logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பாட்டியின் சாதனை. சாதிக்க வயது ஒரு தடையில்லை. சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை மற்றும் போதும்.

9 hrs ago
user_Senthilkumarankumaran
Senthilkumarankumaran
Journalist Coimbatore South, Tamil Nadu•
9 hrs ago

பாட்டியின் சாதனை. சாதிக்க வயது ஒரு தடையில்லை. சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை மற்றும் போதும்.

More news from Tamil Nadu and nearby areas
  • பாட்டியின் சாதனை. சாதிக்க வயது ஒரு தடையில்லை. சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை மற்றும் போதும்.
    1
    பாட்டியின் சாதனை.
சாதிக்க வயது ஒரு தடையில்லை. சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை மற்றும் போதும்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    9 hrs ago
  • விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் 10 லட்சத்தில் NSN பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு அலங்காரம் செய்து வழிபாடு விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். இதனை சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். இவ்விழாவில் கைலாய வாத்தியங்கள் இசைத்தும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    4
    விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் 
10 லட்சத்தில் NSN பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு அலங்காரம் செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். இதனை சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். 
இவ்விழாவில் கைலாய வாத்தியங்கள் இசைத்தும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    user_ரமேஷ்குமார்
    ரமேஷ்குமார்
    பத்திரிகையாளர் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் . வேற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களும் முன்னாள் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
    1
    தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் 
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் . வேற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர்  பிரகாஷ் அவர்களும் முன்னாள் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி  அமைப்பாளர் செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில்  கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
    user_Dpm news
    Dpm news
    Photographer தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    12 hrs ago
  • கோபியில் இந்து மக்கள் கட்சி (தமிழகம் )சார்பாக 18ம் ஆண்டு நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து எழுச்சி திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் கோபியில் இந்து மக்கள் கட்சி (தமிழகம் )சார்பாக 18ம் ஆண்டு நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து எழுச்சி திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்.அதனை தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை கோபி அறிஞர் அண்ணா வியாபாரிகள் சங்க தலைவர் சிவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கலை நிகழ்ச்சியை சக்திவேல் துவக்கி வைத்தார்.மேலும் விழாவில் மாவட்ட செயலாளர் குமரவேல், மாநில இளைஞர் அணி செயலாளர் கராத்தே வசந்த்,மாநில அமைப்பு செயலாளர் அருண்ராஜ், மாநில செயலாளர் வாடிவாசல் ஹரி, தமிழ்செல்வம், சதீஸ்குமார், அருண்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்து அதிரடி படை நிறுவன தலைவர் ராஜகுரு வாழ்த்துரை வழங்கினார்.இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேசும் போது,தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்ட மன்ற தேர்தலில் திமுக வை தோற்கடித்து ஒரு நல்ல விஷயத்தை செய்துள்ளார்.திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எனவும், அந்த வரிசையில் த வெ க வும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான் என கூறினார்.சட்ட சபையில் யாரெல்லாம் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் மத போதகர்கள்,அமைச்சர் செங்கோட்டையன் பிறப்பில் இந்துவா இல்லை கிறிஸ்தவரா என கேள்வி எழுப்பினார்.உதயநிதி கார் பந்தயம் நடத்தினால் ஊதாரி தனம், ஆனால் த வெ க வினர் நடத்தினால் மக்களுக்கு நன்மையா மக்கள் ஏமாற கூடாது எனவும் பேசினார்.
    4
    கோபியில் இந்து மக்கள் கட்சி (தமிழகம் )சார்பாக 18ம் ஆண்டு நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து எழுச்சி திருவிழா நடைபெற்றது. 
ஈரோடு மாவட்டம் கோபியில் இந்து மக்கள் கட்சி (தமிழகம் )சார்பாக 18ம் ஆண்டு நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து எழுச்சி திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்.அதனை தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை கோபி அறிஞர் அண்ணா வியாபாரிகள் சங்க தலைவர் சிவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கலை நிகழ்ச்சியை சக்திவேல் துவக்கி வைத்தார்.மேலும் விழாவில் மாவட்ட செயலாளர் குமரவேல், மாநில இளைஞர் அணி செயலாளர் கராத்தே வசந்த்,மாநில அமைப்பு செயலாளர் அருண்ராஜ், மாநில செயலாளர் வாடிவாசல் ஹரி, தமிழ்செல்வம், சதீஸ்குமார், அருண்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்து அதிரடி படை நிறுவன தலைவர் ராஜகுரு வாழ்த்துரை வழங்கினார்.இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேசும் போது,தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்ட மன்ற தேர்தலில் திமுக வை தோற்கடித்து ஒரு நல்ல விஷயத்தை செய்துள்ளார்.திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எனவும், அந்த வரிசையில் த வெ க வும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான் என கூறினார்.சட்ட சபையில் யாரெல்லாம் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் மத போதகர்கள்,அமைச்சர் செங்கோட்டையன் பிறப்பில் இந்துவா இல்லை கிறிஸ்தவரா என கேள்வி எழுப்பினார்.உதயநிதி கார் பந்தயம் நடத்தினால் ஊதாரி தனம், ஆனால் த வெ க வினர் நடத்தினால் மக்களுக்கு நன்மையா மக்கள் ஏமாற கூடாது எனவும் பேசினார்.
