*தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் குறித்து – தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கம் & மாமதுரையர் அமைப்பு கருத்து* தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கம் & மாமதுரையர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் அறிவிப்பை வரவேற்கிறோம். தொழில்துறை வளர்ச்சி, சுற்றுலா மேம்பாடு மற்றும் விவசாய முன்னேற்றம் ஆகிய மூன்று துறைகளிலும் முன்னேற்ற நோக்கத்துடன் இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2030 இலக்கை முன்வைத்து தொழில்துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு நிதி ஆதரவு, திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களுக்கு ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் மாநிலத்தின் உற்பத்தித் திறனை உயர்த்தும். குறிப்பாக பாரம்பரிய உணவு தயாரிப்பு தொழில்கள், கிராம அடிப்படையிலான சிறு தொழில்கள் மற்றும் பெண்கள் தொழில் முனைவோருக்கு இது புதிய வாய்ப்புகளை உருவாக்கும். சுற்றுலா தள மேம்பாடு, பாரம்பரிய மற்றும் ஆன்மிக மையங்களின் பாதுகாப்பு, சாலை மற்றும் உள்கட்டமைப்பு வலுப்படுத்தல் ஆகியவை மாநில வருவாயை உயர்த்துவதோடு, உள்ளூர் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும். தென் மாவட்டங்களின் பண்பாட்டு செல்வத்தை உலகளவில் கொண்டு செல்லும் வாய்ப்பும் உருவாகும். விவசாய துறையில் பாசன வசதி மேம்பாடு, கால்வாய் சீரமைப்பு மற்றும் விவசாயிகளுக்கான ஆதரவு திட்டங்கள் உணவு உற்பத்தி நிலைத்தன்மையை உறுதி செய்ய உதவும். கிராம வளர்ச்சி மற்றும் விவசாய உற்பத்தி மேம்பாடு இணைந்து சென்றால் மாநிலத்தின் பொருளாதார அடித்தளம் மேலும் வலுப்படும். அதே நேரத்தில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்: அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் காலவரையறைக்குள் நடைமுறைப்படுத்தப்படுவது மிக அவசியம். அறிவிப்புகள் மட்டுமே இருந்து செயல்படுத்தலில் தாமதம் ஏற்பட்டால் தொழில்துறை வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக மின்சாரம், மூலப்பொருள் மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரித்தால் குறு, சிறு தொழில்களுக்கு சுமை அதிகரிக்கும். சுற்றுலா துறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உறுதி செய்யப்பட வேண்டும்; இல்லையெனில் நீண்டகால பாதிப்பு ஏற்படும். விவசாய துறையில் விலை நிலைத்தன்மை மற்றும் நீர் மேலாண்மை உறுதி செய்யப்படாவிட்டால் விவசாயிகளின் வருமான பாதுகாப்பு சவாலாக மாறும். மொத்தத்தில், தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் முன்னேற்றும் நோக்குடன் அமைந்த இந்த இடைக்கால பட்ஜெட்டை வரவேற்கிறோம். திட்டங்கள் விரைவாகவும் வெளிப்படையாகவும் செயல்படுத்தப்பட்டால் மாநிலம் 2030 இலக்கை நோக்கி வலுவாக முன்னேறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
*தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் குறித்து – தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கம் & மாமதுரையர் அமைப்பு கருத்து* தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கம் & மாமதுரையர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் அறிவிப்பை வரவேற்கிறோம். தொழில்துறை வளர்ச்சி, சுற்றுலா மேம்பாடு மற்றும் விவசாய முன்னேற்றம் ஆகிய மூன்று துறைகளிலும் முன்னேற்ற நோக்கத்துடன் இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2030 இலக்கை முன்வைத்து தொழில்துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு நிதி ஆதரவு, திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களுக்கு ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் மாநிலத்தின் உற்பத்தித் திறனை உயர்த்தும். குறிப்பாக பாரம்பரிய உணவு தயாரிப்பு தொழில்கள், கிராம அடிப்படையிலான சிறு தொழில்கள் மற்றும் பெண்கள் தொழில் முனைவோருக்கு இது புதிய வாய்ப்புகளை உருவாக்கும். சுற்றுலா தள மேம்பாடு, பாரம்பரிய மற்றும் ஆன்மிக மையங்களின் பாதுகாப்பு, சாலை மற்றும் உள்கட்டமைப்பு வலுப்படுத்தல் ஆகியவை மாநில வருவாயை உயர்த்துவதோடு, உள்ளூர் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும். தென் மாவட்டங்களின் பண்பாட்டு செல்வத்தை உலகளவில் கொண்டு செல்லும் வாய்ப்பும் உருவாகும். விவசாய துறையில் பாசன வசதி மேம்பாடு, கால்வாய் சீரமைப்பு மற்றும் விவசாயிகளுக்கான ஆதரவு திட்டங்கள் உணவு உற்பத்தி