Shuru
Apke Nagar Ki App…
நத்தம் மாரியம்மன் கோவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு விழா திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியின் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
RAJA news
நத்தம் மாரியம்மன் கோவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு விழா திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியின் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உணவு மற்றும் உணவு வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சிலிண்டரை பற்றி மத்திய அரசு மோடி அரசை கேளுங்கள் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று பேட்டி அளித்தார்.1
- திண்டுக்கல் மாநகராட்சி நாகல்புதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி (குட்டவாத்தியார் பள்ளி ) 1926 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டு அன்று முதல் இன்று வரை சுமார் நூறு ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பான கல்வி முறையை பயிற்றுவித்து வருகிறது. இந்நிலையில் இப்பள்ளியின் நூற்றாண்டு திருவிழா திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா மாநகராட்சி ஆணையர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் விஜயா முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக 30வது வார்டு மாமன்ற உறுப்பினர் N.A.லட்சுமி மற்றும் 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் உமாதேவி பாரதி முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்த நூற்றாண்டு திருவிழாவில் மாநகராட்சி பள்ளியின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் S.M.C உறுப்பினர்கள் முன்னாள் மாணவர்கள் தற்போதைய மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். இத்திருவிழாவின் இறுதி நிகழ்வாக பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளுக்கான ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது பள்ளியின் நீண்டகால வரலாற்றையும் அதன் கல்வி பங்களிப்பையும் நினைவு கூர்ந்தது.1
- வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சியில் தைலா கவுண்டனூர் சீதப்பட்டி பூதிபுரம் குரும்பபட்டி மகாலட்சுமிபுரம் இந்தப் பகுதிகளில் நிறைய தெரு விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் நடமாட அச்சமடைந்து வந்தனர் இதை மாற்றிக் கொடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர் அதன் அடிப்படையில் இன்று அனைத்து தெருவிளக்குகளையும் மாற்றி கொடுத்தனர் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- வருகின்ற சட்டமன்ற தேர்தலை (2026) முன்னிட்டு தேனி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை இராணுவப் படையினர் பயன்படுத்தப்பட உள்ளனர். தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு துணை ராணுவத்தினர் ஒன்றிணைந்து தேர்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதன் மூலம் தேனி பகுதியில் தேர்தல் நேரங்களில் வன்முறைகள் மற்றும் சட்டவிரோத செய்திகளை தடுக்கும் நோக்கத்துடன் காவல்துறையின் மற்றும் துணை ராணுவத்தினர் இணைந்து பணியாற்றும் உள்ளதாகவும் அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தேனி அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவிலில் இருந்து கான்வென்ட் நேரு சிலை பங்களா மேடு வரை கோடி அணிவகுப்பு நடைபெற்றது இதில் காவல்துறை உயரதிகாரிகள் காவல்துறையினர் மத்திய பாதுகாப்பு துணை ராணுவத்தினர் உள்ளிட்டோர் கோடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்1
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்1
- தேனியில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சியில் மாதந்திர கூட்டம் நடைபெற்றது,நகராட்சி சேர்மன் ரேணுப்பிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த நிகழ்வில் துணை சேர்மன், வார்டு கவுன்சிலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்1
- திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் , '94987 94987' என்ற TNEB Customer Care எண்ணை தொடர்பு கொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!1
- Post by RAJA news1