logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சிப்காட் தொழிற் பூங்காவில், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சார்பாக, "சிப்காட் போகி” எனப்படும் மாபெரும் தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் இன்று (09.01.2026) கொடியசைத்து துவக்கி வைத்தனர். உடன், சிப்காட் தலைமை நிர்வாக அலுவலர் சிபிசக்ரவர்த்தி, சிப்காட் மேற்கு மண்டல செயற்பொறியாளர் பசுபதி, பர்கூர் சிப்காட் திட்ட அலுவலர் ஏ.சிந்து உள்ளிட்ட பலர் உள்ளனர்.

11 hrs ago
user_செல்வம்
செல்வம்
Journalist Krishnagiri, Tamil Nadu•
11 hrs ago

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சிப்காட் தொழிற் பூங்காவில், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சார்பாக, "சிப்காட் போகி” எனப்படும் மாபெரும் தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் இன்று (09.01.2026) கொடியசைத்து துவக்கி வைத்தனர். உடன், சிப்காட் தலைமை நிர்வாக அலுவலர் சிபிசக்ரவர்த்தி, சிப்காட் மேற்கு மண்டல செயற்பொறியாளர் பசுபதி, பர்கூர் சிப்காட் திட்ட அலுவலர் ஏ.சிந்து உள்ளிட்ட பலர் உள்ளனர்.

More news from Tamil Nadu and nearby areas
  • கிருஷ்ணகிரி,  எழும்பி பிரகாசி மிஷனரி பேராயம் மற்றும் நியு ஆங்கிலிக்கன் சினாட் அமைப்பின் தந்தை பேராயர் ஜெயசிங் செய்தியாளர்களிடம் சந்திப்பு.
    1
    கிருஷ்ணகிரி, 
எழும்பி பிரகாசி மிஷனரி பேராயம் மற்றும் நியு ஆங்கிலிக்கன் சினாட் அமைப்பின் தந்தை பேராயர் ஜெயசிங் செய்தியாளர்களிடம் சந்திப்பு.
    user_FAYAZ
    FAYAZ
    Krishnagiri, Tamil Nadu•
    2 hrs ago
  • ஊத்தங்கரை அருகே வீட்டுமனை பட்டா கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யாததை கண்டித்து காத்திருப்பு போராட்டம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாலமரத்துப்பட்டி தரப்பு ஓலைப்பட்டி கூட்ரோட்டில் சுமார் 65க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கடந்த 2012மே ஆண்டு வீட்டு மனை பட்டா வழங்கியும் அதனை கிராம அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யாததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கியும் இதுவரையிலும் தமிழக அரசு அதனை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர், மற்றும் வருவாய் ஜமாபதி முகம், உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் முதல்வர் உள்ளிட்ட திட்டங்களில் நேரடியாக பொதுமக்கள் பல்வேறு மனுக்களை கொடுத்தும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் ஆளும் திமுக அரசு எடுக்கவில்லை. பட்டா வைத்துள்ள வீடுகளையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி இடித்து அகற்றும் வேலையிலும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்டித்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்கள் ஒன்று திரண்டு உடனடியாக தமிழக அரசால் வழங்கப்பட்ட அனைத்து பட்டாக்களையும் கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வருவாய்த்துறையினர் வீடுகளை இடித்து அகற்றப்பட்ட இடத்தில் வேலி அமைத்துள்ளனர், அந்த வேலியை அத்துமீறி உடைத்து அந்த பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர் எனவே தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டாவினை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    ஊத்தங்கரை அருகே வீட்டுமனை பட்டா கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யாததை கண்டித்து காத்திருப்பு போராட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாலமரத்துப்பட்டி தரப்பு ஓலைப்பட்டி கூட்ரோட்டில் சுமார் 65க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கடந்த 2012மே ஆண்டு வீட்டு மனை பட்டா வழங்கியும் அதனை கிராம அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யாததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்
ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கியும் இதுவரையிலும் தமிழக அரசு அதனை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர், மற்றும் வருவாய் ஜமாபதி முகம், உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் முதல்வர் உள்ளிட்ட திட்டங்களில் நேரடியாக பொதுமக்கள் பல்வேறு மனுக்களை கொடுத்தும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் ஆளும் திமுக அரசு எடுக்கவில்லை.
