விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், இன்று (20.06.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப அவர்களின் தலைமையில், 329 தூய்மை காவலர்களுக்கு ₹6.22 இலட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், தான் மக்களின் வீட்டுப் பிள்ளை என்றும், மக்களின் ஆதரவாலேயே இந்த நிலையை அடைந்துள்ளதாகவும், எனவே மக்களுக்காகப் பணியாற்றுவது தனது கடமை என்றும் தெரிவித்தார். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தனது அரசு தனிக்கவனம் செலுத்தும் என அறிவித்துள்ளதாகவும், நியாயமான, நேர்மையான, ஊழலற்ற அரசாங்கத்தை உருவாக்கி, மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதாகவும் அமைச்சர் எடுத்துரைத்தார். இதன் அடிப்படையில், தூய்மை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் மேம்பாட்டிற்காக, தூய்மை காவலர் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் மூலம் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டினார். இத்திட்டங்களில், பொருளாதார மற்றும் தொழில் மேம்பாட்டிற்கான கடனுதவிகள், பணியாளர்களின் குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ₹10 இலட்சம் வரையிலான விபத்துக் காப்பீட்டுத் திட்டம், ₹20 ஆயிரம் இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, கண் கண்ணாடி உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகியவை அடங்கும். மேலும், தூய்மை காவலர்கள் தொழில்முனைவோராக முன்னேற 35% மானியத்துடன் ஆட்டோ, கார், பல் மருத்துவ கிளினிக், பல்பொருள் அங்காடி, உணவகம் போன்றவற்றை அமைக்கவும், ஆடு, மாடு வளர்ப்புக்கு ₹6 இலட்சம் வரையிலான மானிய உதவியும், நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின் கீழ் ₹5 இலட்சம் அல்லது 50% மானியத்தில் நிலம் வாங்குவதற்கான கடனுதவியும் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இராஜபாளையம் நகராட்சியில் மொத்தம் 345 தூய்மை காவலர்கள் (80 நிரந்தர மற்றும் 265 ஒப்பந்த) பணிபுரிவதாகவும், இதுவரை 419 தூய்மை காவலர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தூய்மை காவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் சிறப்பாகப் பணியாற்றுவதற்காக இன்று சீருடை, காலணி, மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதாகவும், பணியின் போது அவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, நகராட்சி மற்றும் உள்ளாட்சிப் பகுதிகளில் பணிபுரியும் பணியாளர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக இராஜபாளையம் நகராட்சிப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். முதலமைச்சர் தலைமையில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில், ஆணையாளர் திரு.சே.நாகராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அமர்நாத், நகர் நல அலுவலர் மரு.ராஜ்குமார் மற்றும் தூய்மை காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், இன்று (20.06.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப அவர்களின் தலைமையில், 329 தூய்மை காவலர்களுக்கு ₹6.22 இலட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், தான் மக்களின் வீட்டுப் பிள்ளை என்றும், மக்களின் ஆதரவாலேயே இந்த நிலையை அடைந்துள்ளதாகவும், எனவே மக்களுக்காகப் பணியாற்றுவது தனது கடமை என்றும் தெரிவித்தார். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தனது அரசு தனிக்கவனம் செலுத்தும் என அறிவித்துள்ளதாகவும், நியாயமான, நேர்மையான, ஊழலற்ற அரசாங்கத்தை உருவாக்கி, மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும்
வகையில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதாகவும் அமைச்சர் எடுத்துரைத்தார். இதன் அடிப்படையில், தூய்மை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் மேம்பாட்டிற்காக, தூய்மை காவலர் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் மூலம் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டினார். இத்திட்டங்களில், பொருளாதார மற்றும் தொழில் மேம்பாட்டிற்கான கடனுதவிகள், பணியாளர்களின் குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ₹10 இலட்சம் வரையிலான விபத்துக் காப்பீட்டுத் திட்டம், ₹20 ஆயிரம் இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, கண் கண்ணாடி உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகியவை அடங்கும். மேலும், தூய்மை காவலர்கள் தொழில்முனைவோராக முன்னேற 35% மானியத்துடன் ஆட்டோ, கார், பல்
