மாற்றம் மற்றும் நரம்பு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது ‘பாட்ஸ் ஸ்பைன்’ எனப்படும் முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். C3–T4 பகுதியில் சிக்கலான அறுவைசிகிச்சையை தொடர்ந்து முதுகுத்தண்டுவடத்தை நிலைநிறுத்தும் வகையில் C3–T4 பகுதியில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பல மணி நேரம் நோயாளியை குப்புறப் படுக்க வேண்டியிருந்ததால், தாய் மற்றும் கருவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளின் போது கருவை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் நோயாளியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் மீண்டும் நன்றாக நடக்கத் தொடங்கினார். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நிலையில், பின்னர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். முதுகுத்தண்டுவட அறுவைசிகிச்சை துறைத்தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் கே. செல்வகுமரன், முதுநிலை நிபுணர் டாக்டர் கே. எம். கவில் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர். இது மதுரையில் மருத்துவத் துறையின் மிகப்பெரிய சாதனையாக அமைந்துள்ளது.1
- சிவகங்கையில் மரபுக் கண்காட்சி – தொல்லியல் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் மரபுக் கண்காட்சி மற்றும் தொல்லியல் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை தொல் நடை குழு மற்றும் தமிழ் வையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்ச்செம்மல் பகிரத நாச்சியப்பன் தலைமையில்துன்னுடைக்குழு செயற்குழு உறுப்பினர் வித்தியா கணபதி முன்னிலை வகித்தார். தொல் நடை குழு செயலாளர் நரசிம்மன் வரவேற்புரை வழங்கினார்.தொல்நடைக்குழு நிறுவனர்காளி ராசா நூலினை பற்றி எடுத்துரைத்தார்தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற மரபுசார் கண்காட்சியில் பழமையான நாணயங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், பண்டைய நாகரிகத்தை வெளிப்படுத்தும் பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், ஓவிய ஆசிரியர் முத்துக்கிருஷ்ணனின் கைவண்ணத்தில் உருவானஅணு என்ற கையடக்க மாத இதழும் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு, நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அறிந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ‘தொல்லியல் பயணம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் சிவப்பிரகாஷ் நூலை வெளியிட, மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டார். நமது வரலாறு, பண்பாடு மற்றும் தொல்லியல் சிறப்புகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- அருப்புக்கோட்டை இந்து நாடார் நடுநிலைப்பள்ளி முன்பு உள்ள காலி இடத்தில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதாகவும், அந்த வழியாக செல்லும் பெண்களை சிலர் கிண்டல் செய்வதாகவும் புகார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் இயங்கி வரும் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி கடந்த 87 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் இந்த பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் ஒரு கட்டிடத்தை அன்றைய முதலமைச்சர் காமராஜர் திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் இந்த பள்ளி முன்பு உள்ள காலி இடத்தில் தேவையற்ற சரக்கு வாகனங்கள் டூரிஸ்ட் வேன்கள் போன்ற வாகனங்களை நிறுத்துவதால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமான இடம் எனவும் அத்துமீறி இப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதாகவும் மேலும் அங்கு சிலர் பெண்களை கேலி செய்வதாகவும் அருப்புக்கோட்டை நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்களும் புகார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பள்ளி முன்பு அதுவும் பொதுமக்கள் நடந்து செல்லும் முக்கியமான பகுதியில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இடையூறாக நிறுத்தப்பட்டு இருக்கும் இது போன்ற வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், இந்து நாடார் நடுநிலை பள்ளி முன்பு நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சரக்கு வாகனங்களை தேவையில்லாத வகையில் நிறுத்துகின்றனர். மேலும் இங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அங்கு இருக்கும் சிலர் இவ்வழியாக நடந்து செல்லும் பெண்களை கேலி செய்கின்றனர். இது தொடர்பாக இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என பலமுறை அரசு உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதுபோன்று புகார் அளித்தால் சிலர் நாங்கள் பத்திரிக்கையாளர்கள் எனக்கூறி பள்ளிக்குள் வந்து மிரட்டுகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுத்து இங்கு வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.1