பட்டா வைத்துள்ள வீடுகளையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி இடித்து அகற்றும் வேலையிலும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்டித்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்கள் ஒன்று திரண்டு உடனடியாக தமிழக அரசால் வழங்கப்பட்ட அனைத்து பட்டாக்களையும் கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வருவாய்த்துறையினர் வீடுகளை இடித்து அகற்றப்பட்ட இடத்தில் வேலி அமைத்துள்ளனர், அந்த வேலியை அத்துமீறி உடைத்து அந்த பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும்
தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்
எனவே தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டாவினை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Arunkumar k
    Arunkumar k
    Journalist கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சிப்காட் தொழிற் பூங்காவில், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சார்பாக, "சிப்காட் போகி” எனப்படும் மாபெரும் தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் இன்று (09.01.2026) கொடியசைத்து துவக்கி வைத்தனர். உடன், சிப்காட் தலைமை நிர்வாக அலுவலர் சிபிசக்ரவர்த்தி, சிப்காட் மேற்கு மண்டல செயற்பொறியாளர் பசுபதி, பர்கூர் சிப்காட் திட்ட அலுவலர் ஏ.சிந்து உள்ளிட்ட பலர் உள்ளனர்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சிப்காட் தொழிற் பூங்காவில், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சார்பாக, "சிப்காட் போகி” எனப்படும் மாபெரும் தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் இன்று (09.01.2026) கொடியசைத்து துவக்கி வைத்தனர். உடன், சிப்காட் தலைமை நிர்வாக அலுவலர் சிபிசக்ரவர்த்தி, சிப்காட் மேற்கு மண்டல செயற்பொறியாளர் பசுபதி, பர்கூர் சிப்காட் திட்ட அலுவலர் ஏ.சிந்து உள்ளிட்ட பலர் உள்ளனர்.
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    11 hrs ago
  • சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ரஸ்க் கம்பெனி தீ விபத்து ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம் காரைக்குடி செஞ்சை சண்முகா நகர் பகுதியில் வணிக பயன்பாட்டிற்கு என்று பதிவு செய்யாமல் வீட்டில் ரஸ்க் கம்பெனி செயல்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் ரஸ்க் கம்பெனியை பூட்டி சீல் வைத்தனர்.ஆனால் மாநகராட்சி சீல் வைத்தும் சட்ட விரோதமாக அதே தளத்தில், ரஸ்க் கம்பெனியில் பணிக்கு இருந்த வடமாநில இளைஞர்கள் சிலர் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் மாலை ரஸ்க் கம்பெனியில் இருந்து, அதிக (புகை வந்த நிலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது, இதில் ரஸ்க் தயாரிக்கும் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்தது.இதனை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். மேலும் ரஸ்க் கம்பெனி பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் எதற்காக வட மாநில இளைஞர்கள் தங்கி இருந்தார்கள் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    1
    சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ரஸ்க் கம்பெனி தீ விபத்து ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம்
காரைக்குடி செஞ்சை சண்முகா நகர் பகுதியில் வணிக பயன்பாட்டிற்கு என்று பதிவு செய்யாமல் வீட்டில் ரஸ்க் கம்பெனி செயல்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் ரஸ்க் கம்பெனியை பூட்டி சீல் வைத்தனர்.ஆனால் மாநகராட்சி சீல் வைத்தும் சட்ட விரோதமாக அதே தளத்தில்,  ரஸ்க் கம்பெனியில் பணிக்கு  இருந்த வடமாநில இளைஞர்கள் சிலர் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் மாலை ரஸ்க் கம்பெனியில் இருந்து, அதிக (புகை வந்த நிலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது, இதில் ரஸ்க் தயாரிக்கும் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்தது.இதனை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். மேலும் ரஸ்க் கம்பெனி பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் எதற்காக வட மாநில இளைஞர்கள் தங்கி இருந்தார்கள் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    1 hr ago
  • முள்ளங்கி விலை விவசாயிகள் கவலை தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முள்ளங்கி சாகுபடி தற்போது நடைபெற்று வருகிறது விளைச்சல் அதிகரிப்பின் காரணமாக முள்ளங்கி விலை குறைந்துள்ளது விவசாயிடமிருந்து ஒரு கிலோ முள்ளங்கி 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வெளி மார்கெட்டுகளில் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை ஆகிறது இதனால் விவசாயிகளுக்கு முள்ளங்கி பயிரிட்டு மற்றும் அறுவடை செய்த செய்த அடிப்படை ஆதார விலை கூட கிடைக்காத நிலையில் பலரும் கால்நடைகளுக்கு உணவாக முள்ளங்கிகளை அளித்து வருவது கவலை அளிக்கும் நிகழ்வாக உள்ளது. அரசு ஏதேனும் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
    1
    முள்ளங்கி விலை விவசாயிகள் கவலை
