தேனி உழவர் சந்தையின் இன்றைய காய்கறிகளின் விலை விபரம் (16.09.2026) கத்தரிக்காய் - 35, 30 தக்காளி - 25 வெண்டைக்காய் - 35, 30 கொத்தவரைக்காய் - 28 சுரைக்காய் - 14, 10 புடலங்காய் - 25 பாகற்காய் - 58, 38 பீர்க்கங்காய் - 38, 35 முருங்கைக்காய் - 45, 40, 30 பூசணிக்காய் - 16, 18, 15 பச்சை மிளகாய் (உருட்டு) - 70 அவரைக்காய் - 65, 60 தேங்காய் - 58 ஆப்பிள் - 260, 180, 140 ஆரஞ்சு - 160 மாதுளை - 220, 160 சாத்துக்குடி - 80 உருளைக்கிழங்கு - 55, 34 கருணைக்கிழங்கு - 50 சேப்பங்கிழங்கு - 35 கருவேப்பிலை - 58 கொத்தமல்லி - 35 புதினா - 64 சின்ன வெங்காயம் - 85, 80, 75 பெரிய வெங்காயம் - 65, 60, 50 இஞ்சி - 160, 75 வெள்ளை பூண்டு - 240, 200, 180, 160, 140, 100 வாழை இலை - 60 வாழைப்பூ - 10 வாழைத்தண்டு - 15 வாழைப்பழம் - 70, 60 பீட்ரூட் - 33 நூல்கோல் - 40 முள்ளங்கி - 25 முருங்கை பீன்ஸ் - 100 பட்டர் பீன்ஸ் - 160 சோயா பீன்ஸ் - 110 செலக்ஷன் பீன்ஸ் - 100 முட்டைக்கோஸ் - 28 கேரட் - 48 டர்னிப் - 120 சௌசௌ - 30 காலி பிளவர் - 40, 35 பச்சை பட்டாணி - 170, 150 சேம்பு - 50 எலுமிச்சை - 200, 180 பப்பாளி - 35, 30, 25 முலாம்பழம் - 60 மொச்சை - 54 மக்காச்சோளக்கதிர் - 50 அரைக்கீரை - 25 பொன்னாங்கண்ணிக்கீரை - 20 கோவக்காய் - 35 குடைமிளகாய் - 46 மிளகுதக்காளி கீரை - 25 வாழைப்பழம் (பச்சை) - 50 வாழைப்பழம் (பூவன்) - 40 வாழைப்பழம் (நேந்திரன்) - 50 வாழைக்காய் - 30, 36
தேனி உழவர் சந்தையின் இன்றைய காய்கறிகளின் விலை விபரம் (16.09.2026) கத்தரிக்காய் - 35, 30 தக்காளி - 25 வெண்டைக்காய் - 35, 30 கொத்தவரைக்காய் - 28 சுரைக்காய் - 14, 10 புடலங்காய் - 25 பாகற்காய் - 58, 38 பீர்க்கங்காய் - 38, 35 முருங்கைக்காய் - 45, 40, 30 பூசணிக்காய் - 16, 18, 15 பச்சை மிளகாய் (உருட்டு) - 70 அவரைக்காய் - 65, 60 தேங்காய் - 58 ஆப்பிள் - 260, 180, 140 ஆரஞ்சு - 160 மாதுளை - 220, 160 சாத்துக்குடி - 80 உருளைக்கிழங்கு - 55, 34 கருணைக்கிழங்கு - 50 சேப்பங்கிழங்கு - 35 கருவேப்பிலை - 58 கொத்தமல்லி - 35 புதினா - 64 சின்ன வெங்காயம் - 85, 80, 75 பெரிய வெங்காயம் - 65, 60, 50 இஞ்சி - 160, 75 வெள்ளை பூண்டு - 240, 200, 180, 160, 140, 100 வாழை இலை - 60 வாழைப்பூ - 10 வாழைத்தண்டு - 15 வாழைப்பழம் - 70, 60 பீட்ரூட் - 33 நூல்கோல் - 40 முள்ளங்கி - 25 முருங்கை பீன்ஸ் - 100 பட்டர் பீன்ஸ் - 160 சோயா பீன்ஸ் - 110 செலக்ஷன் பீன்ஸ் - 100 முட்டைக்கோஸ் - 28 கேரட் - 48 டர்னிப் - 120 சௌசௌ - 30 காலி பிளவர் - 40, 35 பச்சை பட்டாணி - 170, 150 சேம்பு - 50 எலுமிச்சை - 200, 180 பப்பாளி - 35, 30, 25 முலாம்பழம் - 60 மொச்சை - 54 மக்காச்சோளக்கதிர் - 50 அரைக்கீரை - 25 பொன்னாங்கண்ணிக்கீரை - 20 கோவக்காய் - 35 குடைமிளகாய் - 46 மிளகுதக்காளி கீரை - 25 வாழைப்பழம் (பச்சை) - 50 வாழைப்பழம் (பூவன்) - 40 வாழைப்பழம் (நேந்திரன்) - 50 வாழைக்காய் - 30, 36
- இந்து எழுச்சி முன்னணி 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தேனியில் விமர்சியாக நடந்தது தேனியில் செயல்பட்டு வரும் இந்து எழுச்சி முன்னணி அமைப்பு சார்பில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது இந்த ஊர்வலத்திற்கு நிறுவனத் தலைவர் பொன் ரவி வழிகாட்டிட மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் செண்டா மேளம் முழங்க அரிசி கொம்பன் யானை முன் நின்று வழிநடத்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்தும், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்த அரண்மனை புதூர் முல்லை ஆற்றில் கரைக்க இந்த ஊர்வலமானது அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவிலில் தொடங்கி பெரியகுளம் சாலை நேரு சிலை மதுரை சாலை வழியாக அரண்மனை புதூர் முல்லை ஆற்று பாலம் வந்தடைந்து அங்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் முல்லை ஆற்றில் கரைக்கப்பட்டது இந்த ஊர்வலத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலெக்ஸாண்டர் ஜெரால்டு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்1