    user_Vengadesh
    Vengadesh
    கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
    6 hrs ago
  • கோபிச்செட்டிப்பாளையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி ஹிந்தி பேசும் மாநிலங்களில் கூட முதலமைச்சர் விஜயின் தாக்கம் உள்ளது, வட இந்தியர்கள் கூட தமிழக முதலமைச்சரை போல ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என கோபிச்செட்டிபாளையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி. கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் அறிஞர் அண்ணாவின் 118 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகத் தேர்தல் களத்தில் முதலில் 1967, அதற்குப் பிறகு 1977 என்று கூறி, 2026-இல் தமிழகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று தேர்தல் நேரத்தில் குறிப்பிட்டார்கள். இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் மேலை நாடுகளுக்குசென்று, 11,000 கோடி அளவுக்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான முதலீடுகளை ஈர்த்துள்ளார். தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்க வேண்டும்; கூடுதலாக இடம்பெற வேண்டும்; அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும்; அதே நேரத்தில் சட்ட ஒழுங்கு பேணிக் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கக்கூடிய முதலமைச்சராக விஜய் விளங்குகிறார். முதலமைச்சரை பொறுத்தவரையில், தூய்மையான ஆட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று சொன்ன ஒரே தலைவர் விஜய் ஆவார். அனைத்து மாநிலங்களும் அவரை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. பிற மாநில மக்கள் கூட, தமிழக விஜய் அவர்களைப் போல முதலமைச்சர் கிடைக்க வேண்டும் என்று பேசுகின்றனர். ஹிந்தி பேசும் மாநிலங்களில் கூட விஜயின் தாக்கம் அதிகமாக உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுவது குறித்து, 14, கூட்டணி ,17 கூட்டணிக் கட்சிகள் உள்ள சூழ்நிலையிலும், தனித்து நின்று வெற்றிபெறக்கூடிய ஒரு இயக்கமாக தமிழக வெற்றிக் கழகம் திகழ்கிறது. ஒரு இயக்கத்தில் இருப்பவர்கள் கொள்கை ரீதியாக என்ன முடிவுகளை எடுக்கிறார்களோ, அதைப்பற்றி நான் கருத்து சொல்ல முடியாது; அது அவரவர் விருப்பம். எங்களை பொறுத்தவரையில் தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெற்றி என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று; அதே நேரத்தில், வாக்கு வித்தியாசம் எந்த அளவுக்குப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா ,முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை வார்த்தைகள் பேசியது குறித்து , அவர் இதே வேலையைத் தான் செய்து வருகிறார். ஜெயலலிதா இருக்கும் போதும், அவருக்கு பிறகும் ஆ. ராசா இதுபோன்ற வார்த்தைகளை தான் உச்சரித்து வருகிறார். பேரறிஞர் அண்ணாவின் கனவு என்னவென்றால், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பதுதான். தொடர்ந்து மின் நுகர்வு அதிகரித்து வருவது குறித்து, தமிழகத்தில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கடந்த 20 நாட்களாக நம்மைவிட கூடுதலாக மின்வெட்டு அங்கு நிலவுகிறது; மின் பற்றாக்குறை உள்ளது. அதற்காகத்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், எங்கெல்லாம் பற்றாக்குறை உள்ளதோ அதைச் சரிசெய்ய வேண்டும் என்பதற்காகத் துணை மின் நிலையங்களை ஆய்வு செய்து வருகிறார். சோலார் மூலம் பெறப்படும் மின்சாரத்தை பகல் நேரங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், அதை இரவு நேரங்களில் சேமித்து வைப்பதற்கான வழிகளை தேர்வு செய்து வருகிறார். அவை செயல்பாட்டிற்கு வரும்போது, மின்மிகை மாநிலமாக தமிழகம் உருவெடுக்கும். வருவாய்துறையில் உள்ள காலி பணியிடங்களில் உதவிப் பணியாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டி உள்ளது. கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் போன்ற பணியிடங்கள் தேவையான அளவிற்கு நிரப்பப்பட்டுள்ளன. உதவி பணியாளர்கள் பணியிடங்கள், திமுக ஆட்சியில் அனைத்து இடங்களிலும் தேர்வு செய்யப்பட்டபோது