மருத்துவ கிளினிக், பல்பொருள் அங்காடி, உணவகம் போன்றவற்றை அமைக்கவும், ஆடு, மாடு வளர்ப்புக்கு ₹6 இலட்சம் வரையிலான மானிய உதவியும், நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின் கீழ் ₹5 இலட்சம் அல்லது 50% மானியத்தில் நிலம் வாங்குவதற்கான கடனுதவியும் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இராஜபாளையம் நகராட்சியில் மொத்தம் 345 தூய்மை காவலர்கள் (80 நிரந்தர மற்றும் 265 ஒப்பந்த) பணிபுரிவதாகவும், இதுவரை 419 தூய்மை காவலர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தூய்மை காவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் சிறப்பாகப் பணியாற்றுவதற்காக இன்று சீருடை, காலணி, மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதாகவும், பணியின் போது அவற்றை நல்ல முறையில்
பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, நகராட்சி மற்றும் உள்ளாட்சிப் பகுதிகளில் பணிபுரியும் பணியாளர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக இராஜபாளையம் நகராட்சிப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். முதலமைச்சர் தலைமையில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில், ஆணையாளர் திரு.சே.நாகராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அமர்நாத், நகர் நல அலுவலர் மரு.ராஜ்குமார் மற்றும் தூய்மை காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று (ஜூன் 19) இரவு மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு தங்கத்தேர் வழிபாடு நடைபெற்றது. தவெக நிர்வாகிகள் சசி முருகன் மற்றும் ரேஷன் கடை கார்த்திக் ஆகியோரின் ஏற்பாட்டில் நடந்த இந்த வழிபாட்டில், ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு தங்கத் தேரினை இழுத்து முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.1
- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பெரியார் நகர் சிறுவர் பூங்காவில், ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு தினத்தையொட்டியும், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும், மரம் நடு விழா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சாத்தூர் நகர் தலைவர் குருசாமி, நகராட்சி ஆணையாளர் ஜெகதீஸ்வரி, தொண்டு நிறுவன அமைப்பினர், சிலம்பம் கலைக்கூட ஆசான் மற்றும் மாணவ மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தொண்டு நிறுவன அமைப்பினர், பொதுமக்கள் ஆர்வத்துடன் விலங்குகளை வளர்ப்போம் என்ற எண்ணத்தில் மாடுகளை சாலைகளில் துரத்திவிடுவது பெரும் ஆபத்தை விளைவிப்பதாகக் குறிப்பிட்டனர். இதேபோன்று, நாய்களை விருப்பப்பட்டு வளர்த்து, பின்பு பராமரிக்க முடியாமல் தெருக்களில் விட்டுவிடுவதால் பல்வேறு இடர்பாடுகளும் பொதுமக்களுக்கு ஆபத்தும் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினர். இதனால் பொதுமக்கள் முறைப்படி நாய்களை வளர்க்க லைசன்ஸ் பெற்று வளர்க்க வேண்டும் என்றும், ஆர்வத்துடன் நாய்களை வளர்த்து தெருவில் விட்டுவிடுவதால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, நாகர்கோவில் சேர்மன், ஆணையாளர், தொண்டு நிறுவன அமைப்பினர் மற்றும் மாணவர்கள் அனைவரும் அப்பகுதியில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், பிளாஸ்டிக்கால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்து, பிளாஸ்டிக் ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர். இறுதியாக, சிலம்பக் கலைக்கூட மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையான சிலம்பக் கலைகளைச் சுழற்றி வெளிப்படுத்தினர்.1
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் விமானப் பயிற்சி மையத்தின் (Flying Training Organization - FTO) கட்டுமானப் பணிகளைக் கண்காணிப்பதற்கான முக்கிய நடவடிக்கையை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (TIDCO) மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிறுவனமான TIDCO, இந்தப் பணிகளை மேற்பார்வையிட ஒரு சுயாதீன பொறியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான மின்னணு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, கட்டுமானப் பணிகளின் தரம், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் திட்ட முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்து ஆலோசனை வழங்கும் தகுதியான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள நிறுவனங்கள் டெண்டர் ஆவணங்களை TIDCO மற்றும் தமிழ்நாடு அரசின் மின்னணு டெண்டர் இணையதளங்களிலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒப்பந்தப் புள்ளிகள் மற்றும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற ஜூலை 15ஆம் தேதி மதியம் 3 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விமானப் பயிற்சி மையம் கோவில்பட்டி வட்டம் கயத்தாறு பகுதியில் அமைய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் உயர்தரத்துடன் பணிகள் நிறைவேறுவதை உறுதி செய்வதே இந்த டெண்டரின் முக்கிய நோக்கம் என்று TIDCO தெரிவித்துள்ளது. கோவில்பட்டியில் உருவாகி வரும் இந்த விமானப் பயிற்சி மையம் செயல்பாட்டுக்கு வந்தால், தமிழகத்தில் விமானப் பயிற்சி மற்றும் விமானத் துறை சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் வலுப்பெறும் எனக் கருதப்படுகிறது. மேலும், தென் தமிழக இளைஞர்களுக்கு விமானப் பயிற்சி பெறும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்பதுடன், அப்பகுதியின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் இது ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.1
- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கிராமத்தில், தேனி - மதுரை நெடுஞ்சாலை ஓரம் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் தூய்மைப் பணியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) மேற்கொண்டது. நிலத்தடி நீரையும், இயற்கையையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த பணியில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். அவர் நவீன இயந்திரத்தைக் கொண்டும், ஜேசிபி வாகனத்தையும் நேர்த்தியாக இயக்கி புதர் மண்டிப் போயிருந்த கருவேல மரங்களை வேரோடு அகற்றினார். வைகோவின் இந்த சுறுசுறுப்பான செயல்பாட்டைக் கண்டு அங்கிருந்த கட்சியினரும், பொதுமக்களும் உற்சாகமடைந்தனர். மதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலர் இந்தப் பணியில் திரளாகக் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, தமிழக சட்டசபையில் எந்தத் தீர்மானம் போட்டாலும், அதற்கு முட்டுக்கட்டை போட்டு தமிழகத்துக்குக் கேடு விளைவிப்பதே மத்திய அரசுதான் என்று குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கு காவிரி மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வரக்கூடாது என்பதுடன், மேகதாது அணையை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து கடந்த 2012ஆம் ஆண்டிலேயே முதன்முதலில் போராட்டம் நடத்தியது மதிமுகதான் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் ஒரு நல்ல தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஒருசேர இணைந்து, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கொண்டு வந்திருப்பதாக வைகோ தெரிவித்தார். ஆனால், கர்நாடக அரசு மட்டும் தனித்து இதைச் செய்யவில்லை என்றும், இதற்கு முழுக்க முழுக்கப் பின்புலமாக இருந்து இயக்குவது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய சர்க்கார்தான் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், கடந்த 2014 டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடந்த ஒரு ரகசியக் கூட்டத்தில், கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாகவும், அப்போது 'நீங்கள் மேகதாது அணையை கட்டுங்கள், நாங்கள் தடுக்க மாட்டோம், நீங்கள் கட்டிக்கொண்டே இருங்கள்' என்று மத்திய சர்க்கார் பச்சைக்கொடி காட்டியதாகவும் வைகோ கூறினார். இந்தச் சதித்திட்டத்தை 'தி இந்து' ஆங்கில நாளிதழ்தான் வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தியது என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.2
- சிங்கம்புணரி அருகே முறையூரில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலின் ஆனி திருமஞ்சன பெருவிழா இன்று (ஜூன் 20) கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. இந்த விழாவின் தொடக்கமாக, ரிஷப கொடியுடன் ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகள் விமர்சையாக நடைபெற்றன. சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, ஜூன் 27 அன்று திருக்கல்யாணம் மற்றும் ஜூன் 28 அன்று திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.1
- தேனி மாவட்டத்தில் ஒரு புதிய தகவல் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.1
- திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், சித்தையன் கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரத்தில் ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் மற்றும் திமுக முன்னாள் அமைச்சரும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமாகிய ஐ. பெரியசாமி ஆகியோர் இந்த நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் போதும் பொண்ணு முரளி, வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு மற்றும் அலுவலக பணியாளர்கள், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள், அரசு ஒப்பந்ததாரர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.1
- தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகேயுள்ள ராசா பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பாலாஜி பட்டாசு ஆலையில் இன்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்தவர்கள் பட்டாசு ஆலைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். சாத்தூர் அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட சுமார் 15க்கும் மேற்பட்டோருக்கு முதலுதவி மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் நத்தத்துப்பட்டி, மாசார்பட்டி, எம். நாகலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்; இவர்களில் அதிகமான பெண்கள் அடங்குவர். இந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.1