நிலைத்தன்மையை உறுதி செய்ய உதவும். கிராம வளர்ச்சி மற்றும் விவசாய உற்பத்தி மேம்பாடு இணைந்து சென்றால் மாநிலத்தின் பொருளாதார அடித்தளம் மேலும் வலுப்படும். அதே நேரத்தில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்: அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் காலவரையறைக்குள் நடைமுறைப்படுத்தப்படுவது மிக அவசியம். அறிவிப்புகள் மட்டுமே இருந்து செயல்படுத்தலில் தாமதம் ஏற்பட்டால் தொழில்துறை வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக மின்சாரம், மூலப்பொருள் மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரித்தால் குறு, சிறு தொழில்களுக்கு சுமை அதிகரிக்கும். சுற்றுலா துறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உறுதி செய்யப்பட வேண்டும்; இல்லையெனில் நீண்டகால பாதிப்பு ஏற்படும். விவசாய துறையில் விலை நிலைத்தன்மை மற்றும் நீர் மேலாண்மை உறுதி செய்யப்படாவிட்டால் விவசாயிகளின் வருமான பாதுகாப்பு சவாலாக மாறும். மொத்தத்தில், தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் முன்னேற்றும் நோக்குடன் அமைந்த இந்த இடைக்கால பட்ஜெட்டை வரவேற்கிறோம். திட்டங்கள் விரைவாகவும் வெளிப்படையாகவும் செயல்படுத்தப்பட்டால் மாநிலம் 2030 இலக்கை நோக்கி வலுவாக முன்னேறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காத்திருப்பு போராட்டம் மதுரை, பிப்.17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக் குயில்குடி பகுதிகளில் இடம்பெற்று வரும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அப்பகுதி இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தியும் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் பிப் - 17 செவ்வாய்க்கிழமை pமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலங்களை பாதுகாக்கவும், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்திறன் மேம்பாட்டிற்கான வசதிகளை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.3
- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் இன்று (பிப்.17) தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்யக்கூடாது, தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கக்கூடாது ,பெண் ஊழியர் என்பதால் பாரபட்சம் காட்டக்கூடாது, தற்காலிக செவிலியர்களை தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தக் கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.1
- முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்1
- சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் 14 வது நாளாக 22 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி 200க்கும் மேற்பட்ட பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கடந்த 3 தேதியிலிருந்து 14 வது நாளாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியான பணியாளர்களுக்கு அரசு பணியில் 50 சதவீத வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் தட்டுகளில் ஒலி எழுப்பி, ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அங்கன்வாடி பணியாளர் நாங்கள் கெளரவமாக வாழ்ந்து இருப்போமே? இந்த வேலையை வழங்கி தெருவில் பிச்சை எடுக்க விட்டீர்களே என்று கண்ணீர் விட்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.1
- தேனி மாவட்ட பாஜக அலுவலகத்தில்பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது . இதில் த வெ க தலைவர் விஜய் பற்றி கூறிய தகவல்2
- திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சங்காராட்டிகோட்டையில் கருப்பசாமி என்பவரின் பசுமாடு அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்த வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டு கருப்பசாமியிடம் ஒப்படைத்தனர் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் மாட்டிற்கு காயம் ஏற்பட்டது.1
- திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை ஊராட்சி விராலிப்பட்டியில். சக்தி கேந்திர அளவிலான. மக்கள் சந்திப்பு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் . நடைபெற்றது இதில் பாஜக என் ஜி ஓ பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் உரையாற்றினார்1
- திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அதிகாலை நேரத்தில் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிகாலை நேரம் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது1