Shuru
Apke Nagar Ki App…
கிருஷ்ணகிரி மாவட்டம் கருங்கல் கடத்திய டிராக்டர் பறிமுதல் கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள், உத்தனப்பள்ளி அருகே நாகமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, புறம்போக்கு நிலத்தில் கருங்கல் வெட்டி கடத்த முயன்ற நபர்கள் அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். உடனே, சம்பவ இடம் சென்று அதிகாரிகள் விசாரித்த போது, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கருங்கல்லை வெட்டி டிராக்டரில் கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, கருங்கல்லுடன் டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், உத்தனப்பள்ளி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
USHA INDU
கிருஷ்ணகிரி மாவட்டம் கருங்கல் கடத்திய டிராக்டர் பறிமுதல் கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள், உத்தனப்பள்ளி அருகே நாகமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, புறம்போக்கு நிலத்தில் கருங்கல் வெட்டி கடத்த முயன்ற நபர்கள் அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். உடனே, சம்பவ இடம் சென்று அதிகாரிகள் விசாரித்த போது, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கருங்கல்லை வெட்டி டிராக்டரில் கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, கருங்கல்லுடன் டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், உத்தனப்பள்ளி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- ஓசூரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று பிரதோஷ வழிபாடினை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது நந்தி பகவானுக்கு பால், தயிர்,சந்தனம், மஞ்சள்,குங்குமம், பஞ்சாமிர்தம், விபூதி, ஆகியவைக் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் அலங்காரமும் செய்து மாலை அணிவித்து உதிரி பூக்களால் அர்ச்சனை செய்து தூப தீபம் காட்டினார்கள். பக்தர்கள் திரளாக வருகை தந்து நந்தி பகவன் அருள் பெற்று சென்றனார். பிரசாதம் வழங்கப்பட்டது.1
- Post by Salem_Updates1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மின்னூர், வடகரை, மேல் சான்றோர் குப்பம், உட்பட பல்வேறு கிராமங்களில் (இன்று ஏப்ரல் 29 மாலை 3 மணிக்கு) இடி மின்னல் காற்று மழை பெய்தது கடந்த சில நாட்களாக 100 டிகிரி வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது இன்று பெய்த மழையினால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி உள்ளது இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த மழை தொடர்ந்து 3 நாட்களுக்கு தொடர்ந்து பேயும் என வானிலை ஆராய் மையம் நேற்று அறிவிப்பு இந்த நிலையில் இன்று மழை1
- Post by Vinayagam Vinayagam1
- ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையை கடக்க முயன்ற வட மாநில இளம் பெண் மீது இருசக்கர வாகன மோதியதில் வடமாநில பெண் சம்பவ இடத்திலேயே பலி. ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல். ________ காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பேட்டரிசார்ஜ் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் உத்திர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா (26) பணிபுரிந்து வந்தார். இவர் தனது வேலை செய்யும் நிறுவனத்திற்கு அருகிலேயே சக தோழிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சுனிதா செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் சாலையை கடந்து சென்று சாலையோர கடையில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் மாநில நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது ஒரகடத்தை நோக்கி சக்திவேல் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் வேகமாக மோதி சுமார் 20 மீட்டர் தூரம் இழுத்து சென்றதில் இடுப்பு பகுதி மற்றும் கால் பகுதி முறிந்து சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற கம்பம் பகுதியை சேர்ந்த சக்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சாலையின் நடுவே சடலமாக கிடந்த சுனிதாவின் உடலை போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது மேலும் இந்த சாலை விபத்து சாலை நடுவே நடைபெற்று சுனிதாவின் சடலம் சாலை நடுவே இருந்ததால் சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.1
- திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வளாகத்தில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலய 5 வது ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் விமர்சையாக நடைபெற்றது. திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் குடியிருப்பு வளாகத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது இந்த கோவிலின் ஐந்தாவது ஆண்டு கும்பாபிஷேக விழா இன்று மிக விமர்சனையாக 1024 கலச பூஜைகளுடன் நடந்தது. முன்னதாக கடந்த 23ஆம் தேதி மாலை கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து பலி வாஸ்து கலசம் தொடங்கி 24ஆம் தேதி காலை கணபதி ஹோமம் மூல பூஜையும் 25ஆம் தேதி சாந்தி ஹோமம், பகவதி சேவை என நாள்தோறும் பூஜை புனஸ்காரங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 7:15 மணியிலிருந்து 8 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற்றது அதனை தொடர்ந்து 1008 கலசம் அபிஷேகமும் நடந்தது. இந்த விழாவில் பெல் ஊரகப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஐயப்ப சேவா சங்கத்தினர் உட்பட சுற்றுவட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.2
- Post by ஆ.கார்த்திக் (P F H R.)1
- Post by Vinayagam Vinayagam1