விதிகளின் அடிப்படையில் தவறுகள் ஏற்பட்டதால், அதன்பிறகு தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இரண்டு மாவட்டங்களை தவிர, பிற அனைத்து மாவட்டங்களிலும் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதுகுறித்து முதலமைச்சரோடு கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். சூப்பர் எல் நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகரத்தை பொறுத்தவரையில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது, சென்னை மாநகரம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு அமைச்சர்கள் தலைமைப் பொறுப்பேற்று, 7 அமைச்சர்கள் கண்காணிப்பிற்காக நியமிக்கப்பட்டனர். 9 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் அவர்கள் அறிந்து செயல்பட்டு வருகிறார். மக்கள் பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன பேசினார்கள் என்பதை அனைவரும் கண்கூடாக பார்த்தனர். வருவாய்த் துறையில் பணியாளர்களுக்கான வருகை பதிவேடு பயோமெட்ரிக் மெட்ரிக் முறையில் மாற்றப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கோபிசெட்டிபாளையத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படும். பட்டினப்பாக்கத்தில் சட்டமன்ற அலுவலகம் அமைப்பது போன்ற எந்தத் திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதற்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அங்கு நான்கு ஏக்கர் நிலம் மட்டும்தான் உள்ளது, அது போதாது என்ற நிலையில், கர்நாடகாவில் இருப்பதைப் போல அனைத்து அலுவலகங்களும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.காலம் செல்லசெல்ல முதலமைச்சரே அதை பற்றி முடிவு செய்வார். வறட்சி காலத்தில் கால்நடைகளுக்காக 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு வேண்டிய பராமரிப்புகளை மேற்கொள்வதற்கும், வைக்கோல் வாங்குவதற்கும், கால்நடை பராமரிப்புத் துறைக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. வறட்சி வரும் காலத்தில் சூழலை ஆராய்ந்து, மனதில்கொண்டு அதற்கான முடிவுகளை எடுக்க 283 கோடி பகிர்ந்து வழங்கப்படும்.
    1
    கோபிச்செட்டிப்பாளையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ஹிந்தி பேசும் மாநிலங்களில் கூட முதலமைச்சர் விஜயின் தாக்கம் உள்ளது, வட இந்தியர்கள் கூட தமிழக முதலமைச்சரை போல ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என கோபிச்செட்டிபாளையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் அறிஞர் அண்ணாவின் 118 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். 
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகத் தேர்தல் களத்தில் முதலில் 1967, அதற்குப் பிறகு 1977 என்று கூறி, 2026-இல் தமிழகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று தேர்தல் நேரத்தில் குறிப்பிட்டார்கள்.
இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் மேலை நாடுகளுக்குசென்று, 11,000 கோடி அளவுக்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான முதலீடுகளை ஈர்த்துள்ளார்.
தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்க வேண்டும்;  கூடுதலாக இடம்பெற வேண்டும்; அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும்; அதே நேரத்தில் சட்ட ஒழுங்கு பேணிக் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கக்கூடிய முதலமைச்சராக விஜய் விளங்குகிறார்.
முதலமைச்சரை பொறுத்தவரையில், தூய்மையான ஆட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று சொன்ன ஒரே தலைவர் விஜய் ஆவார்.
அனைத்து மாநிலங்களும் அவரை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. பிற மாநில மக்கள் கூட, தமிழக விஜய் அவர்களைப் போல  முதலமைச்சர் கிடைக்க வேண்டும் என்று பேசுகின்றனர். 
ஹிந்தி பேசும் மாநிலங்களில் கூட விஜயின் தாக்கம் அதிகமாக உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுவது குறித்து, 14, கூட்டணி ,17 கூட்டணிக் கட்சிகள் உள்ள சூழ்நிலையிலும், தனித்து நின்று வெற்றிபெறக்கூடிய ஒரு இயக்கமாக தமிழக வெற்றிக் கழகம் திகழ்கிறது. 
