Shuru
Apke Nagar Ki App…
திருவொற்றியூர் அரிமா சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள். சென்னை வடக்கு அரிமா சங்கம் 324 1ஏ சார்பில் திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பொருளாளர் கே.எஸ்.கோபி ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது. இதில் அரிமா சங்க நிர்வாகிகள் சங்கர், தியாகராஜன், முருகன், இளங்கோ, பரசுராமன், கனகம், தேவகி, தர்ஷினி ஆகியோர் ஒன்றிணைந்து தலைமை மருத்துவர் மனோஜ் குமாரிடம் வழங்கினர். இதில் செவிலியர்கள் பொதுமக்கள் என பலர் இருந்தனர்.
Reporter M.Krishna Kumar
திருவொற்றியூர் அரிமா சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள். சென்னை வடக்கு அரிமா சங்கம் 324 1ஏ சார்பில் திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பொருளாளர் கே.எஸ்.கோபி ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது. இதில் அரிமா சங்க நிர்வாகிகள் சங்கர், தியாகராஜன், முருகன், இளங்கோ, பரசுராமன், கனகம், தேவகி, தர்ஷினி ஆகியோர் ஒன்றிணைந்து தலைமை மருத்துவர் மனோஜ் குமாரிடம் வழங்கினர். இதில் செவிலியர்கள் பொதுமக்கள் என பலர் இருந்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே உள்ள 400 ஆண்டு பழமையான சங்கல்தோப்பு தர்காவில் உரூஸ் திருவிழாபழையபேட்டை கோட்டை மக்கானிலிருந்து அனைத்து ஜமாத் கமிட்டி தலைவர் எஸ்.கே.நவாப் தலைமையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரட்டை குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டியில் சந்தனகுடம் ஊர்வலம் நடந்தது.1
- பத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிசாமியாக ஆக்கி மக்கள் அடித்து விரட்ட வேண்டும் - அரூர் சட்டமன்ற தனி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை. தர்மபுரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திமுக வேட்பாளரான சண்முகத்தை ஆதரித்து தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்: திமுக மீண்டும் ஆட்சி அமைத்த உடன் இல்லத்தரசி திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் 8000 மதிப்புள்ள ஒரு கூப்பன் வழங்கப்பட்டு அதில் வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்து வருடத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நம்பர் ஒன் மாநிலமாக இருந்து வருகிறது. ஒன்றிய அரசு நாம் கேட்கின்ற நிதியை கொடுக்கவில்லை, மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை பார்த்து பார்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து.இது தொடர வேண்டும். மீண்டும் அதிமுக அடிமை ஆட்சியை தமிழகத்தில் விட்டு விடக்கூடாது, பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர், தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாத பாஜகவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அதிமுகவுக்கு போடப்படும் போட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டு. இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கக்கூடிய தேர்தல், மோடியா தமிழ்நாடா என பார்க்கக்கூடிய தேர்தல். ஒவ்வொரு முறையும் டெல்லியை ஓட ஓட விரட்டிக் கொண்டு இருக்கிறோம், மோடி அமிச்சாவை கூட வாட விரட்டி இருக்கிறோம், இந்த தேர்தலில் மோடியையும் அமிச்சாவையும் ஓட ஓட விரட்ட வேண்டும், ஜாடிக்கேத்த மூடி என பழமொழி இருப்பதாகவும் அதே போல தான் மோடிக்கு ஏத்த எடப்பாடி என இருக்கிறார், மொரட்டு பக்தர் போல மொரட்டு அடிமையை விரட்டி அடிக்க வேண்டும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துபத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிச்சாமி அடித்து விரட்ட வேண்டும் என மக்களிடம் பேசினார். இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் சண்முகத்திற்கு அனைவரும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.1
- நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் விஜயராகவன், பொதுமக்களின் பிரச்சனைகளை முன்வைத்து வித்தியாசமான முறையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.நாகப்பட்டினம் அருகே குருவாடியை சேர்ந்த சமூக சேவகரான விஜயராகவன், கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிட்டவர். இம்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் மீனவர்களின் பிரச்சனைகளை வாக்காளர்களிடம் எடுத்துரைக்கும் விதமாக, மினிவேன் வாகனத்தில் கட்டுமரத்தின் மீது சிலிண்டர் வைத்து அதற்கு மாலை அணிவித்து, சலங்கை வலையை கழுத்தில் அணிந்து வாஞ்சூர் ரவுண்டானாவில் இருந்து பேரணியாக புறப்பட்டார்.சுமார் 7 கிலோமீட்டர் தூரம் பேரணியாக வந்து, நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தை அடைந்தார். தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, 100 மீட்டர் சுற்றளவில் போலீசார் வாகனத்தை நிறுத்தி, எந்தவித பொருட்களையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்காமல் கட்டுப்பாடு விதித்தனர்.இதன்பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணிடம் விஜயராகவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.1
- சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சேலம் திமுக மத்திய மாவட்ட செயலாளர் அமைச்சர் ராஜேந்திரன் அறிமுக கூட்டம். இன்று சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் ராஜேந்திரன், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இடையே விளக்கமாக பேசி, பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக, வருகின்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தகுதிகளிலும் திமுக வெற்றி பெற, பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.1
- Post by Sri ram1
- எடப்பாடி அருகே பல வருடங்களாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாத ஆர்.ஓ பிளான்ட்... சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஆவனிப் பேரூர் கீழ்முகம் ஊராட்சி போடிநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் ஆர்வோ பிளான்ட் கட்டி முடிக்கப்பட்டது. அதேபோல் எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி ஊராட்சி அம்மன்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் குடிநீர் ஆர்ஓ பிளான்ட்கட்டி முடிக்கப்பட்டது... இரண்டு குடிநீர் ஆர்ஓ பிளான்டுகளும் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. பல ஆண்டுகளாகியும் குடிநீர் ஆர்ஓ பிளான்டில் குடிநீர் நிரப்பி பொதுமக்களின் பயன் பாட்டிற்கு விடப்படவில்லை... பல லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் ஆர்ஓ பிளான்ட் மக்களின் பயன்பாட்டிற்கு விடப்படாததால் அரசு பணம் பல லட்சம் விரய மாகி உள்ளதாக பொதுமக்கள் விமர்சித்து வருகிறார்கள். குடிநீர் ஆர்ஓ பிளான்டில் குடிநீர் நிரப்பி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட வேண் டும் என யூனியன் பிடிஓ மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோருக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் மக்களின் பயன் பாட்டிற்கு ஆர்ஓ பிலான்டடை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை... கோடை வெயில் பாதிப்பு தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க போடிநாயக்கன்பட்டி மற்றும் செட்டிங்குறிச்சி அம்மன் கோவில் ஆகிய இரு இடங்களிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆர் பிளான்டில் குடிநீர் ஏற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...1
- தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கான பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு சௌமியா அன்புமணி வருகை புரிந்த அவர்களுக்கு மாவட்ட எல்லையில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவிற்கு தருமபுரி சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சௌமியா அன்புமணி வேட்பாளராக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதனை அடுத்து தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு வருகை புரிந்த வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு மாவட்ட எல்லையில் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். வேட்பாளர் சௌமியா அன்புமணி வருகை தந்தவுடன், அவருக்கு மலர் மாலைகள் அணிவித்து, பட்டாசுகள் வெடித்து, முழக்கங்கள் எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர். மேலும், பாமக கொடிகள் ஏந்திய தொண்டர்கள் ஊர்வலமாக வந்து வேட்பாளரை வரவேற்றனர். வருகை புரிந்த பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொண்டர்கள் புடைச்சூழ ஊர்வலமாக வந்து அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன், பாஜக மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.1
- Post by பெரியசாமி2
- குடுமியான்மலை அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் 7-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரசித்தி பெற்ற குடவரைக்கோவிலான அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் இந்த ஆண்டுக்காண பங்குனி உத்திரம் திருவிழா கடந்த 23-.ந்தேதி தொடங்கியது. அதனைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் மண்டகபடி தாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிகாகிரீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்பாளை, தேரில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து குதிரை ஆட்டம், மேளதாளம் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடி நின்று தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் குடுமியான்மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு நீர்மோர், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் துணை கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.1