Shuru
Apke Nagar Ki App…
அதிமுக மாவட்ட செயலாளர் சிதம்பரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் வண்டி கேட்டில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Chidambaram Repoter
அதிமுக மாவட்ட செயலாளர் சிதம்பரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் வண்டி கேட்டில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- புதுக்கோட்டை பெரியா நகரை சேர்ந்த சாய் திவ்யாஉலக சாதனை படைத்த சிறுமி புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் ராதா தம்பதிகளில் 6 வயது குழந்தை சாய் திவ்யா ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் உலக சாதனை திகழ்ந்தார்4
- தலைமலை பட்டிஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ சென்னிமலை ஆண்டவர் ஆலயத்தில் 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தலைமலைப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ சென்னிமலை ஆண்டவர் ஆலயத்தில் புதிதாக எழுந்து அருள்பாலிக்க உள்ள அருள்மிகு அஷ்டபுஜமங்கள வாராஹி அம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக முடிந்தது.அதனைத் தொடர்ந்து 48 வது நாள் மண்டல பூஜைகள் நடைபெற்று சுவாமிகள் யாகம் செய்து மண்டல பூஜைகள் நிறைவு விழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் கோவில் நிர்வாக சார்பில் அன்னதானம் பிரசாதம் வழங்கினர்1
- வெங்காடு கிராமத்தில் எழுந்தருளிய மகாராஜா கணபதி கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆராதனை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் நடைபெற்றது மு ஊராட்சி மன்ற தலைவர் பி. உலகநாதன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் கிராம நாட்டாமை பெரியோர்கள் குழந்தை செல்வங்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் வெங்காடு கிராமத்தில் எழுந்தருளிய மகாராஜா கணபதி கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆராதனை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் நடைபெற்றது மு ஊராட்சி மன்ற தலைவர் பி. உலகநாதன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் கிராம நாட்டாமை பெரியோர்கள் குழந்தை செல்வங்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர்1
- ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... ராசிபுரம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. ராசிபுரம், பட்டணம், வடுகம், நாமகிரிப்பேட்டை, குருசாமிபாளையம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து, ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழை காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது....1
- திருப்பத்தூரில் தவெக 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் தமிழக அமைச்சர் ரஞ்சித்குமார் பங்கேற்பு! திருப்பத்தூரில் தவெக 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் தமிழக அமைச்சர் ரஞ்சித்குமார் பங்கேற்பு! திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆதியூர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக அரசின் நூறு நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.திருப்பதி தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வனத்துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ரஞ்சித் குமார் கலந்து கொண்டு நூறு நாள் சாதனைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில்: ஒருவர் கட்சியை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த வரலாறு அது தமிழக வெற்றி கழகத்திற்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு தான் பொறுத்தும் என்றார், மேலும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் என்ன நினைத்தாரோ அதை தற்போது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார், அதனால் தான் அவரை எம்ஜிஆரின் வாரிசாக தமிழக மக்களும், நானும் பார்க்கிறேன், தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பதவியை நாம் தான் கைப்பற்றுவோம், மேலும் 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பேசினார், இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் முனிசாமி, நவீன்குமார், ஒன்றிய செயலாளர்கள் முருகன், பெரியசாமி, நிர்வாகிகள் மணிகண்டன், குமார், டாக்டர் வினோதினி, திருப்பதி, மனோகரன், சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.3
- வணிக சிலிண்டர் விலை உயர்வால் ராக்கெட் விறகு அடுப்புக்கு மாறும் கடை உரிமையாளர்கள் இராசிபுரம் : கேஸ் தட்டுப்பாடு மற்றும் வணிக சிலிண்டர் விலை உயர்வால் ராசிபுரம் பகுதியில் ராக்கெட் விறகு அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கேஸ் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வின் காரணமாக, மாற்று சமையல் முறைகளை பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நாடத் தொடங்கியுள்ளனர்.குறிப்பாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்வால் உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ராக்கெட் விறகு அடுப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். விறகு மூலம் இயங்கும் இந்த அடுப்பில், விறகை எரிப்பதுடன் மோட்டார் மூலம் காற்றை செலுத்தும் வகையில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண விறகு அடுப்பை காட்டிலும் தீ அதிக வீரியத்துடன் எரிவதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ராசிபுரம் பகுதியில் ராக்கெட் விறகு அடுப்புகளை தயாரித்து வரும் சங்கர் கணேஷ் கூறுகையில், வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக ராக்கெட் விறகு அடுப்புகளுக்கான உற்பத்தி அதிகரித்து வருவதாக தெரிவித்தார். மேலும், தற்போதைய கேஸ் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் அதிகளவில் தங்களை அணுகி வருவதாகவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு அளவுகளில் அடுப்புகளை தயாரித்து வருவதாகவும் கூறினார். ஒரு அடுப்பை முழுமையாக தயாரிக்க சுமார் 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும் என்றும், பயன்பாடு மற்றும் அளவைப் பொறுத்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். ராசிபுரத்தில் தயாரிக்கப்படும் இந்த அடுப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் ஆன்லைன் வர்த்தக தளங்கள் வாயிலாகவும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்காக அதிகளவில் ஆர்டர்கள் கிடைத்து வரும் நிலையில், கேஸ் விலை உயர்வுக்கு மாற்றாக குறைந்த செலவில் விறகை பயன்படுத்தி சமையல் செய்யக்கூடிய இந்த அடுப்பு மீதான வணிகர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.1
- முசிறியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தினம் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். முசிறியில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழா அதிமுகவினர். இனிப்பு வழங்கி கொண்டாட்டம். முசிறியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு கைகாட்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர் யோகநாதன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் நிகழ்வில். முன்னால் அமைச்சர் டிபி பூனாச்சி, முன்னால் எம்எல்ஏக்கள் மல்லிகா சின்னசாமி, செல்வராஜ், முசிறி ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் சுவிட் ராஜா என்கிறார் மாணிக்கம், எம் ஐ டி நடராஜன், மாவட்ட அவைத் தலைவர் ஈஞ்சூர் ராமு, மாவட்ட பொருளாளர் குட்டி என்கிற ஜெயசீலன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் பொன் சேகர், நகரப் பொருளாளர் ராஜேந்திரன், பேங்க் ராமசாமி, புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர் பாலகுமார், எம்ஜிஆர், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சாய் மோகன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக அணி பிரிவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.1
- தொட்டியம் காட்டு புதன் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு திருச்சி மாவட்டம் தொட்டியம் காட்டுப்புத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதி முழுவதும் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர் செல்வ விநாயகர் வலம்புரி விநாயகர் கணபதி உள்ளிட்ட பல்வேறு விதமான சிலைகள் வைத்து சிறப்பு பூஜை செய்தனர் சிலைகள் முழுவதும் தொட்டியம் காட்டுப்புத்தூர் போலீசார் சேதம் ஏதும் ஏற்படாத வண்ணம் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்1
- காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலை நேரத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்பு தீப தூப ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில் 25 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் பத்து ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான புதிய ரூபாய் நோட்டுகளால் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு விநாயகருக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தெற்கு பார்த்த விநாயகப் பெருமானை ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து மனமுருக பிரார்த்தனை செய்தனர்.. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.... காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலை நேரத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்பு தீப தூப ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில் 25 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் பத்து ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான புதிய ரூபாய் நோட்டுகளால் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு விநாயகருக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தெற்கு பார்த்த விநாயகப் பெருமானை ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து மனமுருக பிரார்த்தனை செய்தனர்.. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்....1