logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நார்த்தாமலையில் சிறப்பு கிராமசபை கூட்டம் அன்னவாசல் ஒன்றியம் நார்த்தாமலை ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு  வட்டார வளர்ச்சி அலுவலர்  ராதா தலைமை தாங்கினார் கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் 2025-26 திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது கிராம ஊராட்சி அளவிலான குழு தேர்வு செய்து பயனாளிகளை கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டது இதில் ஊராட்சி செயலாளர் வடிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

9 hrs ago
user_Batcha
Batcha
செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
9 hrs ago
a007f9e2-3587-42cb-a63c-073033225741

நார்த்தாமலையில் சிறப்பு கிராமசபை கூட்டம் அன்னவாசல் ஒன்றியம் நார்த்தாமலை ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு  வட்டார வளர்ச்சி அலுவலர்  ராதா தலைமை தாங்கினார் கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் 2025-26 திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது கிராம ஊராட்சி அளவிலான குழு தேர்வு செய்து பயனாளிகளை கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டது இதில் ஊராட்சி செயலாளர் வடிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ரெட்டமலைப்பட்டி அருகே கிரஷர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கால்நடைகளை மட்டுமே மக்கள் நம்பி வாழ்ந்து வரும் நிலையில் கிரஷருக்கு அனுமதி கொடுத்தால் அந்த பகுதி மக்களின் நிலை மிக மோசமாகி விடும். ஆகவே அரசு கிரஷருக்கு அனுமதி கொடுக்ககூடாது என்று கூறி மணப்பாறை - ரெட்டியபட்டி சாலையில் குளத்துராம்பட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் மற்றும் மணப்பாறை வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களின் கருத்தை பெற்று தான் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை என்று பேச்சுவார்த்தையில் தெரிவித்ததை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர்.
    1
    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ரெட்டமலைப்பட்டி அருகே கிரஷர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கால்நடைகளை மட்டுமே மக்கள் நம்பி வாழ்ந்து வரும் நிலையில் கிரஷருக்கு அனுமதி கொடுத்தால் அந்த பகுதி மக்களின் நிலை மிக மோசமாகி விடும். ஆகவே அரசு கிரஷருக்கு அனுமதி கொடுக்ககூடாது என்று கூறி மணப்பாறை - ரெட்டியபட்டி சாலையில் குளத்துராம்பட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் மற்றும் மணப்பாறை வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களின் கருத்தை பெற்று தான் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை என்று பேச்சுவார்த்தையில் தெரிவித்ததை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • மணப்பாறை குடோனிலிருந்து வெளியேறும் வண்டுகளால், தூக்கத்தை தொலைத்த மக்கள். மணப்பாறையில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் குடோனில் இருந்து வெளியேறும் வண்டுகளால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பூமாலை பட்டி பகுதியில் ஒழுங்குமுறை கூடத்தின் குடோன் உள்ளது. இங்கு அரிசி, உள்ளிட்ட உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. குடோனில் உணவு தானியங்களுக்கு வண்டுகள் மற்றும் பூச்சிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மருந்து தெளித்து பராமரிப்பது வழக்கம். இந்த வழக்கத்தை கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்க மறந்துவிட்டதால் வண்டுகள், பூச்சிகள் அதிகமாக உருவாகி குடோனில் இருக்கும் உணவு தானியங்களை நாசம் செய்வதோடு, அருகில் வசிக்கும் மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன. குறிப்பாக மாலை 5 மணியிலிருந்து குடோனில் இருந்து அதிகளவில் வண்டுகள் வெளியேறி, வீடுகளுக்குள் புகுந்து மக்களின் நிம்மதியை கெடுத்து வருகின்றன. குடோனுக்கு அருகே உள்ள பூமாலைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் வண்டுகளால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர். இது குறித்து பகுதிவாசிகள் கூறும்போது,வீடுகளில் வைத்துள்ள குடிநீர், உணவு பொருட்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட இடங்களில் வண்டுகள் வந்து விழுகின்றன. எங்களை கடித்தும் துன்புறுத்துகின்றன. இரவு நேரங்களில் தூங்க முடியாமல் தவிக்கிறோம். இருசக்கர வாகனங்களில் செல்வோரின் கண்களில் வண்டுகள் விழுந்து கண்களுக்கு கேடு விளைவிப்பதோடு, விபத்துகள் ஏற்படவும் காரணமாகின்றன. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் குடோனில் வண்டுகள் உருவாகாமல் இருக்க முறையான வழிமுறைகளை கையாள வேண்டும். மாவட்ட நிர்வாகம் தான் எங்களை காக்க வேண்டும்” என்று பகுதிவாசிகள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    மணப்பாறை குடோனிலிருந்து வெளியேறும் வண்டுகளால், தூக்கத்தை தொலைத்த மக்கள்.