ஒரு இயக்கத்தில் இருப்பவர்கள் கொள்கை ரீதியாக என்ன முடிவுகளை எடுக்கிறார்களோ, அதைப்பற்றி நான் கருத்து சொல்ல முடியாது; அது அவரவர் விருப்பம். எங்களை பொறுத்தவரையில் தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வெற்றி என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று;
அதே நேரத்தில், வாக்கு வித்தியாசம் எந்த அளவுக்குப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா ,முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை வார்த்தைகள் பேசியது குறித்து , அவர் இதே வேலையைத் தான் செய்து வருகிறார். ஜெயலலிதா இருக்கும் போதும், அவருக்கு  பிறகும் ஆ. ராசா இதுபோன்ற வார்த்தைகளை தான் உச்சரித்து வருகிறார். பேரறிஞர் அண்ணாவின் கனவு என்னவென்றால், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பதுதான்.
தொடர்ந்து மின் நுகர்வு அதிகரித்து வருவது குறித்து, தமிழகத்தில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கடந்த 20 நாட்களாக நம்மைவிட கூடுதலாக மின்வெட்டு அங்கு நிலவுகிறது; மின் பற்றாக்குறை உள்ளது. அதற்காகத்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், எங்கெல்லாம் பற்றாக்குறை உள்ளதோ அதைச் சரிசெய்ய வேண்டும் என்பதற்காகத் துணை மின் நிலையங்களை ஆய்வு செய்து வருகிறார். 
சோலார் மூலம் பெறப்படும் மின்சாரத்தை பகல் நேரங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், அதை இரவு நேரங்களில் சேமித்து வைப்பதற்கான வழிகளை தேர்வு செய்து வருகிறார். அவை செயல்பாட்டிற்கு வரும்போது, மின்மிகை மாநிலமாக தமிழகம் உருவெடுக்கும்.
வருவாய்துறையில் உள்ள காலி பணியிடங்களில் உதவிப் பணியாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டி உள்ளது. கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் போன்ற பணியிடங்கள் தேவையான அளவிற்கு நிரப்பப்பட்டுள்ளன.
உதவி பணியாளர்கள் பணியிடங்கள், திமுக ஆட்சியில் அனைத்து இடங்களிலும் தேர்வு செய்யப்பட்டபோது விதிகளின் அடிப்படையில் தவறுகள் ஏற்பட்டதால், அதன்பிறகு தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இரண்டு மாவட்டங்களை தவிர, பிற அனைத்து மாவட்டங்களிலும் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதுகுறித்து முதலமைச்சரோடு கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
சூப்பர் எல் நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகரத்தை பொறுத்தவரையில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது, சென்னை மாநகரம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு அமைச்சர்கள் தலைமைப் பொறுப்பேற்று, 7 அமைச்சர்கள் கண்காணிப்பிற்காக நியமிக்கப்பட்டனர். 9 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் அவர்கள் அறிந்து செயல்பட்டு வருகிறார்.
மக்கள் பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன பேசினார்கள் என்பதை அனைவரும் கண்கூடாக பார்த்தனர்.
வருவாய்த் துறையில் பணியாளர்களுக்கான வருகை பதிவேடு பயோமெட்ரிக் மெட்ரிக் முறையில் மாற்றப்படுவது குறித்து  இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
கோபிசெட்டிபாளையத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படும்.
பட்டினப்பாக்கத்தில் சட்டமன்ற அலுவலகம் அமைப்பது போன்ற எந்தத் திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதற்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அங்கு நான்கு ஏக்கர் நிலம் மட்டும்தான் உள்ளது, அது போதாது என்ற நிலையில், கர்நாடகாவில் இருப்பதைப் போல அனைத்து அலுவலகங்களும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.காலம் செல்லசெல்ல முதலமைச்சரே அதை பற்றி முடிவு செய்வார்.
வறட்சி காலத்தில் கால்நடைகளுக்காக 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு வேண்டிய பராமரிப்புகளை மேற்கொள்வதற்கும், வைக்கோல் வாங்குவதற்கும், கால்நடை பராமரிப்புத் துறைக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. வறட்சி வரும் காலத்தில் சூழலை ஆராய்ந்து, மனதில்கொண்டு அதற்கான முடிவுகளை எடுக்க 283 கோடி பகிர்ந்து வழங்கப்படும்.
