Shuru
Apke Nagar Ki App…
காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வட்டத்தில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் வழிந்து செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல வழியின்றி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து 23வட்ட அஇஅதிமுக பொறுப்பாளர்கள் சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தி சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல மாதங்களாக இப்பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதும் பொதுமக்கள் கருத்தாக உள்ளது. இனியும் காஞ்சிபுரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா அல்லது சுகாதார சீர்கேட்டால் பல்வேறு நோய்தாக்குதலுக்கு பிறகுதான் கண் விழிக்குமா என வேதனை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.!
Naga Rajan
காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வட்டத்தில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் வழிந்து செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல வழியின்றி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து 23வட்ட அஇஅதிமுக பொறுப்பாளர்கள் சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தி சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல மாதங்களாக இப்பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதும் பொதுமக்கள் கருத்தாக உள்ளது. இனியும் காஞ்சிபுரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா அல்லது சுகாதார சீர்கேட்டால் பல்வேறு நோய்தாக்குதலுக்கு பிறகுதான் கண் விழிக்குமா என வேதனை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.!
More news from தமிழ்நாடு and nearby areas
- காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் மெயின் ரோட்டின் இடது பக்கத்தில் நிலத்தடியில் பதிக்க வேண்டிய குழாய்கள் சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள் நடக்க மிகவும் சிரமம் ஏற்பட்டு, மூச்சுத்திணறல் நிலவும் சூழல் உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த குழாய்களை உடனடியாக அகற்றி பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கிருஷ்ணகிரி அருகே உள்ளஹெக்பஞ்சத்தன் தர்காவில்அனைத்து சமுதாய மக்களுக்கு நலத்திட்டஉதவி வழங்கும் விழா.1
- தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசத்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடகர சதுர்த்தி விழா நடைபெற்றது இதில் விநாயகருக்கு 12 பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் தண்ணீர் தேன் பஞ்சாமிர்தம் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது1
- தர்மபுரி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.76 லட்சம் மதிப்புள்ள திட்டப் பணிகளுக்கு நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சேகர் வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் மாதையன் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து பேசினார். கூட்டத்தில் தர்மபுரி நகராட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 பணி ஆய்வாளர்கள், 2 உதவி பொறியாளர்கள், 2 வரைபட வரைவாளர்கள், 2 பொதுப்பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் நகராட்சி கவுன்சிலர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். ஒவ்வொரு வார்டுக்கு யார் யார் பணி மேற்பார்வையாளர்கள் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தர்மபுரி நகராட்சிக்கு புதியதாக நியமிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் எம்.கே. பெருமாள் மற்ற கவுன்சிலர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். தர்மபுரி நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி, பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி, கழிவுநீர் முறையாக வெளியேற வசதியாக சிறு பாலங்கள் அமைப்பது, நகராட்சி பள்ளிக்கூடங்கள் சீரமைக்கும் பணி மற்றும் குடிநீர் திட்ட பணிகள் ரூ.76 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் என்பது உள்ளிட்ட மொத்தம் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் பிரகாஷ், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், நகர் நல அலுவலர் லட்சியவர்ணா, நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், ரமணசரண், கோவிந்தராஜன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்1
- மேற்கு திமுக மாவட்ட கழக சார்பில் திராவிட பொங்கல் விழா நடைபெறுகிறது இவ்விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது1
- Post by Test profile #11
- காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் மெயின் ரோட்டில் மெயின் மின்கம்பிகள் செடிகள் மற்றும் மரக்கிளைகள் அதிகமாக வளர்ந்துள்ளன. இதனால் மின்கம்பிகள் அறுந்து விழும் அபாயம் உள்ளதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த செடிகள் மற்றும் கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1