Shuru
Apke Nagar Ki App…
சித்திரை திருவிழா: சுவாமி கற்பக விருட்சம், அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (ஏப்.19) காலை கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை சுவாமி கற்பக விருட்சம் வாகனத்திலும், மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்துருளி நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்தனர். அம்மன் வீதி உலாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாசி வீதிகளில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.
சு.இரத்தினவேல்
சித்திரை திருவிழா: சுவாமி கற்பக விருட்சம், அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (ஏப்.19) காலை கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை சுவாமி கற்பக விருட்சம் வாகனத்திலும், மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்துருளி நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்தனர். அம்மன் வீதி உலாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாசி வீதிகளில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் சக்திவேல் இன்று பெரியகுளம் பகுதிகளா உள்ள தண்டு பாளையம் பட்டாளம்மன் கோவில் அம்பேத்கர் நகர் வள்ளுவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் மேலும் திமுக கூட்டணியில் அங்கம் வசிக்கும் விடுதலை சிறுத்தை கட்சி பானை சின்னத்தில் போட்டியிடுவதால் தங்கள் வாக்குகளை பானை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என வாக்கு சேகரித்தார் மேலும் திமுக அரசின் சாதனைகள் மற்றும் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா, பழைய கோட்டை கிராமம் புறத்தாகுடியை சேர்ந்த அந்தோணி என்பவரின் மகள் ஜாஸ்மின் அந்தோணி பிரியா (40). இவர் பிறந்ததிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் தந்தை அந்தோணி கடந்த 2000 ஆம் ஆண்டும், தாயார் ஆரோக்கியமேரி கடந்த 2016 ஆம் ஆண்டும் இறந்துவிட்ட நிலையில், அவரின் பெரியப்பா மகனான ஜான்பால்ராஜ் என்பவரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று 20.04.2026 மதியம் சுமார் 15:30 மணியளவில் தனது வீட்டின் பின்பக்கம் குளிக்க செல்லும் போது, சுமார் 2½ அடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்து விட்டார். இதை அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வடமதுரை மேற்கு ஒன்றிய பகுதிகளில் இன்று வேடசந்தூர் அதிமுக வேட்பாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் மக்களோடு மக்களாக தேவராட்டம் ஆடி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். அதிமுக ஆட்சியின் சாதனைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் மற்றும் வடமதுரையில் அதிமுக ஆட்சி காலத்தில் செய்த மேம்பாட்டு பணிகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி தீவிர பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் வேடசந்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- சட்டமும்_Vs_கட்சியும் !!! சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்1
- கயத்தாறில் ஹனீபா ஸீரா அறக்கட்டளை சார்பில் பள்ளி வாசல் வளாகத்தில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 9,10,11,12, மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி ஆலோசகர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குறித்து தமிழ் நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளர் பொறியாளர் ஆர்.முஹம்மது அனஸ் அவர்களின் சிறப்புரையாற்றினார். இதில் மாண மாணவிகள் மேற்படிப்புகள் எதை தேர்ந்தெடுத்து படிக்கலாம் அதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை நிர்வனர் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் பீரப்பா, மற்றும் ஆசிரியர்கள் பக்ரூதீன்,தீஷ்வான், நிர்வாகிகள் பக்கீரப்பா, ஜாஸ்ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.3
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- மதுரை திருப்பரங்குன்றம் கோட்டை தெரு பகுதியில் நேற்று (ஏப்.19) இரவு ரூ. 50 லட்சம் பணத்துடன் நின்று கொண்டிருந்த திமுகவினரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பான செய்தி அறிந்த தவெக வேட்பாளர் சி டி ஆர் நிர்மல் குமார் காவல் நிலையம் வந்து குற்றவாளிகளை விடுவிக்க கூடாது என்றும், பணம் பட்டுவாடா தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.1
- *இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் - தீவிர பரப்புரையில் முன்னாள் முதலமைச்சரும், போடி தொகுதி திமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்* *15 கிலோ சாக்லேட்களால் ஆன மாலையை ஓபிஎஸ்-க்கு அணிவித்தும், வேல் வழங்கியும் ஓபிஎஸ்ஐ உற்சாகமாக வரவேற்ற கட்சியினர்* தேனி மாவட்டம் போடி தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போடி நகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் சிலை, வஉசி சிலை, காமராஜர் சிலை, தேவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது பிரச்சாரத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் களத்தில் உங்கள் முன் நிறுத்திய முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எந்நாளும் நான் நன்றி கடன் பட்டுள்ளேன் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும், விடுபட்டவர்களுக்கும் தேர்தல் முடிந்ததும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார் ஒன்றிய அரசின் இடையூறுகளையும் தாண்டி கட்சியையும், ஆட்சியையும் முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் என்று பேசினார் முன்னதாக பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்த ஓபிஎஸ்- க்கு கட்சி நிர்வாகிகள் 15 கிலோ சாக்லேட்டுகளால் ஆன மாலைகளை அணிவித்தும், வேல் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்1
- Post by பெரியசாமி1