Shuru
Apke Nagar Ki App…
பத்திரிக்கையாளர் மறைவு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரங்கல் தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. ந.வினோத் குமார் அவர்கள் மறைவெய்திய செய்தி வருத்தமளிக்கிறது. தமிழரசு இதழில் வெளிவந்த தலைவர் கலைஞர் அவர்களின் சிந்தனைகளையும் சாதனைகளையும் முக்கிய நூலாகத் தொகுத்தவர். அவரது திராவிட இயக்க வரலாறு தொடர்பான படைப்புகள் முக்கியமானவை. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். என அதில் தெரிவித்துள்ளார்.
Mithun
பத்திரிக்கையாளர் மறைவு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரங்கல் தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. ந.வினோத் குமார் அவர்கள் மறைவெய்திய செய்தி வருத்தமளிக்கிறது. தமிழரசு இதழில் வெளிவந்த தலைவர் கலைஞர் அவர்களின் சிந்தனைகளையும் சாதனைகளையும் முக்கிய நூலாகத் தொகுத்தவர். அவரது திராவிட இயக்க வரலாறு தொடர்பான படைப்புகள் முக்கியமானவை. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். என அதில் தெரிவித்துள்ளார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேரிடர் மீட்பு ஆலோசனை கூட்டம் கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து இன்று வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மீட்பு துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேரிடர் மீட்பு பணிகள் சம்பந்தமாக எடுக்கப்பட்டு வரும் திட்டப் பணிகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.1
- புதுக்கோட்டை அருகே வீட்டில் 3½ பவுன் நகை திருட்டு – சிசிடிவி காட்சி வைரல்1
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணியை ஆவணித் திருவிழாவிற்கு ஒலிக்க வைக்க வேண்டும். பக்தர்கள் கோரிக்கை. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணியை ஆவணித் திருவிழாவிற்கு ஒலிக்க வைக்க வேண்டும். பக்தர்கள் கோரிக்கை. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் சுமார் 137 அடி உயரமும், 9 நிலைகள் கொண்ட கோவில் ராஜகோபுரம் உள்ளது. இந்த ராஜகோபுரத்தில் கி.பி.18 ஆம் நூற்றாண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி உள்ளது. அந்த காலத்தில் நாள்தோறும் 12 மணிக்கு நடைபெறும் உச்சிக்கால பூஜை முடிந்து கோபுர மணி ஒலிக்கப்படும். இந்த கோபுர மணி ஒலிக்கப்பட்ட பின்னரே வீரபாண்டிய கட்டபொம்மன் மதிய உணவை உண்டதாக கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மணி கோபுரத்தின் உச்சியில் உள்ள 9வது நிலையில் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் 300 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வந்த பெருந்திட்ட வளாக பணிகளில் இந்த மணியும் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்த மணி ஒலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய ஆலய மணியை வருகின்ற ஆவணித்திருவிழா நாட்களில் தினமும் ஒலிக்க வைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- திருச்செந்தூர் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ. 1.51 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மீன்வளத்துறை அதிகாரியிடம் விசாரணை நடத்தினர்.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாம்பரையில் கடம்பா குளம் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை உள்ளது. இங்கு உரிமம் புதுப்பித்தல், மீன் பங்கு வைத்தல் உள்ளிட்டவை நடந்து வருகிறது. இங்கு தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் பால்துரை தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அங்கு இருந்த ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.அதனை தொடர்ந்து திருச்செந்தூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் உத்தரண்டராமன், உதவி ஆய்வாளர் சேந்தராஜன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடித்து விசாரணை. பறிமுதல் செய்யப்பட்ட பணம் கணக்கில் வராத லஞ்ச பணமா என்று விசாரணை நடத்தினர்.1
- RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK1
- தென்காசி மாவட்டம் குற்றாலம் இன்றைய நிலவரம் மிதமான மழை இதமான காற்று லேசான வெயில் அனைத்து அருவிகளிலும் சீராக விழும் தண்ணீர் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்1
- காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது காஞ்சிபுரத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மறைந்த கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் விப்பேடு கிருபாகரன் தலைமையிலும் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் சிம்பு அவர்களின் முன்னிலையிலும் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 24 பஞ்சாயத்துகளிலும் இனிப்புகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது அதன் தொடர்ச்சியாக பாலு செட்டி சத்திரம் பகுதியில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 74 மரக்கன்றுகளை காஞ்சிபுரம் மாவட்ட விவசாய அணி செயலாளர் மகிமை மில்லர் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் கலந்து கொண்டு 74 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள் அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டா ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை பிரியாணி வழங்கி தேமுதிக மறைந்த தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய கிளை செயலாளர் விநாயகம் ஒன்றிய நிர்வாகி ஆனந்த் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய பொருளாளர் நரசிம்மன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் சந்தியப்பன் தினகரன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி துளசிராமன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் நாகராஜ் புஷ்பராஜ் கோபி மோகன் ஜோதி பிரகாஷ் நவீன் முருகன் பெத்துராஜ் சுதாகர் ஜெகன் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கேப்டன் அவர்களின் பிறந்தநாள் விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது1
- தூத்துக்குடி வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க புத்தகக் கண்காட்சி தூத்துக்குடியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களின் வாசிப்புத் திறனை அதிகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில் புத்தக கண்காட்சி தொடங்கியுள்ளது. 25 அரங்குலுடன் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள் இடம் பெற்றுள்ள இந்த புத்தக கண்காட்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் தொடங்கி வைத்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர். 11 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் அரசியல் இலக்கியம் கதைகள் கவிதைகள் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் என பல்வேறு தலைப்பிலான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன இந்த புத்தக கண்காட்சியின் போது பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.1