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முள்ளங்கி சாகுபடி தற்போது நடைபெற்று வருகிறது விளைச்சல் அதிகரிப்பின் காரணமாக முள்ளங்கி விலை குறைந்துள்ளது விவசாயிடமிருந்து ஒரு கிலோ முள்ளங்கி 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வெளி மார்கெட்டுகளில் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை ஆகிறது இதனால் விவசாயிகளுக்கு முள்ளங்கி பயிரிட்டு மற்றும் அறுவடை செய்த செய்த அடிப்படை ஆதார விலை கூட கிடைக்காத நிலையில் பலரும் கால்நடைகளுக்கு உணவாக முள்ளங்கிகளை அளித்து வருவது கவலை அளிக்கும் நிகழ்வாக உள்ளது. அரசு ஏதேனும் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்ட துவக்க விழா நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பபட்டதை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.01.2026) கலந்து கொண்டு, பார்வையிட்டு, தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தார். இத்திட்டத்தில் 1079 தன்னார்வலர்களை கொண்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,60,673 குடும்பங்களை சார்ந்த உறுப்பினர்களை நேரில் சந்தித்து  30 நாட்களில் நமது மாநிலத்தில் செயல்படுத்தப்படும் சுமார் 65 திட்டங்களின் செயல்பாடுகள்/பயன்கள் மற்றும் அத்திட்டங்களின் பின் மதிப்பீடுகள் தொடர்பாகவும், மேலும் குடும்ப உறுப்பினர்களின் முக்கிய 3 கனவுகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து 2030 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, மகளிர் திட்ட இயக்குநர் திருமதி.அ.லலிதா, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    1
    தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்ட துவக்க விழா நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பபட்டதை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.01.2026) கலந்து கொண்டு, பார்வையிட்டு, தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தார்.
இத்திட்டத்தில் 1079 தன்னார்வலர்களை கொண்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,60,673 குடும்பங்களை சார்ந்த உறுப்பினர்களை நேரில் சந்தித்து  30 நாட்களில் நமது மாநிலத்தில் செயல்படுத்தப்படும் சுமார் 65 திட்டங்களின் செயல்பாடுகள்/பயன்கள் மற்றும் அத்திட்டங்களின் பின் மதிப்பீடுகள் தொடர்பாகவும், மேலும் குடும்ப உறுப்பினர்களின் முக்கிய 3 கனவுகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து 2030 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, மகளிர் திட்ட இயக்குநர் திருமதி.அ.லலிதா, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    12 hrs ago
  • திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திமுக சாா்பில், வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் பளிங்கு கல்லால் ஆன முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 3 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் மருத்துவரணி மாநில துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.அம்பேத்குமாா், ஒ.ஜோதி, மு.பெ.கிரி, வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், நகரச் செயலா் எ.தயாளன், ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், சி.ஆா்.பெருமாள், கே.ஆா்.பழனி, எ.சுந்தரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா் #TamilNadu #chiefminister #DMK #minister #e.v.Velu #vandavasi #Tiruvannamalai #public #arumalur
    1
    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
திமுக சாா்பில், வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் பளிங்கு கல்லால் ஆன முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 3 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் மருத்துவரணி மாநில துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.அம்பேத்குமாா், ஒ.ஜோதி, மு.பெ.கிரி, வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், நகரச் செயலா் எ.தயாளன், ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், சி.ஆா்.பெருமாள், கே.ஆா்.பழனி, எ.சுந்தரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்
#TamilNadu #chiefminister #DMK #minister #e.v.Velu #vandavasi #Tiruvannamalai #public #arumalur
    user_Agarva manickam
    Agarva manickam
    தண்டராம்பேட்டை, திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    1 hr ago
  • ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா 09.01.2026 மதியம் 3 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் 235 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் விஜயன் தலைமை வகித்தார். பர்கூர் எம்எல்ஏ மதியழகன் 235 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் கதிரவன். மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ். மாவட்ட துணைச் செயலாளர் சந்திரன். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காந்தி,ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம் குமரேசன் ரஜினி செல்வம்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    1
    ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா 
09.01.2026 மதியம் 3 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் 235 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி  வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் விஜயன் தலைமை வகித்தார்.
பர்கூர் எம்எல்ஏ மதியழகன் 235 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் கதிரவன். மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ். மாவட்ட துணைச் செயலாளர் சந்திரன். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காந்தி,ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம் குமரேசன் ரஜினி செல்வம்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    user_Arunkumar k
    Arunkumar k
    Journalist கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.