    user_Dinesh
    Dinesh
    கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
    6 hrs ago
  • ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு பெரியாஞ் செட்டி பட்டியில் கண் திருஸ்டி கணபதியை இளைஞர் அணி சார்பாக வழிபாடு செய்தனர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு, பெரியாஞ்செட்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்திருஷ்டி கணபதியை சிறப்பு வழிபாடு செய்தனர். இக்கண்திருஸ்டி கணபதி இராஜகணபதியாய் சிம்மாசனத்தில் அமர்ந்து கம்பீரமாய் கண்திருஷ்டி களை நீக்குவதை தம் பணியாய் வைத்திருப்பது‌ போல் சிலை அமைந்திருந்தது. இன்று கணபதிக்கு சிறப்புபூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து கண்திருஷ்டி கணபதியை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு விழா கமிட்டியாரின் சார்பாக கொழுக்கட்டை, சுண்டல், தக்காளி சாதம், அவல் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பி.கண்ணன் ,நா.மதன்குமார், ப.முருகானந்தம் ,விஷ்ணு,சரவணன்,தமிழரசன்,அருண்குமார்,பிரவீன்,ஆ.இ.ஹரிகிருஷ்ணன், ஆ.ஹரிகிருஸ்ணன் தலைமையிலான விழாக்கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
    2
    ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு பெரியாஞ் செட்டி பட்டியில் கண் திருஸ்டி கணபதியை இளைஞர் அணி சார்பாக வழிபாடு செய்தனர்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு, பெரியாஞ்செட்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  கண்திருஷ்டி கணபதியை சிறப்பு வழிபாடு செய்தனர். 
இக்கண்திருஸ்டி கணபதி
இராஜகணபதியாய்  சிம்மாசனத்தில் அமர்ந்து கம்பீரமாய் கண்திருஷ்டி களை நீக்குவதை தம் பணியாய் வைத்திருப்பது‌ போல் சிலை அமைந்திருந்தது. 
இன்று கணபதிக்கு  சிறப்புபூஜைகள் செய்து  வழிபாடு செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து கண்திருஷ்டி கணபதியை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு விழா கமிட்டியாரின் சார்பாக கொழுக்கட்டை, சுண்டல், தக்காளி சாதம், அவல் பிரசாதமாக வழங்கப்பட்டது. 
விழாவிற்கான ஏற்பாடுகளை பி.கண்ணன் ,நா.மதன்குமார், ப.முருகானந்தம் ,விஷ்ணு,சரவணன்,தமிழரசன்,அருண்குமார்,பிரவீன்,ஆ.இ.ஹரிகிருஷ்ணன், ஆ.ஹரிகிருஸ்ணன் தலைமையிலான விழாக்கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
    user_Elangovan
    Elangovan
    Local News Reporter ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    13 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் குடிநீர் வேண்டி பெண்கள் சாலை மறியல் முயற்சி காவல் நிலையத்தில் பேரூராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் ​ தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சாத்தா கோவில்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகச் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. ​இது குறித்துப் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்களும் பொதுமக்களும், தேவதானப்பட்டி காவல் நிலையம் அருகே திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ​அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் குவிந்த பொதுமக்கள், தங்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ​இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலர்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துக் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாத்தா கோவில்பட்டி பகுதிக்கு உடனடியாகக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேரூராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். ​அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுப் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் குடிநீர் வேண்டி பெண்கள் சாலை மறியல் முயற்சி காவல் நிலையத்தில் பேரூராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
​
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சாத்தா கோவில்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகச் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
​இது குறித்துப் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்களும் பொதுமக்களும், தேவதானப்பட்டி காவல் நிலையம் அருகே திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
​அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். 
தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் குவிந்த பொதுமக்கள், தங்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
​இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலர்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துக் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாத்தா கோவில்பட்டி பகுதிக்கு உடனடியாகக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேரூராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர்.
​அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுப் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாட்டம் திராளான பொதுமக்கள் வந்து தரிசனம் செய்தனர் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம்மாள் காலனி, பழனி கவுண்டர் காலனி, வேலம்மாள் காலனி, முருகன் நகர் ஊர் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாக கமிட்டி செல்வகுமார், நாராயணசாமி, முருகேசன், சிவக்குமார், தட்சிணாமூர்த்தி, ஐயம்பெருமாள், ஓமேஸ்வர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    4
    ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில்
விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாட்டம்
திராளான பொதுமக்கள் வந்து தரிசனம் செய்தனர்

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது.  
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கினர்.  
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம்மாள் காலனி, பழனி கவுண்டர் காலனி, வேலம்மாள் காலனி, முருகன் நகர் ஊர் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாக கமிட்டி செல்வகுமார், நாராயணசாமி, முருகேசன், சிவக்குமார், தட்சிணாமூர்த்தி, ஐயம்பெருமாள், ஓமேஸ்வர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    user_ரமேஷ்குமார்
    ரமேஷ்குமார்
    பத்திரிகையாளர் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.