சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் பறையனேந்தல் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பேட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் நாதக நிர்வாகிகள் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர். தேவகோட்டை வடக்கு மாவட்டம் சார்பில் பறையனேந்தல் கிராமத்தில் கட்சி புலிக்கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பெரியசாமி அவர்கள் தலைமையில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர், உதயகுமார்,சாம் செப்ரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கவியரசன்,வசந்த், லாரண்ஸ்,தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி குறித்தும், பரப்புரை செயல்திட்டம் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. இதில் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஏராளமான பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் பறையனேந்தல் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பேட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் நாதக நிர்வாகிகள் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர். தேவகோட்டை வடக்கு மாவட்டம் சார்பில் பறையனேந்தல் கிராமத்தில் கட்சி புலிக்கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பெரியசாமி அவர்கள் தலைமையில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர், உதயகுமார்,சாம் செப்ரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கவியரசன்,வசந்த், லாரண்ஸ்,தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி குறித்தும், பரப்புரை செயல்திட்டம் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. இதில் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஏராளமான பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சியோன் நகரில் கடந்த 6 ஆம் தேதி இருவரை வாளால் வெட்டிய வழக்கில் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் கோபி ஆகிய வரை போலீசார் கைது செய்தனர் இதில் ஆகாஷ் போலீசார் கைது செய்த போது மேல பசலை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அதற்கான சிகிச்சை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆகாஷ் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்ததாக தெரிய வருகிறது இந்நிலையில் ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் மானாமதுரையில் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் மதுரை உயர்நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்ட நிலையிலும் மூன்றாவது நாளாக இந்த போராட்டம் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது அது மட்டுமல்லாமல் போக்குவரத்தும் 30 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகள் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாததால் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது இந்தப் போராட்டம் நடத்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களில் கோரிக்கையாக உள்ளது.1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்தி வரும் சாலை மறியல் போராட்டம் 24 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதனால் மதுரை–இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதும் உடன்பாடு எட்டப்படவில்லை. நள்ளிரவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், அதிகாலையில் மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.1
- மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோவில் பயங்கர தீபத்தில் உரிய நடவடிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அறநிலைத்துறையில் கேட்டுக்கொள்கிறீர்களா1
- மதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆகாஷ் என்ற பட்டியலின இளைஞர் காவல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகாஷ் என்ற இளைஞரை கொலை செய்துவிட்டது. இந்த மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒரே சாதியினராக இருந்து கொண்டு, சாதி சங்கங்களைப் போல செயல்படுகின்றனர். ஏற்கனவே மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறையினரால் கொல்லப்பட்ட சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆகாஷ் என்ற இளைஞரின் காலை உடைத்தது காவல்துறைதான். ஆனால், அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றதாக காவல்துறை பொய் சொல்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.1
- திருமங்கலம் பன்னிரண்டாவது வார்டு முனிசிபல் காலனி பகுதியில் சுமார் மூன்று மாத காலமாக கழிவுநீர் சாக்கடை அடைத்துக் கொண்டிருக்கிறது அதில் கொசு புழு உற்பத்தி ஆகிறது சிறுவர்களுக்கு காய்ச்சல் அப்பப்போது வருகிறது அதனால் சாக்கடை மற்றும் சாக்கடை போகும் பாதையை சரி செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நன்றி4
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்1
- திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.1
- தேவகோட்டை சேர்ந்த நகை பட்டறை தொழிலாளி தனது தந்தைக்கு மிக சிறியலான பூரண கும்பம் வழங்கி அசத்தல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வாடியார் வீதியில் நகை பட்டறை தொழில் செய்து வரும் முருகானந்தம் என்பவர் மிக மிக குறைந்த அளவு கொண்ட தங்கத்தில் பொங்கல் பானை கரும்பு அடுப்பு கரண்டி உள்ளிட்ட வில் செய்து தனது மகளுக்கு பொங்கல் பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தினார் அதேபோல் காரைக்குடி பிள்ளையார்பட்டியில் நடைபெற்ற தனது தந்தைக்கு சாந்தி கல்யாண விழாவில் மகன் முருகானந்தம் வெள்ளி பரிசு வழங்கினார் அதில் பானை,இலை,தேங்காய் உள்ளிட்ட இரண்டு சென்டி மீட்டர் உயரம்,3½ கிராம்,அளவு கொண்ட வெள்ளியில் மிக சிறிய அளவில் கும்பம் செய்து தாய்,தந்தையருக்கு வழங்கி தனது திறமையை பரிசாக வழங்கினார், பாண்டியன் சித்ரா தம்பதியினர் அதனைப் பெற்றுக் கொண்டு தனது மகனின் திறமையை கண்டு வியந்து பாராட்டி வாழ்த்தினார். தனது திறமையை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திறமையை கண்டு பல்வேறு தரப்பினர் பாராட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.1