- தேனி மாவட்டம் போடியில் விமரிசையாக நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளால் அமைதியாக நடந்த ஆன்மீகப் பெருவிழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, நகர் மற்றும் கிராமப்புறங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளின் ஊர்வலம் வெகு சிறப்பாகவும் ஆன்மீக உணர்வுடனும் நடைபெற்றது. கேரளா செண்டை மேளம், கைலாய வாத்தியம், பேண்ட் செட்டுகள் முழங்க, முளைப்பாரி மற்றும் கரகாட்டத்துடன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. போடி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேட்டவராயன் கோவில் கொட்டகுடி ஆற்றைச் சென்றடைந்து, அங்கு சிலைகள் முறைப்படி கரைக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஊர்வலத்தின் போது ஒலிபெருக்கிகளில் ஆபாசப் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டி, இந்த ஆண்டு காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். வாகனங்களில் ஒலிபெருக்கிகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்டிருந்த 11 அடி விநாயகர் சிலை வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கூம்பு வடிவ ஒலிபெருக்கியைக் காவல்துறையினர் உடனடியாக அகற்றக் கோரினர். காவல்துறையின் இந்த நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் காரணமாக, முந்தைய ஆண்டை விடக் குறைவான வாகனங்களே பங்கேற்ற போதிலும், எவ்வித அசம்பாவிதமும் இன்றி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மிகவும் அமைதியாகவும் பக்திப் பெருக்குடனும் நிறைவுற்றது.1
- தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம் வராக நதியில் சிலைகள் கரைப்பு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் 37-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காமாட்சிபுரம், எ.புதுப்பட்டி, தாமரைக்குளம், தெ.கள்ளிப்பட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆனைத் தொடர்ந்து இன்று மாலை வேளையில் அனைத்துச் சிலைகளும் பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டன. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் சுருள் கத்தி, வால் சுற்றுதல், உள்ளிட்ட விளையாட்டுக்களுடன் அரண்மனைத் தெரு, வி.ஆர்.பி தெரு, தென்கரை சுதந்திர வீதி மற்றும் அக்ரகாரம் வழியாக முக்கிய வீதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் சென்றது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் முடிவில், அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோவில் அருகே உள்ள வராக நதி ஆற்றில் சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாகக் கரைக்கப்பட்டன. அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெறுவதற்காக, பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் நல்லு தலைமையில், 18 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 650 -க்கும் மேற்பட்ட காவலர்கள் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் செப்.20- ல் திருக்கல்யாணம், 23-ம் தேதி செப்பு தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள வட பத்திர சன்னதியில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் செப்டம்பர் 20-ம் தேதி திருக்கல்யாணமும், 23-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) அவதார உற்சவமான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஶ்ரீதேவி பூதேவி சமேதராக பெரிய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதன்பின் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தினசரி