புதுக்கோட்டையில்சாலை விரிவாக்கப் பணியின் போது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, இடத்தை எம்எல்ஏ ஆய்வு புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 10, மச்சுவாடி தற்போது நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியின் போது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் தெருக்களில் வீணாகச் செல்வதாக பொதுமக்கள் வாயிலாக தொடர்ந்து புகார் மாநகராட்சி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது, அந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரை அணுகி தங்களது புகாரை தெரிவித்திருந்த நிலையில் பொதுமக்களின் புகாரை அறிந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை. முத்துராஜா MBBS., MLA., உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை தொடர்புகொண்டு, குடிநீர் குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில், தற்போது நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்து, குடிநீர் வீணாவதைத் தடுத்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைப்பதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் திரு. பால்ராஜ் அவர்கள், மாநகராட்சி அதிகாரிகள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டையில்சாலை விரிவாக்கப் பணியின் போது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, இடத்தை எம்எல்ஏ ஆய்வு புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 10, மச்சுவாடி தற்போது நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியின் போது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் தெருக்களில் வீணாகச் செல்வதாக பொதுமக்கள் வாயிலாக தொடர்ந்து புகார் மாநகராட்சி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது, அந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரை அணுகி தங்களது புகாரை தெரிவித்திருந்த நிலையில் பொதுமக்களின் புகாரை அறிந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர்
வை. முத்துராஜா MBBS., MLA., உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை தொடர்புகொண்டு, குடிநீர் குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில், தற்போது நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்து, குடிநீர் வீணாவதைத் தடுத்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைப்பதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் திரு. பால்ராஜ் அவர்கள், மாநகராட்சி அதிகாரிகள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர்.
- புதுக்கோட்டை பெரியா நகரை சேர்ந்த சாய் திவ்யாஉலக சாதனை படைத்த சிறுமி புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் ராதா தம்பதிகளில் 6 வயது குழந்தை சாய் திவ்யா ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் உலக சாதனை திகழ்ந்தார்4
- பொன்னமராவதியில் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி திமுக நகரச் செயலாளர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. அதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி வார சந்தை விலை நிலவரம் வெங்காயம் 2 கி ரூ.140 தக்காளி 1 .500 ரூ.50 உருளைக்கிழங்கு 1.500 ரூ. 50 பீட்ரூட் 1 தட்டு ரூ.20 அவரைக்காய் 1 தட்டு ரூ. 20 முட்டைகோஸ் ரூ. 30-40 இஞ்சி 100 கி ரூ.30 கொத்தமல்லி ரூ.10 வெண்டைக்காய்1/2 கி ரூ.50 முள்ளங்கி 1 தட்டு ரூ 20 கேரட் 1/2 கி ரூ 50 தேங்காய் 1 காய் 20 -50 ரூ கொடை மிளகாய் 3 காய் 20 ரூ முருங்கை காய் 3 காய் 20 ரூ ஆப்பிள் 1 கி 200 ரூ சாத்துக்குடி 1 கி 80 ரூ திராட்சை பழம் 1/2 கி 40 ரூ விநாயகர் சிலை 50 -200 ரூ அகல் விளக்கு 10 விளக்கு 10 ரூ பொரி 20 ரூ கதம்பம் 1 மோலம் 25 ரூ என்ற விலைக்கு விற்கப்பட்டது.1
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதர்கள் மண்டி கிடப்பதால் மாணவிகள் அச்சம்: திருவாடானை பாரதிநகரில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நூற்றுக்கணக்கான மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.இப்பள்ளி வளாகத்திற்குள் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற பொருட்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதன் காரணமாக, பள்ளி வளாகத்தில் அவ்வப்போது விஷப் பூச்சிகள் மற்றும் ஊர்வன நடமாட்டம் தென்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், தினமும் பள்ளிக்கு வரும் மாணவிகள் அச்சத்துடனேயே கல்வி பயிலும் சூழல் நிலவுகிறது.எனவே, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலாளர் இணைப்பு வழங்கி கொண்டாடினர். முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், எம் எல் ஏ விக்னேஷ் ஆகியோர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் முசிறி நகரக் கழக செயலாளர்கள் சந்தோஷ் குமார், சந்திரகுமார் வழக்கறிஞர் ராஜசேகர், நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், நகர துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.1
- தலைமலை பட்டிஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ சென்னிமலை ஆண்டவர் ஆலயத்தில் 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தலைமலைப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ சென்னிமலை ஆண்டவர் ஆலயத்தில் புதிதாக எழுந்து அருள்பாலிக்க உள்ள அருள்மிகு அஷ்டபுஜமங்கள வாராஹி அம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக முடிந்தது.அதனைத் தொடர்ந்து 48 வது நாள் மண்டல பூஜைகள் நடைபெற்று சுவாமிகள் யாகம் செய்து மண்டல பூஜைகள் நிறைவு விழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் கோவில் நிர்வாக சார்பில் அன்னதானம் பிரசாதம் வழங்கினர்1
- டிப்பர் லாரியிலிருந்து கொட்டப்பட்ட மண் பொதுமக்கள் அவதி அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் வெங்கட கிருஷ்ணாபுரம் அருகே சாலையில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தில் இருந்து மண் சாலையில் கொட்டிச் சென்றுள்ளது. ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த சாலையில் பயணித்தே அரியலூரை வந்தடைய முடியும். இந்நிலையில் சாலையில் கொட்டிக் கிடந்த மண்ணைக் கடந்து செல்லும் கனரக வாகனங்களின் வேகத்தினால் அதிலிருந்து எழும் மண் துகள்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை பெரிதும் அவதிக்குள்ளாக்கியது. கண்களில் வந்து விழுந்த மண் துகள்களால் வாகனத்தை இயக்க முடியாது பொதுமக்கள் அவதியுற்றனர். உடனடியாக சாலையில் கொட்டிக் கிடக்கும் இந்த மண்ணை அகற்றி வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- வைத்தியலிங்க புரம் வெற்றி விநாயகர் பாலமுருகன் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூசை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி வைத்தியலிங்க புரம் வெற்றி விநாயகர் பாலமுருகன் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இன்று (செப் 14) வெற்றி விநாயகருக்கு சிறப்பு பூசை நடைபெற்றது. இன்று காலை மஞ்சல்,பால், தயிர்,திரவிய பொடி,பன்னீர்,அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பின் மோதகம் பிரசாதம் வழங்கப்பட்டது.1