Shuru
Apke Nagar Ki App…
வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளரை மேளதாளங்கள் முழங்கு வரவேற்ற கிராம மக்கள் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா.ராகேஷ் அவர்கள் கரியாலூர் பகுதிக்கு வாக்கு சேகரிப்பிற்காக கிராமத்துக்கு வந்தபோது அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பெண்கள் மஞ்சள் நீர் எடுத்தும்,பொதுமக்கள் மாலை அணிவித்தும் பாரம்பரிய முறையில் அவரை வரவேற்றனர். மேலும்,மேலதாளம் ஒலிக்கையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சி அங்கு திருவிழா போன்ற சூழலை ஏற்படுத்தியது.
Palani Samy
வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளரை மேளதாளங்கள் முழங்கு வரவேற்ற கிராம மக்கள் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா.ராகேஷ் அவர்கள் கரியாலூர் பகுதிக்கு வாக்கு சேகரிப்பிற்காக கிராமத்துக்கு வந்தபோது அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பெண்கள் மஞ்சள் நீர் எடுத்தும்,பொதுமக்கள் மாலை அணிவித்தும் பாரம்பரிய முறையில் அவரை வரவேற்றனர். மேலும்,மேலதாளம் ஒலிக்கையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சி அங்கு திருவிழா போன்ற சூழலை ஏற்படுத்தியது.
More news from Kallakurichi and nearby areas
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ளது இந்த மலை சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் எல்லை பகுதியாகவும் அமைந்துள்ளது இங்கு பெரியார் நீர்வீழ்ச்சி, கவியும் நீர்வீழ்ச்சி, மேகம் நீர்வீழ்ச்சி, சிறுகல்லூர் நீர்வீழ்ச்சி, எட்டியார் நீர்வீழ்ச்சி, ஆகிய நீர்வீழ்ச்சிகளும், வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது வெள்ளிமலை, கரியாலூர், இடையில் சிறுவர்கள் விளையாடும் வகையில் சறுக்கு மரம்,ஊஞ்சல்,போன்றவைகள் அமைக்கப்பட்டு சிறுவர்பூங்கா, அமைந்துள்ளது. மற்றும் குடும்பத்துடன் சென்று சிறுவர் பூங்கா, தொங்கு பாலம், ஆகியவற்றை சுற்றிப் பார்க்க படகு குளம் அமைந்துள்ளது. மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான முறையில் தங்கும் விதமாக வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் மூங்கில் குடில், அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்வார்கள் தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விடுமுறை தினமான இன்று பெரியார் நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுத்து செல்லும் வகையில் ஓய்வெடுக்கும் அறை அமைத்து தர வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு ஓய்வு எடுக்கும் அறை அமைத்துத் தர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.1
- Post by சந்திரசேகர். D1
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் அத்தனூர் சித்திரை மாத தேர் பண்டிகை முன்னிட்டு அருள்மிகு அத்தனூர் அம்மன் திருவீதி உலா நடைபெற்றன விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்1
- சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அங்கு சுயேச்சையாகப் போட்டியிடும் பிரேம்குமாருக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். 'டிவி' சின்னத்தில் போட்டியிடும் பிரேம்குமார், விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் கிளைச் செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பிரேம்குமார், "நான் நீண்டகாலமாக விஜய் ரசிகராகவும், நிர்வாகியாகவும் இருந்துள்ளேன். எடப்பாடி பழனிசாமியை நிச்சயம் தோற்கடிப்பேன். தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவுடன் 'டிவி' சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று பெரும் வெற்றி பெறுவேன்," என்றார்.1
- திமுக வேட்பாளர் பழனியப்பன் செம்மாண்ட குப்பம் எஸ் கொட்டாவூர் குண்டல்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார் அப்போது அவருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து மாலை அணிவித்து ஆர்த்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்1
- Post by Periyasamy1
- Post by Romanreigns_theguy_25k1
- Post by சந்திரசேகர். D2