காலை மண்டபங்களில் எழுந்தருளும் ஸ்ரீதேவி ஸ்ரீதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும், மாலை வீதி உலாவும் நடைபெறுகிறது. பிரமோற்சவ விழாவில் செப்டம்பர் 19-ம் தேதி தங்க கருட சேவையும், 20-ம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரியபெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது. பெரிய பெருமாள் அவதரித்த பெரிய திருவோண நட்சத்திரத்தில் செப்டம்பர் 23- ம் தேதி காலை 7 மணிக்கு செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது.இதில் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி, நகராட்சி ஆணையாளர் குமார்,வட்டாட்சியர் அறிவானந்தம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.1
- விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு) திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள சேம்பிலியூத்து என்ற மலை கிராமத்தில் உள்ள எஸ்டேட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை. (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)1
- ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு பெரியாஞ் செட்டி பட்டியில் கண் திருஸ்டி கணபதியை இளைஞர் அணி சார்பாக வழிபாடு செய்தனர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு, பெரியாஞ்செட்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்திருஷ்டி கணபதியை சிறப்பு வழிபாடு செய்தனர். இக்கண்திருஸ்டி கணபதி இராஜகணபதியாய் சிம்மாசனத்தில் அமர்ந்து கம்பீரமாய் கண்திருஷ்டி களை நீக்குவதை தம் பணியாய் வைத்திருப்பது போல் சிலை அமைந்திருந்தது. இன்று கணபதிக்கு சிறப்புபூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து கண்திருஷ்டி கணபதியை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு விழா கமிட்டியாரின் சார்பாக கொழுக்கட்டை, சுண்டல், தக்காளி சாதம், அவல் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பி.கண்ணன் ,நா.மதன்குமார், ப.முருகானந்தம் ,விஷ்ணு,சரவணன்,தமிழரசன்,அருண்குமார்,பிரவீன்,ஆ.இ.ஹரிகிருஷ்ணன், ஆ.ஹரிகிருஸ்ணன் தலைமையிலான விழாக்கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.2
- ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசயனர் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிட பெண்ணாக அவதரித்து பாமாலை பாடி பின் பூமாலை சுற்றி ஸ்ரீரங்கநாதரை அடைந்தார் என்பது ஐதீகம்.ஆண்டாள் தினமும் தான் சூடி கலைந்த மாலையை ஸ்ரீரங்கநாதரின் அம்சமான ஸ்ரீ வடபத்ரசயனருக்குத்தான் சாற்றி வந்துள்ளார். இந்த வடபத்ர சயனருக்கான புரட்டாசி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று துவங்கும் உற்சவம் 12 நாட்கள் நடைபெறும்.ஐந்தாம் திருநாள் தங்க கருட சேவையும், ஒன்பதாம் திருநாள்(23.09.26) செப்பு திருத்தேரோட்டமும் நடைபெற உள்ள நிலையில் தினந்தோறும் பூதேவி ஸ்ரீதேவி சமேத வடபத்ரசயனர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.1
- பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பெரியகுளம் MLA தொடங்கி வைத்தார் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது வராக நதியில் கரைப்பதற்கு போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது இதனைத் தொடர்ந்து பெரியகுளம் நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தநூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகளை ஊர்வலமாக எடுத்து வந்து வராக நதியில் கரைக்கப்பட்டது முன்னதாக இந்த ஊர்வலத்தை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் தொடங்கி வைத்தார் நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் உள்ளிட்ட இந்து முன்னணி மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்1