logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காலைகதிரில் இன்றைய நாளைகளில் சிறப்புச் செய்திகள்/விஜய் போட்டியிடும் தொகுதிகள்

3 hrs ago
user_R. Suresh
R. Suresh
Local News Reporter கரூர், கரூர், தமிழ்நாடு•
3 hrs ago
1edbdd77-357c-4576-81d1-c9664ef80d77

காலைகதிரில் இன்றைய நாளைகளில் சிறப்புச் செய்திகள்/விஜய் போட்டியிடும் தொகுதிகள்

More news from தமிழ்நாடு and nearby areas
  • மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் முதல் ஆளாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருணகிரி. தமிழகம் முழுவதும் இன்று காலை 11:00 மணி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருணகிரி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக நாம் தமிழர் கட்சியினருடன் வருகை தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்ரகலாவிடம் வேட்பாளர் அருணகிரி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து பின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
    1
    மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் முதல் ஆளாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருணகிரி.
தமிழகம் முழுவதும் இன்று காலை 11:00 மணி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருணகிரி  தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் 
மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக நாம் தமிழர் கட்சியினருடன்  வருகை தந்த 
வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்ரகலாவிடம் வேட்பாளர் அருணகிரி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து பின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான இனிகோ இருதயராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கிழக்கு தொகுதியில் நான் பணியாற்றிய விதத்தை மக்கள் அறிவார்கள். நிச்சயமாக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். எங்களை எதிர்த்து யார் நின்றாலும் கவலையில்லை. விஜய் 2 தொகுதியில் போட்டியிடுகிறார் என்றால் அவர் தெம்பும், திராணியும் அற்றவர் என தெரிவித்தார் எனவும் அறிவாலயத்தை தேவாலயம் கைவிடாது எனவும் விஜயை நிச்சயமாக டெபாசிட் இழக்க வைப்போம்" என தெரிவித்தார்
    1
    திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான இனிகோ இருதயராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கிழக்கு தொகுதியில் நான் பணியாற்றிய விதத்தை மக்கள் அறிவார்கள். நிச்சயமாக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். எங்களை எதிர்த்து யார் நின்றாலும் கவலையில்லை. விஜய் 2 தொகுதியில் போட்டியிடுகிறார் என்றால் அவர் தெம்பும், திராணியும் அற்றவர் என தெரிவித்தார் எனவும் அறிவாலயத்தை தேவாலயம் கைவிடாது எனவும் விஜயை நிச்சயமாக டெபாசிட் இழக்க வைப்போம்" என தெரிவித்தார்
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • தவெக நாமக்கல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக சி.எஸ். திலீப் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியத் தலைமை சார்பில் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த அறிவிப்பு நாமக்கல் மாவட்ட தவெகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    1
    தவெக நாமக்கல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக சி.எஸ். திலீப் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியத் தலைமை சார்பில் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த அறிவிப்பு நாமக்கல் மாவட்ட தவெகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    17 hrs ago
  • Post by K.S. PERIYASAMY
    1
    Post by K.S. PERIYASAMY
    user_K.S. PERIYASAMY
    K.S. PERIYASAMY
    ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நித்யா அருண் ஏர் கலப்பையை சுமந்தபடி தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்... தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது.சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் வேட்புமனு தாக்கல் இன்று 30ஆம் தேதி தொடங்குகிறது... இதனையடுத்து மாநிலம் முழுவதும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன... இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நித்யா அருண் வேட்புமனு தாக்கல் செய்ய தங்கள் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்களுடன் உழவர் ஏர் கலப்பை தோலில் சுமந்தபடி இன்று சங்ககிரி மலைக்கோட்டையில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று சங்ககிரி தேர்தல் நடத்தும் அலுவலர் கேந்திரியாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்...
    1
    சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நித்யா அருண் ஏர் கலப்பையை சுமந்தபடி தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்...
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது.சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் வேட்புமனு தாக்கல் இன்று 30ஆம் தேதி தொடங்குகிறது...
இதனையடுத்து மாநிலம் முழுவதும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன...
இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நித்யா அருண் வேட்புமனு தாக்கல் செய்ய தங்கள் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்களுடன் உழவர் ஏர் கலப்பை தோலில் சுமந்தபடி இன்று சங்ககிரி மலைக்கோட்டையில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று சங்ககிரி தேர்தல் நடத்தும் அலுவலர் கேந்திரியாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    1 hr ago
  • சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் சார்பில், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினரும், பாமக மேற்கு மாவட்ட செயலாளருமான எம்எல்ஏ சதாசிவம், சேலம் வடக்கு தொகுதியில் பாமக வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற, அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அவர், வருகின்ற தேர்தலில் இந்த வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தான் முக்கியம் வெற்றி பெறுவேன் என்றும், தான் வெற்றி பெற்ற பிறகு வடக்கு தொகுதிக்கு ஏராளமான நன்மைகளை செய்ய உள்ளதாகவும் அவர் பேசினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் சார்பில், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினரும், பாமக மேற்கு மாவட்ட செயலாளருமான எம்எல்ஏ சதாசிவம், சேலம் வடக்கு தொகுதியில் பாமக வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற, அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அவர், வருகின்ற தேர்தலில் இந்த வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தான் முக்கியம் வெற்றி பெறுவேன் என்றும், தான் வெற்றி பெற்ற பிறகு வடக்கு தொகுதிக்கு ஏராளமான நன்மைகளை செய்ய உள்ளதாகவும் அவர் பேசினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த விராலிமலை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேட்டி
    1
    இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த விராலிமலை தொகுதியில் போட்டியிடும் 
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேட்டி
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • முன்னாள் முதலமைச்சர் தொகுதியில் போட்டியிடுவது எனக்கு பெருமையாக உள்ளது. எடப்பாடி தொகுதியில் உள்ள குறைகள், மருத்துவ வசதிகள் மற்றும் தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எடப்பாடி பரபரப்பு பேட்டி... சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரியதர்ஷினி, தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்... தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன... இந்நிலையில், எடப்பாடி கேட்டுக்கடை பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் பேரணியாக புறப்பட்ட பிரியதர்ஷினி, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் சென்றடைந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்... பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்காக முழு களப் போராளியாக பணியாற்றுவேன் என்றும், முன்னாள் முதல்வர் போட்டியிட்ட தொகுதியில் போட்டியிடுவது பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும்,எடப்பாடி தொகுதியில் உள்ள குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறிய அவர், மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை மற்றும் தரமான கல்வி இல்லாத பிரச்சனைகளை தீர்க்க முயற்சிப்பேன் என்றும் உறுதியளித்தார்... மக்களின் முழு ஆதரவு தமக்கு இருப்பதாகவும், நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் பிரியதர்ஷினி தெரிவித்தார்...
    1
    முன்னாள் முதலமைச்சர் தொகுதியில் போட்டியிடுவது எனக்கு பெருமையாக உள்ளது. எடப்பாடி தொகுதியில் உள்ள குறைகள், மருத்துவ வசதிகள் மற்றும் தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எடப்பாடி பரபரப்பு பேட்டி...
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி  சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரியதர்ஷினி, தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்...
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன...
இந்நிலையில், எடப்பாடி கேட்டுக்கடை பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் பேரணியாக புறப்பட்ட பிரியதர்ஷினி, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் சென்றடைந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்...
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்காக முழு களப் போராளியாக பணியாற்றுவேன் என்றும், முன்னாள் முதல்வர் போட்டியிட்ட தொகுதியில் போட்டியிடுவது பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும்,எடப்பாடி தொகுதியில் உள்ள குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறிய அவர், மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை மற்றும் தரமான கல்வி இல்லாத பிரச்சனைகளை தீர்க்க முயற்சிப்பேன் என்றும் உறுதியளித்தார்...
மக்களின் முழு ஆதரவு தமக்கு இருப்பதாகவும், நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் பிரியதர்ஷினி தெரிவித்தார்...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.