Shuru
Apke Nagar Ki App…
திருப்பூரில் ஏஐடியுசி தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம் - தீர்மானம் நிறைவேற்றம் திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் பனியன் தொழிற்சங்கப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. புதிய ஒப்பந்தப்படி சம்பளம் கிடைக்காத தொழிலாளர்கள், சங்கத்தை அணுகித் தீர்வு பெறலாம் என முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இக்கூட்டத்தில் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
Vel
திருப்பூரில் ஏஐடியுசி தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம் - தீர்மானம் நிறைவேற்றம் திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் பனியன் தொழிற்சங்கப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. புதிய ஒப்பந்தப்படி சம்பளம் கிடைக்காத தொழிலாளர்கள், சங்கத்தை அணுகித் தீர்வு பெறலாம் என முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இக்கூட்டத்தில் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
More news from தமிழ்நாடு and nearby areas
- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. பின்பு ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற வேட்பாளர் விபின் சக்கரவர்த்தி வேட்புமனு தாக்கல் செய்தார். தனது அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி தொகுதியின் கள நிலவரங்களை கேட்டறிந்தார்1
- Post by அன்பரசு1
- நமது தேசிய கூட்டணியின் வால்பாறை சட்டமன்ற வெற்றி வேட்பாளர் D லக்ஷ்மண சிங் அவர்களுடன் சேத்துமடை,அண்ணாநகர்,கோழிப்பண்ணை தேவிபட்டினம்,வேட்டைக்காரன் புதூர் பகுதிகளில் பிரச்சாரம் நடத்தப்பட்டது! #BJP#ADMk#1
- சேலம் மாவட்டம் எடப்பாடியில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம். சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் பங்கேற்பு... சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அறிமுக கூட்டம் தவெக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது... இதில் தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எடப்பாடியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் அருண்குமாரை அறிமுகம் செய்து வைத்தார்.அப்போது தமிழன் ஆ. பார்த்திபன் மற்றும் வேட்பாளர் அருண்குமாருக்கு மேளதாளங்களுடன் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்... அதனைத் தொடர்ந்து வேட்பாளருக்கு வீரவேல் பரிசாக வழங்கப்பட்டு அதை வெற்றிவேலாக அனைத்து நிர்வாகிகளும் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது... இதில் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...1
- கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டியில் குடிநீர் பை உடைந்து போய்விட்டது பல மாதமாக குடிநீர் பைப்பை சரி பார்க்கவில்லை பலமுறை தகவல் கொடுத்தேன் சரி பார்க்கவில்லை6
- சேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள, தனியார் வணிக வளாகத்தில், தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது. இதில் வணிக வளாகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டால், அதனை எவ்வாறு அணைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும், மேலும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை, எவ்வாறு கையாள்வது என்பது குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி இன்று வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் வணிக வளாகத்தில் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் சேலம் தீயணைப்புத்துறை ஊழியர்கள் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டத்தில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்நிலையில் மதியம் சுமார் 12:30 மணிக்கு மேல் கனமழை பெய்து வருகிறது இந்த கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது கோடைகாலத்தில் கனமழை பெய்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்1
- வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் இன்று தனது பிரச்சாரத்தை துவஙகினார் இந்நிலையில் MGR அவர்கள் தனது தந்தை V.P.பாலசுப்பிரமணியத்திற்கு கொடுத்த அம்பாசிட்டர் காரில் சென்டிமெண்ட்டாக பிரச்சாரத்தில் வலம் வந்து வேடசந்தூர் தொகுதி முழுவதும் அதிமுக வேட்பாளர் V.P. B. பரமசிவம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்1