Shuru
Apke Nagar Ki App…
தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கையாளர் சந்திப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது தேனி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ரஞ்ஜீத் பங்கேற்று தேர்தலும் நடத்தை விதிமுறைகள் குறித்து சிறப்புரையாற்றினார்
CPS
தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கையாளர் சந்திப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது தேனி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ரஞ்ஜீத் பங்கேற்று தேர்தலும் நடத்தை விதிமுறைகள் குறித்து சிறப்புரையாற்றினார்
More news from தமிழ்நாடு and nearby areas
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவிடுகின்றனர் அதன் ஒரு பகுதியாக மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் டோல்கேட்டில் தேர்தல் பறக்கும் படை வாகனத்தில் வந்த பறக்கும் படை அலுவலர் ராஜாராம் தலைமையில் இரண்டு உதவி அலுவலர்கள் ஒரு வீடியோ பதிவாளர் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அணியினருடன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தேனியில் இருந்து மதுரை செல்லும் இருசக்கர வாகனம் கார் சரக்கு வாகனம் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி காருக்குள்ளாகவும் காரின் பின்புற டிக்கியிலும் காரில் உள்ளவர்களின் பைகளிலும் தேர்தல் விதிமுறைப்படி ஐம்பதாயிரம் மேற்பட்ட ரொக்க பணம் மேலும் 10,000 மேற்பட்ட பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர் . இதேபோன்று ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளின் மூன்று அணிகளாக பறக்கும் படையினர் தீவிர சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக தேர்தல் விதிகள் அமலுக்கு வந்து இன்று பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.1
- திண்டுக்கல் ரத்ததான குழுவினர் மாவட்டம் முழுவதும் இன்றி பல்வேறு மாவட்டங்களிலும் ரத்த தானம், உடல் தானம், கண் தானம் போன்ற விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர் அவர்களின் இன்றைய விழிப்புணர்வு வீடியோ.1
- திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு ஆகியவைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்1
- இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்1
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் அமைக்கப்பட உள்ள மதுபானக் கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட பாஜக தலைவர் பாண்டித்துரை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேக்கரி என்ற பெயரில் அனுமதி பெற்று ரகசியமாக மதுபானக் கூடம் அமைக்கும் முயற்சி நடக்கிறது என குற்றம் சாட்டினார். கோவில், ரயில்வே கேட் மற்றும் நெடுஞ்சாலை அருகே இது அமைவதால் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணாமலை (59) இவரது மனைவி விஜயா (57) மற்றும் அண்ணாமலை சகோதரி மீனாட்சி (60) ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். பொள்ளாச்சி, தேவகோட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கடந்த 6 ம் தேதி சென்னையில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத், அயோத்தி ,நேபாளம் சுற்றுலா சென்று விட்டு திரும்பும்போது விபத்தில் சிக்கி பலி நேபாளம் நாட்டின் சித்வான் மாவட்டத்தில் (Chitwan District) மனோக்காம் பகுதியில் சாலை விபத்தில் பலி மொத்தம் 25 பேர் சுற்றுலா சென்ற நிலையில் 7 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயம் அடைந்துள்ளனர், காயமடைந்த 9 பேர் சித்வான் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் உயிரிழந்தவர்கள் உடல் சித்வான் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2ஆண்கள் 5 பெண்கள் எனமொத்தம் ஏழு பேர் பலியாகி உள்ளனர் 1)முத்துக்குமார் , 2)அண்ணாமலை 3)மீனாட்சி, 4)சிவகாமி, 5)விஜயா, 6)மீனா, 7)தமிழரசி1
- *தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் - தேனி மாவட்டத்தில் கண்காணிப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பேட்டி* *5 வாக்காளர்கள் மட்டும் உள்ள வெள்ளிமலை வாக்குச்சாவடிகளில் வாக்கு செலுத்துவதற்கு உரிய வசதிகள் செய்து தரப்படும் என பேட்டி* தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் சுமார் 40 பறக்கும் படை வாகனங்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது பணம் தொடர்பான புகார்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் Cvigil என்கிற இணையதளம் மூலம் போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன் தெரிவிக்கப்படும் புகார் குறித்து 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் புகார் கூறும் நபர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் 40 லட்சம் வரை செலவு செய்யப்பட வேண்டும் அது குறித்து தேர்தல் அலுவலர்கள் கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடுத்துவார்கள் தமிழக - கேரளா எல்லையான தேனி இடுக்கி மாவட்ட எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு குறித்து இரு மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது தேனி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேல் 6838 வாக்காளர்களும் நூறு வயதுக்கு மேல் 130 வாக்காளர்களும் உள்ளனர் அவர்களுக்கு வாக்கு செலுத்துவதற்கு உரிய வசதி ஏற்படுத்தி தரப்படும் வருஷநாடு வெள்ளிமலை பகுதியில் வசிக்கும் மக்கள் வெளி மாநிலங்களில் வாக்குரிமை வைத்துள்ளார்கள் அவர்களில் 5 பேர் மட்டும் வந்துள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குரிமை உள்ளது அவர்கள் வாக்கு செலுத்துவதற்கு உரிய வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மாவட்டத்தில் 2000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துகின்றனர் மேலும் மத்திய துணை ராணுவத்தினரும் ஈடுபடுகிறார்கள் பேட்டி - ரஞ்சித் சிங் (தேனி மாவட்ட ஆட்சியர்)1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான பறக்கும் படை மற்றும்1
- திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரைமணிகண்டன் தலைமையில், கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் நடைபெற்றது. காமராசர் சிலையிலிருந்து மாநகராட்சி வரை, அலங்கரிக்கப்பட்ட அமரர் ஊர்தியில் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி நூதன முறையில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.1