பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு: தமிழக அரசின் நிலைப்பாடு கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு: தமிழக அரசின் நிலைப்பாடு கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மதுரை, மார்ச் 9 – தமிழகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கை உருவாக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா தாக்கல் செய்த மனுவில், பல பெண் பணியாளர்கள் கடுமையான மாதவிடாய் வலியால் அவதிப்பட்டபடியே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, தமிழகத்தில் மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கை இல்லை என்று தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பெண்களின் உடல்நலம் மற்றும் நலனை கருத்தில் கொண்டு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் விடுப்பு வழங்கும் கொள்கையை உருவாக்கவும், இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவிலான குழுவை அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து தமிழக பெண்கள் உரிமைத் துறை முதன்மைச் செயலர் மற்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு: தமிழக அரசின் நிலைப்பாடு கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு: தமிழக அரசின் நிலைப்பாடு கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மதுரை, மார்ச் 9 – தமிழகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கை உருவாக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா தாக்கல் செய்த மனுவில், பல பெண் பணியாளர்கள் கடுமையான மாதவிடாய் வலியால் அவதிப்பட்டபடியே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, தமிழகத்தில் மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கை இல்லை என்று தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பெண்களின் உடல்நலம் மற்றும் நலனை கருத்தில் கொண்டு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் விடுப்பு வழங்கும் கொள்கையை உருவாக்கவும், இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவிலான குழுவை அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து தமிழக பெண்கள் உரிமைத் துறை முதன்மைச் செயலர் மற்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- திருச்சி: திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் சிக்ஸர் அடித்து பிரம்மாண்ட வெற்றி பெற இப்போதே தயாராக வேண்டும் என அறைகூவல் விடுத்தார். மாநில உரிமைகளைத் தடுக்கும் நீட் தேர்வு, இந்தி திணிப்பு எனத் தமிழகத்திற்கு எதிராகச் செயல்படும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்குத் தமிழகத்தில் எப்போதும் 'நோ என்ட்ரி' தான் எனத் தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ் மண்ணைக் காக்கவும் ஏழாவது முறையாக திமுகவே மீண்டும் வெல்லும் என அவர் உரையாற்றினார். (மாநாட்டின் பிரத்தியோக காட்சிகள்)1
- மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோவில் பயங்கர தீபத்தில் உரிய நடவடிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அறநிலைத்துறையில் கேட்டுக்கொள்கிறீர்களா1
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்1
- திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்தி வரும் சாலை மறியல் போராட்டம் 24 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதனால் மதுரை–இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதும் உடன்பாடு எட்டப்படவில்லை. நள்ளிரவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், அதிகாலையில் மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.1
- தேவகோட்டை சேர்ந்த நகை பட்டறை தொழிலாளி தனது தந்தைக்கு மிக சிறியலான பூரண கும்பம் வழங்கி அசத்தல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வாடியார் வீதியில் நகை பட்டறை தொழில் செய்து வரும் முருகானந்தம் என்பவர் மிக மிக குறைந்த அளவு கொண்ட தங்கத்தில் பொங்கல் பானை கரும்பு அடுப்பு கரண்டி உள்ளிட்ட வில் செய்து தனது மகளுக்கு பொங்கல் பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தினார் அதேபோல் காரைக்குடி பிள்ளையார்பட்டியில் நடைபெற்ற தனது தந்தைக்கு சாந்தி கல்யாண விழாவில் மகன் முருகானந்தம் வெள்ளி பரிசு வழங்கினார் அதில் பானை,இலை,தேங்காய் உள்ளிட்ட இரண்டு சென்டி மீட்டர் உயரம்,3½ கிராம்,அளவு கொண்ட வெள்ளியில் மிக சிறிய அளவில் கும்பம் செய்து தாய்,தந்தையருக்கு வழங்கி தனது திறமையை பரிசாக வழங்கினார், பாண்டியன் சித்ரா தம்பதியினர் அதனைப் பெற்றுக் கொண்டு தனது மகனின் திறமையை கண்டு வியந்து பாராட்டி வாழ்த்தினார். தனது திறமையை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திறமையை கண்டு பல்வேறு தரப்பினர் பாராட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.1
- தேனி மாவட்டம் குன்னூர் அருகே அம்மாச்சியாபுரம் வைகை ஆற்றின் நீர் தேக்கத்தின் அடிப்படையில் பல ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையினால் இந்த பகுதியில் உள்ள நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து விட்டது இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றன1
- மதுரை : : சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரில் பட்டியல் சமூக மக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், மானாமதுரை ஆகாஷ் லாக்அப் மரணத்திற்கு நீதி கேட்டும் இன்று மானாமதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஐஎம் மற்றும் விசிகவினர் திரளாகப் பங்கேற்று முழக்கமிட்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு, சிபிஐஎம் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன், விசிக மாவட்டச் செயலாளர் பாலையா ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் நிர்வாகிகள் கருப்புச்சாமி, முத்துராமலிங்கபூபதி, வீரையா உள்ளிட்டோர் கலந்துகொண்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கக் கோரி வலியுறுத்தினர்.2