மணப்பாறையில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் குடோனில் இருந்து வெளியேறும் வண்டுகளால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
திருச்சி மாவட்டம் மணப்பாறை பூமாலை பட்டி பகுதியில் ஒழுங்குமுறை கூடத்தின் குடோன் உள்ளது. இங்கு அரிசி,  உள்ளிட்ட உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. குடோனில் உணவு தானியங்களுக்கு வண்டுகள் மற்றும் பூச்சிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மருந்து தெளித்து பராமரிப்பது வழக்கம். இந்த வழக்கத்தை கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்க மறந்துவிட்டதால் வண்டுகள், பூச்சிகள் அதிகமாக உருவாகி குடோனில் இருக்கும் உணவு தானியங்களை நாசம் செய்வதோடு, அருகில் வசிக்கும் மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன.
குறிப்பாக மாலை 5 மணியிலிருந்து குடோனில் இருந்து அதிகளவில் வண்டுகள் வெளியேறி, வீடுகளுக்குள் புகுந்து மக்களின் நிம்மதியை கெடுத்து வருகின்றன. குடோனுக்கு அருகே உள்ள பூமாலைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் வண்டுகளால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இது குறித்து பகுதிவாசிகள் கூறும்போது,வீடுகளில் வைத்துள்ள குடிநீர், உணவு பொருட்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட இடங்களில் வண்டுகள் வந்து விழுகின்றன. எங்களை கடித்தும் துன்புறுத்துகின்றன.
இரவு நேரங்களில் தூங்க முடியாமல் தவிக்கிறோம். இருசக்கர வாகனங்களில் செல்வோரின் கண்களில் வண்டுகள் விழுந்து கண்களுக்கு கேடு விளைவிப்பதோடு, விபத்துகள் ஏற்படவும் காரணமாகின்றன. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் குடோனில் வண்டுகள் உருவாகாமல் இருக்க முறையான வழிமுறைகளை கையாள வேண்டும். மாவட்ட நிர்வாகம் தான் எங்களை காக்க வேண்டும்” என்று பகுதிவாசிகள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    பத்திரிகையாளர் மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • இடையாத்தூர் கிராமம் ஜல்லிக்கட்டு விழா
    2
    இடையாத்தூர் கிராமம்  ஜல்லிக்கட்டு விழா
    user_Ponnalagu Vijay Tvk
    Ponnalagu Vijay Tvk
    Voice of people பொன்னமராவதி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    8 hrs ago
  • *குளித்தலை அருகே மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி கோவில் சிவராத்திரி விழா முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்* கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி கோவில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு மூன்றாம் நாள் நிகிழ்ச்சியான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தேரோடும் நான்கு முக்கிய வீதி வழியாக சென்று தேர் நிலைக்கு வந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் வாழைப்பழம் கொண்டு அபிஷேகம் செய்து அம்பாளை தரிசனம் செய்தனர். விழாவில் கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    1
    *குளித்தலை அருகே மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி கோவில் சிவராத்திரி விழா முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்*
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி கோவில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு மூன்றாம் நாள் நிகிழ்ச்சியான 
தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தேரோடும் நான்கு முக்கிய வீதி வழியாக சென்று தேர் நிலைக்கு வந்தது. 
வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் வாழைப்பழம் கொண்டு அபிஷேகம் செய்து அம்பாளை தரிசனம் செய்தனர். விழாவில் கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    5 hrs ago
  • *புதுக்கோட்டை மாவட்டம் துவார் அருகே கெண்டையன்பட்டி ஸ்ரீ.வீரமாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கும்மியடித்து குலவையிட்டு முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று வருகின்றனர்* புதுக்கோட்டை மாவட்டம் துவார் அருகே கெண்டையன்பட்டியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ.வீரமாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா 18 வருடங்களுக்கு பிறகு வருகின்ற வெள்ளிக்கிழமை வெகு விமர்ச்சையாக நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கெண்டையன்பட்டி விநாயகர் கோயிலில் கெண்டையன்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து முளைப்பாரியை வைத்து கும்மியடித்து குலவையிட்டு மேள தாள வாக்கியங்கள் முழங்க குதிரை நடனமிட கங்கை காவிரி உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை குடங்களில் நிரப்பி சிவாச்சாரியார்கள் தலையில் சுமத்தும், பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்தவாறும் வீரம்மா காளியம்மன் கோயிலை நோக்கி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கரைக்காரர்கள் கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
    1
    *புதுக்கோட்டை மாவட்டம் துவார் அருகே கெண்டையன்பட்டி  ஸ்ரீ.வீரமாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கும்மியடித்து குலவையிட்டு முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று வருகின்றனர்*
புதுக்கோட்டை மாவட்டம் துவார் அருகே கெண்டையன்பட்டியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ.வீரமாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா 18 வருடங்களுக்கு பிறகு வருகின்ற வெள்ளிக்கிழமை வெகு விமர்ச்சையாக நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கெண்டையன்பட்டி விநாயகர் கோயிலில் கெண்டையன்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து முளைப்பாரியை வைத்து கும்மியடித்து குலவையிட்டு மேள தாள வாக்கியங்கள் முழங்க குதிரை நடனமிட கங்கை காவிரி உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை குடங்களில் நிரப்பி சிவாச்சாரியார்கள் தலையில் சுமத்தும்,  பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்தவாறும் வீரம்மா காளியம்மன் கோயிலை நோக்கி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கரைக்காரர்கள் கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டான அருகில் தனியார் பேருந்தும்,காரும் மோதி விபத்து
    1
    திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டான அருகில் தனியார் பேருந்தும்,காரும் மோதி விபத்து
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது சுமார் 4 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். மேலும் இவ்விழாவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு, கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில்  கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது 
சுமார் 4 கோடியே 45 லட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு 
நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு   பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
நிலக்கோட்டை அரசு மகளிர்  கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ  தலைமை வகித்தார்.
மேலும் இவ்விழாவில்  பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான  சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு,
கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
    user_Abbas Abbas
    Abbas Abbas
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில் தனியார் இடத்தில் சிலர் வேட்டையாடியதாக கூறப்படும் நிலையில் வீட்டில் இருந்த 3 பேரை வனத்துறையினர் பிடித்து வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது. இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட வனத்துறை வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மணப்பாறை – துவரங்குறிச்சி சாலையில் பன்னாங்கொம்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் காவியா மற்றும் வனத்துறையினர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வனத்துறையினர் பிடித்த 3 பேரையும் விடுவித்த நிலையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போலீசார் வனத்துறை வாகனத்தை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் 3 மணி நேரம் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.
    1
    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில் தனியார் இடத்தில் சிலர் வேட்டையாடியதாக கூறப்படும் நிலையில் வீட்டில் இருந்த 3 பேரை வனத்துறையினர் பிடித்து வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது. இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட வனத்துறை வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மணப்பாறை – துவரங்குறிச்சி சாலையில் பன்னாங்கொம்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் காவியா மற்றும் வனத்துறையினர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வனத்துறையினர் பிடித்த 3 பேரையும் விடுவித்த நிலையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போலீசார் வனத்துறை வாகனத்தை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் 3 மணி நேரம் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.