Shuru
Apke Nagar Ki App…
அய்யலூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார் - உயிர் தப்பிய கணவன், மனைவி திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர், தீர்த்தாக்கிலவனூர் அருகே திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து இந்த விபத்தில் காரில் வந்த கணவன், மனைவி அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மேற்படி சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Natarajan Pitchaimani
அய்யலூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார் - உயிர் தப்பிய கணவன், மனைவி திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர், தீர்த்தாக்கிலவனூர் அருகே திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து இந்த விபத்தில் காரில் வந்த கணவன், மனைவி அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மேற்படி சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.1
- நத்தம் எருமநாயக்கன் பட்டி சாலையில் சாலையை கடக்கும் முதியவர் முயன்ற போது அதிவேகமாக வந்த வாகன மோதி முதியவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம் காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறனர்1
- மணப்பாறை அருகே மேட்டுக்கடை முதியோர் இல்லத்தில் கொண்ட்டாட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேட்டுக்கடை முதியோர் இல்லத்தில் முதியோர் நலனுக்கான மாநில செயல் திட்டம் மூலம் அவர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் தங்களின் மகிழ்ச்சியை ஆடிப் பாடி கொண்டாடி வெளிப்படுத்தினர். அவர்களோடு மாணவ - மாணவிகளும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பின்னர் நெருப்பில்லாமலும், நெருப்பு பயன்படுத்தியும் பல்வேறு திண்பண்டங்கள் மற்றும் உணவு வகைகளை பாரம்பரியம் மாராமல் செய்து அசத்தினர். காப்பகத்தில் உள்ள முதியவர்களை மகிழ்விக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சி கவனம் ஈர்த்தது.4
- டாஸ்மாக் கடைகள் விடுமுறை: மதுபான கடைகளில் குவிந்த மது பிரியர்கள். தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு நாளை (ஆக.26) டாஸ்மார்க் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று (ஆக.25) இரவில் மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மது பாட்டில்களை வாங்கி சென்றார்கள்.1
- 2006 ஆண்டு வனஉரிமை சட்டப்படி அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கவேண்டும் தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு மக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை மற்றும் தும்மக்குண்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட 108 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் புலிகள் காப்பகம் என்ற காரணம் காட்டி தீர்ப்பை அளித்துள்ளது வனப்பகுதியில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர்களை வெளியேற்ற வனத்துறை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது இதை எதிர்த்து கடமலை மயிலை ஒன்றிய பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் தர்ணா பொதுக்கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுமை போராட்டம் என பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தங்களது வெளியேற்றக் கூடாது என்றும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் தேனி மாவட்டம் நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து வனப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற தொடர் முயற்சிகளை எடுத்து வருவது இப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது இந்நிலையில் இன்று நரியூத்து கிராமத்தில் வனப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது கிராமத்தில் உள்ள அரசு சமுதாயக்கூடத்தில் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற சிறப்பு கூட்டத்தை நடத்தினார்கள் இக்கூட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது வேலைகளுக்கு செல்லாமல் கலந்து கொண்டனர் கூட்டத்தில் 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி வனப்பகுதியில் வசிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறை அந்த நடவடிக்கையை கைவிடவேண்டும் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் 9 ஊராட்சிகளை சேர்ந்த 108 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அங்கேயே தங்கி உணவு சமைத்து உண்டு தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்1
- வீடியோ எடிட் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை வனத்துறையினர் கைது *ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் சாலையில் கடந்து செல்லும் ஒற்றைக் காட்டு யானை வீடியோ வைரல்* *ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் வீடியோ எடிட் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் யானை ஒன்று தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது அந்த வழியாக காரில் சென்ற நபர்கள் தங்களது செல்போனில் யானை கடந்து செல்வது போன்று வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் இந்த வீடியோ ஆண்டிப்பட்டி பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது இந்த நிலையில் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர் ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் யானை நடமாட்டம் இல்லாத நிலையில் திடீரென யானை உலா வருவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறித்து ஆண்டிப்பட்டி வனத்துறையினர் விசாரணை செய்த நிலையில் இந்த காணொளி ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று உறுதி செய்தனர் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் யானை கடந்து சென்ற வீடியோவால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த காணொளி எடிட் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த அழகு ராஜா (27) என்பவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணைக்கு பின் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இது குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்1
- வளநாடு அருகே வாகன சோதனையில் 4 கிலோ கஞ்சா சிக்கியது. திருச்சி மாவட்டம் கோவில்பட்டி பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் அடிப்படை பிரிவு போலீசார் கோவில்பட்டி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் . வளநாடு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது திருச்சி ராம்ஜிநகர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் தாமோதரன் 43 என்பது தெரிய வந்தது .மேலும் அவன் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் 2 கிலோவில் 2 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது . அதனைத் தொடர்ந்து அவன் மீது வழக்குப் பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.மேலும் 4 கிலோ கஞ்சா,எடை மெஷின் ,மொபைல் போன் இரண்டு,ஒட்டி வந்த இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் .1
- சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எரமநாயக்கன்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேற்படி சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இது குறித்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது1