Shuru
Apke Nagar Ki App…
கண்டனூரில் மதுபானக் கூடத்திற்கு எதிர்ப்பு: பாஜக போராட்ட எச்சரிக்கை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் அமைக்கப்பட உள்ள மதுபானக் கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட பாஜக தலைவர் பாண்டித்துரை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேக்கரி என்ற பெயரில் அனுமதி பெற்று ரகசியமாக மதுபானக் கூடம் அமைக்கும் முயற்சி நடக்கிறது என குற்றம் சாட்டினார். கோவில், ரயில்வே கேட் மற்றும் நெடுஞ்சாலை அருகே இது அமைவதால் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது
Santhosh Kumar V
கண்டனூரில் மதுபானக் கூடத்திற்கு எதிர்ப்பு: பாஜக போராட்ட எச்சரிக்கை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் அமைக்கப்பட உள்ள மதுபானக் கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட பாஜக தலைவர் பாண்டித்துரை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேக்கரி என்ற பெயரில் அனுமதி பெற்று ரகசியமாக மதுபானக் கூடம் அமைக்கும் முயற்சி நடக்கிறது என குற்றம் சாட்டினார். கோவில், ரயில்வே கேட் மற்றும் நெடுஞ்சாலை அருகே இது அமைவதால் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது
More news from தமிழ்நாடு and nearby areas
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் அமைக்கப்பட உள்ள மதுபானக் கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட பாஜக தலைவர் பாண்டித்துரை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேக்கரி என்ற பெயரில் அனுமதி பெற்று ரகசியமாக மதுபானக் கூடம் அமைக்கும் முயற்சி நடக்கிறது என குற்றம் சாட்டினார். கோவில், ரயில்வே கேட் மற்றும் நெடுஞ்சாலை அருகே இது அமைவதால் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது1
- மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட சி.ஆர்.பி.எப் வீரருக்கு மாரடைப்பு – அரசு மருத்துவமனையில் சிகிச்சை மதுரை, மார். 16 - மதுரையில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக ஜம்மு காஷ்மீரிலிருந்து வந்த மத்திய பாதுகாப்புப் படையான சி.ஆர்.பி.எப் வீரர் ரியாஸ் அகமத் (45) மாரடைப்பு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மதுரைக்கு வந்திருந்த அவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் திங்களனறு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ரியாஸ் அகமத்தை சந்தித்து அவரது உடல்நிலையை குறித்து விசாரித்தார். மருத்துவர்களிடமும் சிகிச்சை நிலை குறித்து கேட்டறிந்தார். பாதுகாப்பு வீரர்களுக்கான வசதிகள் உறுதி செய்ய வேண்டும் சட்டமன்றத் தேர்தல் காலங்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் பணியாற்றும் வீரர்களுக்கு போதிய ஓய்வு, தங்கும் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், அதிக மன அழுத்தம் ஏற்படும் வகையில் தொடர்ந்து பணிகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கோடைக்காலம் என்பதால் மாநிலங்களின் இயற்கை சூழ்நிலை மாறுபாடுகள் காரணமாக வீரர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் போதிய உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.2
- தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கையாளர் சந்திப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது தேனி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ரஞ்ஜீத் பங்கேற்று தேர்தலும் நடத்தை விதிமுறைகள் குறித்து சிறப்புரையாற்றினார்1
- திண்டுக்கல் பாரதிபுரம், 4 ரோடு சந்திப்பில் திண்டுக்கல் மாவட்ட சந்தானம் ரசிகர் மன்றம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தலைவர் ஹேமநாதன், துணைத்தலைவர் குழந்தைராஜ், ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.1
- Post by Natarajan Pitchaimani1
- புதியம்புத்தூரில் #மத்தியஅரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் வாக்குத்திருடன் #நரேந்திரன் அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் இந்திய தேசிய காங்கிரஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தலைவர் K #பெருமாள்சாமி அவர்களின் வழிகாட்டுதலில் இந்தியக் கூட்டணி ..... தமிழகத்தில் கூட்டணியின் தலைமை வகிக்கும் மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி தலைமையில் தமிழகத்தின் முதலமைச்சர் #ஸ்டாலின் அவர்கள் ஆணைப்படி நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் மத்திய வட்டாரம் சார்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டோம் மத்திய அரசு கேஸ் விலை ஏற்றம் மற்றும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக நரேந்திரன் அரசை கண்டித்து *ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான உயர்திரு எம் சி. #சண்முகையா* அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. கூட்டத்தின் CST #செந்தூர்மணி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் V. #லிங்கராஜ் அவர்கள் புதியம்புத்தூர் நகரத் தலைவர் முன்னாள் சேர்மன் #ரமேஷ் அவர்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் #நவநீதகிருஷ்ணன் அவர்கள் #சிவன் அவர்கள் முன்னாள் பஞ்சாயத்து D #முத்துக்குமார் அவர்கள் #ஈசன் சுரேஷ் அவர்கள் மருத்துவப் பிரிவு #தங்கவேல்சாமி அவர்கள் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் மத்திய வட்டாரம் தலைவர் A.X. #ஜேம்ஸ்லாரன்ஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் T.P. #ஹரிபாலகிருஷ்ணன் புதியம்புத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் #துரைமணி அவர்கள் புதியம்புத்தூர் நகர காங்கிரஸ் துணைத் தலைவர் #தனசேகர் அவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டோம் கூட்டத்தின் சிறப்பம்சமாக மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்...5
- திருச்சி மாவட்டம் வாளாடி புது ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (43). இவர் லால்குடி அருகே மேலவாளாடி மேம்பாலத்தில் தனது பைக்கில் நம்பர் 1 டோல்கேட்டிலிருந்து வாளாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கொளக்காநத்தத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து ரஞ்சித்குமார் ஓட்டி சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.1
- மதுரை அருகே வாகன சோதனை: ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.40 லட்சம் பறிமுதல் மதுரை, மார்ச் 16 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் கருமாத்தூர் மற்றும் மேலூர் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலூர் அருகே நடைபெற்ற சோதனையில், குமார் என்பவர் கொண்டு வந்திருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.2.40 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.3