Shuru
Apke Nagar Ki App…
தேனி மாவட்டம் சின்னமனூர் நகர் உழவர் சந்தையில் ஜூலை 12ஆம் தேதிக்கான காய்கறிகளின் விலை விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அங்கு கத்தரி கிலோ ரூ.54, தக்காளி ரூ.20/18, வெண்டை ரூ.36, அவரை ரூ.65, கொத்தவரை ரூ.36, சுரை ரூ.22/15, புடலை ரூ.36, பாகல் ரூ.54, பூசணி ரூ.18/14, மிளகாய் ரூ.50 மற்றும் இஞ்சி ரூ.200 ஆகிய விலைகளில் விற்கப்படுகின்றன. மேலும் சேனை ரூ.40, கருணை ரூ.75, உள்ளி ரூ.60/50, பல்லாரி ரூ.40, பீட்ரூட் ரூ.42, நூல்கோல் ரூ.44, முள்ளங்கி ரூ.32, பீன்ஸ் ரூ.125/110, கோஸ் ரூ.38, கேரட் ரூ.66, எலுமிச்சை ரூ.36 மற்றும் உருளை ரூ.30/28 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
Theni Godwin
தேனி மாவட்டம் சின்னமனூர் நகர் உழவர் சந்தையில் ஜூலை 12ஆம் தேதிக்கான காய்கறிகளின் விலை விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அங்கு கத்தரி கிலோ ரூ.54, தக்காளி ரூ.20/18, வெண்டை ரூ.36, அவரை ரூ.65, கொத்தவரை ரூ.36, சுரை ரூ.22/15, புடலை ரூ.36, பாகல் ரூ.54, பூசணி ரூ.18/14, மிளகாய் ரூ.50 மற்றும் இஞ்சி ரூ.200 ஆகிய விலைகளில் விற்கப்படுகின்றன. மேலும் சேனை ரூ.40, கருணை ரூ.75, உள்ளி ரூ.60/50, பல்லாரி ரூ.40, பீட்ரூட் ரூ.42, நூல்கோல் ரூ.44, முள்ளங்கி ரூ.32, பீன்ஸ் ரூ.125/110, கோஸ் ரூ.38, கேரட் ரூ.66, எலுமிச்சை ரூ.36 மற்றும் உருளை ரூ.30/28 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
More news from தமிழ்நாடு and nearby areas
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பெரியகுளம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் இன்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, கடந்த ஆட்சி காலத்தில் அம்மா சிமெண்ட் குடோன் வைக்கப்பட்டிருந்த பகுதி மிகவும் அசுத்தமாகவும், குப்பைகளுடனும் சுகாதாரமற்று இருந்ததைக் கண்டு அமைச்சர் கடும் அதிருப்தி அடைந்தார். "உங்கள் வீட்டை இப்படித்தான் அசுத்தமாக வைத்துக் கொள்வீர்களா? உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது போல் அரசு கிட்டங்கியையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று அங்கிருந்த அதிகாரிகளையும் பணியாளர்களையும் அவர் கடுமையாகக் கண்டித்தார். இதனைத் தொடர்ந்து, வளாகத்தில் உள்ள இரண்டு கிட்டங்கிகளிலும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆய்வு செய்த அமைச்சர், உணவுப் பொருட்களின் தரம், இருப்பு, எடை, சுகாதாரம் மற்றும் பணியாளர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றைச் சரிபார்த்தார். மேலும், ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் உணவுப் பொருள் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் வீடுகளில் ஆய்வு செய்து, அவர்கள் வீட்டை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, பருப்பு, சீனி மற்றும் மைதா ஆகியவற்றை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சாக்குகள் மிகவும் தரமற்றதாகவும், சேதமடைந்தும், பழையதாகவும் இருந்ததைக் கண்ட அமைச்சர், அவற்றை உடனடியாக மாற்றி, தரமான பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார். வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் உணவுப் பொருள் பைகள் மிகவும் தரமற்று இருப்பதாக ஊழியர்கள் தனக்கு அனுப்பிய ஆடியோ புகாரை, அங்கிருந்த பணியாளர்களிடமே அமைச்சர் நேரடியாகப் போட்டுக் காட்டினார். இதனால் ஆண்டிபட்டி நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆய்வின் போது, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன், உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் தேனி மாவட்ட தவெக செயலாளர் பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.2
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கிட்டங்கியில் உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த பகுதி முழுவதும் மிகவும் சுகாதாரமற்ற முறையிலும், குப்பைகள் நிறைந்து அசுத்தமாகவும் இருந்ததை அமைச்சர் கண்டறிந்தார். இதனைப் பார்த்து அதிருப்தியடைந்த அமைச்சர் வெங்கட்ராமன், அங்கிருந்த அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார். "உங்கள் வீட்டை இப்படித்தான் அசுத்தமாக வைத்துக் கொள்வீர்களா?" என்று கேள்வி எழுப்பிய அவர், சொந்த வீட்டை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்கிறீர்களோ, அதேபோல் அரசு கிட்டங்கியையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், வாணிப கழக கிட்டங்கியை எப்போதும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.1
- தேனியைச் சேர்ந்த மோசஸ் பவுன்ராஜ் மற்றும் திவ்யா ஆகியோர், மறைந்த மோசஸ் தர்மராஜுக்கு 21-வது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர். 10-10-1951 அன்று பிறந்து, 12-7-2005 அன்று மறைந்த மோசஸ் தர்மராஜின் நினைவாக இந்த அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.1
- தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரின் பிறந்தநாள் விழா வருகிற 18.07.2026 சனிக்கிழமை அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, திண்டுக்கல் மத்திய மாவட்டம் சார்பில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் பொதுச் செயலாளரின் பிறந்தநாளை மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள், இளைஞர் அணித் தலைவர்கள், மகளீர் அணி, மாணவரணி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், அன்னதானம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளை மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பங்கேற்புடன் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் அறிவுறுத்தினார்.1
- அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் இன்று (ஜூலை 12) வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில், தமிழக முதல்வர் விஜய்க்குப் பல காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். கரூரில் நடைபெற்ற விஜய் கூட்டத்தில் பங்கேற்று உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு, விதிகளுக்குப் புறம்பாக அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் விஜய் அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்திருந்தால், அவர்கள் உருப்படியான யோசனைகளை வழங்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்களின் நம்பிக்கையை இவ்வாறு சிதைக்கலாமா என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் உதயகுமார், வேலை தேடி வரும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களைத் தெருக் கோடியில் நிற்க வைக்கலாமா என்றும் முதல்வர் விஜய்யை நோக்கிக் கடுமையாக வினவியுள்ளார்.1
- திண்டுக்கல் வத்தலகுண்டு சாலை முழுவதும் பள்ளங்கள் நிறைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும், மழை பெய்தால் இப்பகுதியில் சாக்கடை நீர் தேங்கி கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மக்களுக்கு அரசு அதிகாரிகள் செய்துள்ள 'நற்பணிகள்' இந்த அளவிற்கு அதிகமாக உள்ளது என்று பொதுமக்கள் கடுமையான நையாண்டியுடனும் ஆத்திரத்துடனும் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சாலை வழியாக நெடுஞ்சாலைத்துறையினர், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஏராளமான உள்ளாட்சி நிர்வாகிகள் என பலரும் தினசரி பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பொதுமக்கள் மனு கொடுத்தால் மட்டும்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்றும், இதுவரை கொடுத்த மனுக்கள் மீது எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். சாலை அவலத்தால் நடக்கும் விபத்துகளுக்கு அரசு அதிகாரிகள்தான் காரணம் என்று பொதுமக்கள் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.1
- விருதுநகர் ஒய்.எம்.சி.ஏ ஹாலில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் அமிர்தக்குமார், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 10 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகளிடையே உரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 22 ஆண்டுகளாக அரசு ஊழியர்களை வாட்டி வதைக்கும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 'உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில்' 10% பங்களிப்புத் தொகை பிடித்தம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும், தேர்தல் காரணமாக அதுவும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் சாடினார். மேலும், கடந்த 01.04.2003-க்கு முன்பு நடைமுறையில் இருந்த 'பழைய ஓய்வூதிய திட்டத்தை' எந்தவொரு மாற்றுத் திட்டமும் இன்றி முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே தங்களின் இறுதி இலக்கு எனக் குறிப்பிட்ட அவர், கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி (DA) உயர்வை உடனே வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும் மற்றும் தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தார். தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, புதிய அரசு பதவியேற்று இரண்டு மாதங்களே ஆவதால், முதலமைச்சர் விஜய் அவர்கள் தங்களின் முதன்மையான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவார் என்று முழுமையாக நம்புவதாக அமிர்தக்குமார் தெரிவித்தார். இதற்காக முதலமைச்சரை இருமுறை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதிகாரிகளுடன் பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். பேச்சுவார்த்தை மூலம் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தீராத பட்சத்தில், சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்டப் போராட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.1
- தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிட்டங்கியில் அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அங்கு பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அமைச்சரிடம் நேரில் வழங்கினர். தொழிலாளர்கள் அளித்த இந்த மனுவின் மீது பதிவு செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, போடி பகுதியில் நடைபெறவுள்ள ஆய்வு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.1