Shuru
Apke Nagar Ki App…
ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் S இராமச்சந்திரன் அவர்களை ஆரணி பெஸ்ட் போட்டோ அண்ட் வீடியோ நலச்சங்கத்தின் சார்பாக ஆரணி சங்க தலைவர் லிங்கப்பன் செயலாளர் எம் வெங்கட்ராமன் பொருளாளர் ஜெய்சங்கர் ஒருங்கிணைப்பாளர் கோபு துணைச் செயலாளர் செங்கோட்டையன் செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை பெற்றார்.நிகழ்வில் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
வடிவேலன்
ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் S இராமச்சந்திரன் அவர்களை ஆரணி பெஸ்ட் போட்டோ அண்ட் வீடியோ நலச்சங்கத்தின் சார்பாக ஆரணி சங்க தலைவர் லிங்கப்பன் செயலாளர் எம் வெங்கட்ராமன் பொருளாளர் ஜெய்சங்கர் ஒருங்கிணைப்பாளர் கோபு துணைச் செயலாளர் செங்கோட்டையன் செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை பெற்றார்.நிகழ்வில் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- காஞ்சிபுரம். பாலுச்செட்டிசத்திரத்தில் புதிய சாலை வசதி ஏற்படுத்திட கோரி திமுக தலைமை செயற்குழு உறுப்பினரிடம் அண்ணா நகர் முதல் தெரு பகுதிவாசிகள் கோரிக்கை விடுப்பு காஞ்சிபுரம் ஒன்றியம், பாலுச்செட்டிசத்திரம் அண்ணா நகர் முதல் தெரு பகுதிவாசிகள் தங்கள் பகுதிகளில் தேங்கும் குப்பைகளை அகற்றிடவும்,புதிய சாலை வசதி எற்படுத்திடவும்,புதிய கல்வெட்டு அமைத்திட கோரியும் திமுக காஞ்சி தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து உள்ளாட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு உடனடியாக எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது முட்டவாக்கம் ஏரி நீர் பாசன சங்க தலைவர் முட்டவாக்கம் மனோகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.1
- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திமுக சாா்பில், வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் பளிங்கு கல்லால் ஆன முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 3 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் மருத்துவரணி மாநில துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.அம்பேத்குமாா், ஒ.ஜோதி, மு.பெ.கிரி, வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், நகரச் செயலா் எ.தயாளன், ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், சி.ஆா்.பெருமாள், கே.ஆா்.பழனி, எ.சுந்தரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா் #TamilNadu #chiefminister #DMK #minister #e.v.Velu #vandavasi #Tiruvannamalai #public #arumalur1
- கிருஷ்ணகிரி, எழும்பி பிரகாசி மிஷனரி பேராயம் மற்றும் நியு ஆங்கிலிக்கன் சினாட் அமைப்பின் தந்தை பேராயர் ஜெயசிங் செய்தியாளர்களிடம் சந்திப்பு.1
- ஊத்தங்கரை அருகே வீட்டுமனை பட்டா கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யாததை கண்டித்து காத்திருப்பு போராட்டம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாலமரத்துப்பட்டி தரப்பு ஓலைப்பட்டி கூட்ரோட்டில் சுமார் 65க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கடந்த 2012மே ஆண்டு வீட்டு மனை பட்டா வழங்கியும் அதனை கிராம அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யாததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கியும் இதுவரையிலும் தமிழக அரசு அதனை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர், மற்றும் வருவாய் ஜமாபதி முகம், உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் முதல்வர் உள்ளிட்ட திட்டங்களில் நேரடியாக பொதுமக்கள் பல்வேறு மனுக்களை கொடுத்தும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் ஆளும் திமுக அரசு எடுக்கவில்லை. பட்டா வைத்துள்ள வீடுகளையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி இடித்து அகற்றும் வேலையிலும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்டித்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்கள் ஒன்று திரண்டு உடனடியாக தமிழக அரசால் வழங்கப்பட்ட அனைத்து பட்டாக்களையும் கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வருவாய்த்துறையினர் வீடுகளை இடித்து அகற்றப்பட்ட இடத்தில் வேலி அமைத்துள்ளனர், அந்த வேலியை அத்துமீறி உடைத்து அந்த பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர் எனவே தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டாவினை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு நஷ்டம், திமுகவுக்குத்தான் லாபம்-விஜய் தரப்பினர் யாரும் பேசாமல் இருப்பதால், காணவில்லை அறிவிப்புத்தான் கொடுக்க வேண்டும் என மொரப்பூரில் பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி பேட்டி.1
- ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு நஷ்டம், திமுகவுக்குத்தான் லாபம்-விஜய் தரப்பினர் யாரும் பேசாமல் இருப்பதால், காணவில்லை அறிவிப்புத்தான் கொடுக்க வேண்டும் என மொரப்பூரில் பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி பேட்டி. தருமபுரி மாவட்டம் அரூர் பாஜக சார்பில் மோடி பொங்கல் மொரப்பூரில் நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் பாஜகவின் கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டார். இந்த பொங்கல் விழாவிற்கு வந்த நடிகை கஸ்தூரியை பாஜகவினர் மாட்டு வண்டியில் அழைத்து வந்தனர். மேலும் பொங்கல் விழாவில் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தில் நடிகை கஸ்தூரி குழுவினரோடு இணைந்து கும்மி ஆடினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, தணிக்கை குழு எந்த படத்திற்கு கட்டீப்பாடுகள் விதிக்கவில்லை. காங்கிரஸ், திமுகவினருக்கு நான் சொல்ல நினைக்கிறேன். அறநிலையத் துறையில் அரசு குறிக்கீடு, கோயில் நிர்வாகத்தில் அரசு குறுக்கீடு என தமிழ்நாட்டில் இருக்கிறதனால், மத்திய அரசும் எல்லாத் துறையிலும் தலையிடும் என்று நினைக்க வேண்டாம். மத்திய அரசில் எல்லாமே நியாயமான முறையில் நடக்கிறது. தணிக்கை துறை ஐஏஎஸ் அதிகாரி பாலமுரளி தலைமையில் நடைபெறுகிறது. அவர் ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி இருப்பதில் யாரும் தலையிட முடியாது. திமுகவை பொறுத்தவரையில் எல்லா பிரச்சனைகளிலும் அவர்கள் நேரடியாக தலையிட மாட்டார்கள். என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். ஒரு புகார் எங்கிருந்து வருகிறது என்று தெரியாது ஆனால் அதனை ஆழ்ந்து பின் தொடர்ந்தால் அதன் உண்மை தன்மையை புரிய வரும். எப்பொழுதும் திமுக வெளிப்படையாக அதில் செயல்படாது. ஜனநாயகன் படம் வெளியிடாதது, காலதாமதம் ஆவது, பாஜகவுக்கு தான் நஷ்டம். இதில் திமுகவுக்கு தான் லாபம். நீதிமன்றம் செல்வது, லிஸ்டிலே இல்லாத ஒன்று. விஜய் தரப்பினர் நீதிமன்றத்திற்கு செல்வதில் ஆராய்ந்து சென்றிருக்க வேண்டும். இதனை சென்சாரிலேயே முடித்திருந்தால், இன்று திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கும். நான் இதனை நினைத்து வருத்தப்படுகிறேன். ஆதங்கப்படுகிறேன். நான் விஜய்யின் ரசிகையாக வெளிநாட்டிலிருந்து எல்லா படங்களையும் முதல் நாளை பார்த்திருக்கிறேன். காவலன் படத்திற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டபோது, அவரை பாதிக்கப்பட்டவராக சிம்பதியோடு பார்த்தோம். ஆனால் இப்போது அவர் கம்முனு (அமைதியாக) இருக்கிறார். இவரை பாதிக்கப்பட்டவராக பார்ப்பதா? இல்லை செயலிழந்தவராக பார்ப்பதா? பெராலிக்ஸ் (முடக்கு வாதம்) வந்தவர் போல இருக்கிறார். யார் இறந்தாலும் பேசுவதில்லை. 41 பேர் இறந்த பிறகு நான்கு நாள் கழித்து யோசித்து பேசுகிறார். அவர் படத்துக்கு ஒரு பிரச்சனை வந்தாலும், பேசாமல் இருக்கிறார். அங்கே டெல்லி போய் விதவிதமாக பேசியவர்கள், கூட்டத்தில் பேசியவர்கள் எல்லாம், எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சென்சார் நீதிமன்றமானால் கூட, எதாவது தெரியனுமில்ல. காணவில்லை அறிவிப்பு தான் போடனும். இப்ப எனக்கே ஒரு சந்தேகம் வருகிறது. உங்க பிரச்சனைக்கு நீங்க சும்மா இருக்கீங்க, நாளைக்கு எந்த பிரச்சினைக்கு என்ன பண்ணுவீங்க. உங்களுக்காக, உங்க பிரச்சனைக்காக பாஜக அதிமுக தலைவர்கள் பேசுகிறார்கள். நீங்க அப்ப கூட பேசவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலை மென் வைத்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் போராட்டமாகவே இருக்கிறது. அரசு ஆசிரியர்கள், செவிலியர்கள் என எல்லோரும் போராடி வருகின்றனர். செவிலியர்களுக்கு ஒரு சப்பை கட்டு செய்து, 500 ஆர்டர் மட்டும் கொடுத்துள்ளனர். இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஜாக்டோ ஜியோ ஆறாம் தேதி போராட்டத்தை சரி கட்டி உள்ளார்கள். ஆனால் பழைய பென்சன் திட்டத்தை கொடுக்கவில்லை. இது எப்ப திரும்பும் வெடிக்க போவது என்று தெரியவில்லை. தற்போது ஜனவரி மாதம் பிறந்ததிலிருந்து பத்து லட்சம் மடிக்கணினி, மகளிர் உதவி தொகை என பல திட்டங்களை கொடுத்து வருகிறார் முதலமைச்சர். 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக சொல்கிறார்கள். 99 வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அங்கே கணக்கில் வீக் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் 504 வாக்குறுதியில் 99 சதவீதம் என்றால், ஏறத்தாழ 499 வாக்குறுதிகள். இது நூறு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. 404 வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்பதை தான், நிறைவேற்றியதாக மாற்றி சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். நானும் தேடித்தேடி பார்க்கிறேன் என கஸ்தூரி தெரிவித்தார்.1
- ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா 09.01.2026 மதியம் 3 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் 235 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் விஜயன் தலைமை வகித்தார். பர்கூர் எம்எல்ஏ மதியழகன் 235 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் கதிரவன். மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ். மாவட்ட துணைச் செயலாளர் சந்திரன். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காந்தி,ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம் குமரேசன் ரஜினி செல்வம்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.1